Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாரகி வருகிரார்' -நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.

கேள்வி: "பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?"

பதில் :- "இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.

மே 17ம் திகதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20ம் திகதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடாத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18ம் திகதி 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடாத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் புலிகள் தோற்று விட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. என்வேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!"

கேள்வி : "புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?"

பதில் :- "அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன். ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப்படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர் கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச்சாவை அடந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள். ஆனால் மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப்படையை திருப்பி அனுப்பினார் பிரபாகரன். 'புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது' என்று சென்னையில் வைத்து ராணுவத்தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கிய பகுதிகள் அத்தனையயும் பிடித்தார்கள். எனவே, இன்னலும் துன்பமும் புளிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை.

என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார் திரு.நெடுமாறன்.

நன்றி thedipaar.com

படங்களைப் பார்வையிட‌ http://www.thedipaar.com/news/news.php?id=10235

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களிடம் இருந்து துரோகிப்பட்டம் வாங்காமல் இருக்க இதுபோன்ற பேட்டிகள் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தார் பூமி ஆள்வார்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் இறுதிக்காலத்தில் 50000 மக்கள் கொல்லப்பட்டதும், 3 1/2 லட்சம் அகதிகளாக அவலப்படுவதும் மாயை என்றும் நினைத்துகொண்டு இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தார் பூமி ஆள்வார்

பொங்கினார் புக்கை தின்பார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கினார் புக்கை தின்பார் :lol:

கிண்டல் :(

தலைவர் முப்பத்தியைந்து வருட காலம் இடைவிடாது இயக்கத்தினரை வைத்துக் கடுமையாகப் போராடினார். ஆனால் அதன் பின் ஒருத்தரால் முப்பத்தியைந்து மணிநேரம் கூட எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றதே என்பதை நினைக்கும் போது தான் மனதில் மிகவும் பாரமாக இருக்கிறது. அவரால் ஒன்றிணைக்க முடிந்த எம் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பெரும் பகுதியில் ஒரு அரைவாசியையேனும் நம்மால் ஒன்றிணைக்க முடிகின்றதா என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது. தலைவர் மீண்டும் வருவாரா இல்லையா என்று வாதிடும் வேளையில் சிலமணி நேரங்களையாவது இனி என்ன செய்யப் போகின்றது எம் உலகத் தமிழ் சமுதாயம் என்ற எண்ணங்களிலாயினும் செலவிடுவது புத்திசாலித்தனமாகாதா?

கறுத்த கண்ணாடி போட்டார் சாருக்கான் மாதிரி இருப்பார்.

இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.