Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...

Featured Replies

:Dநான் சொன்ன பாதிப்பு, முன்பு ஏதாவது மேலதிகாரியினால் பாதிப்படைந்தீர்களோ என்பது பற்றியது?? :)

வசம்பு உங்கட குசும்பு தாங்க முடியலை!!!!!!

நான் படத்தில பாலியல் வல்லுறவு காட்சி வந்தாலே கண்ணை பொத்தி கள்ள கண்ணால பாக்கிறனான்..........................

என்னைப் போய் உப்புடி சொல்லிப் போட்டியளே!!!!!!!!

நல்ல வேளை என்ர மனிசி இதை படிக்கேலை....................

பேந்து என்ர மனிசி பாவப்பட்ட புரிசனோடை குடும்பம் நடத்துறன் எண்டு பாவம் கலைக்க கோயில் குளம் எண்டு வீட்டிலும் இருக்காமல்

திரிய அதால என்ர காசு எல்லாம் அழிய அதை வச்சு ஜயர் பணக்காரன் ஆக.......................இதெல்லாம் வேண்டாம்...................

எண்டு நான் புத்தியோட வாழ்க்கை நடத்துறன்!!!!!!!!

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும்!!!!!!!

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும்!!!!!!!

மிருகங்கள் பறவைகள் மனிதனை விட மிகவும் ஆரோக்கியமான பாலியல் நடத்தை கொண்டவை. அவையிடம் மனிதன் தான் இந்தக் கலையின் மென்மை.. பரிசுத்தம் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர.. மிருகங்கள் போல் வெறியோடு என்ற பத்தைக் காட்டிலும் மனிதனைப் போன்று வெறியோடு என்று பாவிப்பது நன்று என்று நினைக்கிறேன்.

விலங்குகளின் பாலியல் நடத்தை இயற்கையின் செல்வாக்குக்குள் நின்று கொள்கிறது. மனிதனின் பாலியல் நடத்தை என்பது இயற்கையையும் தாண்டி செயற்கைக்குள்ளும் நுழைந்து விடுவதுதான் வக்கிரத்தனமான வெறித்தனமான வெளிப்பாடுகளைக் காண்பிக்கத் தூண்டுகின்றன என்று நினைக்கிறேன். இயற்கை அசெளகரியமான ஒன்றை உயிரியில் தேர்வு செய்வதில்லை..! மனிதன் மட்டுமே அதை செய்து கொள்கிறான்..! இங்கும் கூட அசெளகரியம் என்றால் அதற்கு மனிதனின் இயற்கைக்கு மாறான மென்போக்கற்ற நடத்தை தான் காரணமே அன்றி விலங்குகளோ இயற்கையோ அல்ல..! :D

Edited by nedukkalapoovan

வசம்பு உங்கட குசும்பு தாங்க முடியலை !!!!!!

செக்ஸ் என்பது மிருக வெறியல்ல. மென்மையாய்

நிதானமாய் படிப்படியாய் மெல்லக் கடக்கும் யோகப் பயிற்சி போன்றது

தியானம் செய்வது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியது.

இங்கே உடலே கோவில் மனனே மந்திரம் என்பதைப் புரிந்து கொண்டால்

படுக்கை அறை கூட கற்பக்கிரகமாக மாறும் !!!!!!!

உங்க கருத்தை நன்கு புரிந்தவர் இந்தக் குருக்கள் மாத்திரமே. என்ன சற்று மாறுதலாக கற்பக்கிரகம் கூட படுக்கையறையாக மாறும் என்கின்றார்.

கருவறை காம குருக்கள்...

காஞ்சிபுரத்தின் மச்சேசப் பெருமான் கோயிலின் குருக்களான தேவநாதன், அந்த கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களோடு சல்லாபித்த மகாபாவக் காட்சிகளை தாங்கிய வீடியோவின் விவரங்கள் 30-09-2009 இதழ் ஜூ.வி-யில் வெளியானது. காஞ்சி மாநகரத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்த வீடியோ ஆதார கவர் ஸ்டோரி அது!

கட்டுரை தாங்கிய இதழ் கடைகளுக்கு வந்து, குறிப்பிட்ட குருக்களைத் தேடி போலீஸ் போவதற்கு முன்பே அவர் எஸ்கேப்! போலீஸும் தேடோ தேடென்று 'சந்தன' வீரப்பன் ரேஞ்சுக்கு வலைவீசிக் கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு அவர் வீட்டைச் சுற்றி கண்காணிப்புப் போட்டு குருக்கள் மாறுவேடத்தில் வந்து போகிறாரா என்று தொடர் வாட்சிங் வேறு!

வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி காவல்நிலைய கான்ஸ்டபிள் இடையில் ஒரு நாள் போய் தேவநாத குருக்களின் தந்தையிடம் விசாரிக்க... அவரின்தந்தை

டென்ஷனின் உச்சத்துக்குப் போய் ஏதோ காட்டமாகச் சொல்ல.. வாய்வழி விசாரணையே வாய்ச்சண்டை விவகார மாக மாறிப்போக... காவலர் பணியில் குறுக்கிட்டதாகச் சொல்லி குருக்களின் தந்தையை கைது செய்தது போலீஸ்.

சத்தமில்லாமல் கடந்த மாதமே முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தேவநாத குருக்கள் மனு செய்திருக்க... நவம்பர் 12-ந்தேதி அதன் மீதான விசாரணை நடந்தது. இந்துமத மக்களின்உணர்வுகளைப் புண்படுத்தியதான அடிப்படை குற்றச்சாட்டுடன் வேறு சில செக்ஷன்களிலும் குருக்களை கைது செய்ய தாங்கள் காத்திருப்பதாகப் போலீஸ் சொன்னது. குருக்களை கஸ்டடி எடுத்து விசாரிப்பதோடு, அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெறும் பெண்களிடமும் விசாரிக்க வேண்டும் என்றது போலீஸ்.

இதைத் தொடர்ந்து, தேவநாத குருக்களுக்கு முன்ஜாமீன் தர முடியாது என்று கோர்ட் மறுத்துவிட... குருக்களின் தலைமறைவு தொடர்கிறது.

நாம் விசாரித்த வரையில் சென்னை நங்கநல்லூரில் தேவநாத குருக்களின் சொந்தங்கள் ஏராளமாக வசிக்கிறார்களாம். இவர்கள்தான் குருக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காப்பாற்றி வருகிறார்களாம். குருக்களின் தொடர் தலைமறைவை அவர் பூஜை செய்த சில கோயில்களின் நிர்வாகிகளே விரும்புவதாகவும் காஞ்சிபுரத்தில் ஒரு பேச்சிருக்கிறது. காரணம், கருவறை காமக் களியாட்டங்களை அரங்கேற்றியது குருக்கள் மட்டுமல்ல... அவருடன் வேறு சிலரும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள் என்ற புதுத் தகவலையும் இப்போது சொல்கிறார்கள்.

இப்போதும் தினமும் இரவில் தன் சொந்த ஊரான பழையசீவரத்துக்கு விசிட் அடிக்கும் தேவநாத குருக்கள், அங்கு சிலரை சந்திப்பதாகவும் சொல்கிறார்கள்.

கொடுமைக்கு கிரீடம் வைக்கும் விவகாரம் என்னவென்றால்... குருக்களின் கருவறைக் காமக் களியாட்டக் காட்சிகள் ஏதோ ரிலீஸான புது சினிமா ரேஞ்சுக்கு சில விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளன. சில வியாபாரிகளால் பல காப்பி எடுக்கப்பட்டு... 'ஒரு காப்பி நூறு ரூபா!' என்று கூவிக்கூவி விற்கப்பட... காஞ்சிபுரம் போலீஸ் லத்தியைச் சுழற்றிக்கொண்டு சி.டி. வியாபாரிகளை துரத்த ஆரம்பித்திருப்பது தனிக்கதை!

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.