Jump to content

அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு கூட்டமைப்பினர் வரவேற்பு(!)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கிலும் கிழக்கிலும் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர். நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். கூட்டமைப்பினர் இப்போது சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் எம்பி சட்டத்தரணி சிறிகாந்தா, பாராளுமன்ற உறுப்பினரும் சனாதிபதியின் ஆலோசகருமான பசில்ராஜபக்ஸவையும் அமைச்சர் றிசாட் பதிவூதீனையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் பசிலும், றிசாட்டும் மிகவும் அர்ப்பணிப்புடன்(?) ஆற்றும் சேவைக்கு பாராட்டு மழை பொழிந்தார்! பாராட்டாமல் விட்டால் நாம் அரசியல் நாகரீகம் அற்றவர்களாகிவிடுவோம். வடக்கு கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உதவதயாராகவுள்ளது எனவும் சட்டத்தரணி காந்தா சபையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி:-

வவுனியா மன்னார் வீதி குருமண்காட்டு சந்தியிலிருந்து- நெளுக்குளம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செய்ய முடியாது உள்ளதாக வீதியினை பயன்படுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வீதி அண்மையில் சீர் செய்யப்பட்டது மீண்டும் பழுதடைந்து குன்றும் குழியுமாகவே காட்சி தருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இதுவாகும்.

Link to comment
Share on other sites

கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) .

தொடர்புபட்ட செய்தி:-

வவுனியா மன்னார் வீதி குருமண்காட்டு சந்தியிலிருந்து- நெளுக்குளம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செய்ய முடியாது உள்ளதாக வீதியினை பயன்படுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வீதி அண்மையில் சீர் செய்யப்பட்டது மீண்டும் பழுதடைந்து குன்றும் குழியுமாகவே காட்சி தருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இதுவாகும்.

மகிந்தா தமிழில் தமிழர்களுடன் கதைக்கும் பொழுது ,தமிழ் எம் பி மகிந்தாவை பாராட்டினா என்ன தப்புங்கோ?

பிழைக்க தெரிந்த ஈழத்தமிழன் வாழ்க

Link to comment
Share on other sites

மகிந்தா தமிழில் தமிழர்களுடன் கதைக்கும் பொழுது ,தமிழ் எம் பி மகிந்தாவை பாராட்டினா என்ன தப்புங்கோ?

பிழைக்க தெரிந்த ஈழத்தமிழன் வாழ்க

தமிழ் மக்களை மனிதகேடயமாக விடுதலை புலிகள் பயண்படுத்தினார்கள் - சிறீகாந்தா எம்பி.

தமிழ் மக்களை மனிதகேடயமாக விடுதலை புலிகள் பயண்படுத்திய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை விடுதலை செய்யும்படி கேட்கமால் அவர்களின் அழிவுக்கு காரணமாய் இருந்துள்ளது என சுட்டிகாட்டியபோது அது ஒரு நியாயமான குற்றசாட்டு என கூறிய அவர்

யுத்தம் நிறுத்தபட்டால் மட்டுமே மக்களை அழிவில் இருந்து காபற்றமுடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு திடமாக நம்பியதாகவும் குறிப்பிட்ட அவர் மக்களை விடுதலை செய்யும்படி விடுதலை புலிகளிடம் தலைகீழகாக நின்று கேட்டிருந்தாலும் கூட நிச்சயமாக புலிகள் அவர்களை விடுதலை செய்துயிருக்கமாட்டார்கள் ஏன்னெனில் பொதுமக்கள் அவர்களுக்கு கேடயமாக தேவைபட்டார்கள் பொதுமக்களை அவர்கள் வெளியே விட்டு விட்டு புலிகள் யுத்தம் செய்வார்கள் என நான் நாங்கள் கற்பனை செய்யும் அளவிற்க்கு முட்டாள்கள் அல்;ல எனவும் கூறினார். அத்தோடு எங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள் எனவும் பட்டம் சூட்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார.; அதற்காகவே நடைமுறையில் சாத்தியமான போர்நிறுத்தம் ஒன்றைகேட்தாக தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
    • ஸ்கொட்லாந் க‌டிமையாக‌ போராடின‌வை சூப்ப‌ர்8க்கு போக‌ ஆனால் அது ந‌ட‌க்க‌ல‌   இங்லாந் சூப்ப‌ர்8க்கு போய் பெரிசா சாதிக்க‌ போவ‌து கிடையாது.................................
    • 10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.