Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவின் போர்க் குற்றங்கள் - அயர்லாந்தில் விசாரணை தொடங்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விசாரணைகளின் போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை குழுக்கள் மற்றும் சாட்சிகள் சமூகமளித்து தமது கருத்துக்களை கூறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரசினாலும், அதன் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் நடைபெறவுள்ளது.

ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் சிறீலங்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை சேர்ந்த மனித உரிமை அமைப்புக்கள், சட்டவியல் அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் போன்றவர்கள் சட்சியமளிக்க முடியும்.

இந்த விசாரணைகளின் முதல்கட்ட முடிவுகள் ஜனவரி 16 ஆம் நாள் வெளியிடப்படும். விசாரணைகளில் பங்குபற்றும் பொருட்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜின்டர் சாச்சர் டப்பிளின் செல்லவுள்ளார்.

நோர்வேயின் அமைதி முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன? என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்கள் எம்முன் சாட்சியமளிக்க முடியும் எனவும் ராஜின்டர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணகளை 11 பேர் கொண்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடித்தான் 6 மாதத்துக்கு முன்னம் போர்க்குற்றத்துக்காக ஹேக்கில வழக்கு பதிய போறதா அறிக்க விட்டாங்க, ஒரு மாதத்துக்கு முன்னமும் சரத்து அமெரிக்கா போயிருந்தபோதும் அமெரிக்கால குற்ற விசாரணை எண்டாங்க, இப்ப அயர்லாந்தில விசாரிக்கப்போறாங்களாம். போன மாதம் சரத்த விசாரிக்க சொன்னவங்கதான் இப்ப சரத்துக்கு வோட்டுப்போடவேணும் எண்டு அறிக்கை விடுறாங்க. அந்தளவுக்கு இவங்களுக்கு மறதி கூட, நாளைக்கு மகிந்தவுக்க வோட்டுப்போடு எண்டு அறிக்க விட்டாலும் விடலாம்.....டீல் எப்பிடி எண்டதிலதானே கொள்கை வகுக்கபப்படுது. :lol::wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா புரிந்த போர்குற்றங்களில் இந்தியாவுக்கும் பல வழிகளில் பங்குண்டு. எனவே இந்திய நீதிபதி ஒருவர் விசாரணைகளில் பங்கேற்பது அல்லது நீதிபதிகளின் குழுவில் அங்கத்துவம் வகிப்பது தமிழர்களால் ஏற்கத்தகுந்த விடயமல்ல. விசாரணைகளில் பங்குபற்றுவதற்கு நீதிபதியொருவரை அனுப்புவதால் இந்தியா தனக்குத்தானே வெள்ளையடித்துக்கொள்ள முயற்சி செய்கிறது. எனவே நிகழவிருக்கும் இந்த விசாரணைகளில் ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜின்டர் சாச்சரின் பங்கென்ன என்பது சர்ச்சைக்குரிய விடயமாக அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வுபெற்ற இந்திய உயர்நீதிமன்ற நீதியாளரை இந்த விசாரணையில் அனுமதிக்கக்கூடாது. இப்டித்தான் சதீஸ் நமபியார் எனும் மலையாள நாதாரியை இலங்கைக்கு அனுப்ப அந்த நாய் ஐநாவில் அறிக்கை கொடுக்கமுன்பு இந்தியாவில் போய் எப்படி அறிக்கை கொடுப்பது என வடக்கத்தையானைக் கேட்டுக்கொண்டு போய் அவன் கூறியதுபோலவே அறிக்கை வெளியிட்டது. இவனை இந்த விசாரணையில் பங்குபற்றாமல் செய்வதற்கு ஒரு எதிர்ப்பியக்கமாகவும் செயற்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இந்தியா இருக்கும் வரை இலங்கைக்கு பயமில்லை

இப்பிடித்தான் 6 மாதத்துக்கு முன்னம் போர்க்குற்றத்துக்காக ஹேக்கில வழக்கு பதிய போறதா அறிக்க விட்டாங்க, ஒரு மாதத்துக்கு முன்னமும் சரத்து அமெரிக்கா போயிருந்தபோதும் அமெரிக்கால குற்ற விசாரணை எண்டாங்க, இப்ப அயர்லாந்தில விசாரிக்கப்போறாங்களாம். போன மாதம் சரத்த விசாரிக்க சொன்னவங்கதான் இப்ப சரத்துக்கு வோட்டுப்போடவேணும் எண்டு அறிக்கை விடுறாங்க. அந்தளவுக்கு இவங்களுக்கு மறதி கூட, நாளைக்கு மகிந்தவுக்க வோட்டுப்போடு எண்டு அறிக்க விட்டாலும் விடலாம்.....டீல் எப்பிடி எண்டதிலதானே கொள்கை வகுக்கபப்படுது. :lol::wub:

உன்னைப்போல் அறிவாளிகள் இல்லாததால் தான் இந்த நிலமை

இதனை நடாத்துபவர்கள் யார்? எந்த அமைப்பு?

அரசோ அல்லது சர்வதேச அமைப்போ சாராத விசாரணைகள் எந்தளவு நம்பகத்தன்மையை கொண்டிருக்கும்? இந்த விசாரணை சர்வதேச அரசியலிலும் இலங்கையின் சர்வதேசத்துடனான உறவுகளிலும் எந்தளவு செல்வாக்கை செலுத்தக்கூடியதாக இருக்கும்? உற்று நோக்கும் போது, இது தனிப்பட்ட, சில குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்ட விசாரணை போல இருக்கின்றது.

மேலதிக விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.