Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்காத்திரமான முடிவெடுப்போம் - யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். சிறீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாறிவரும் உலகில் அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.

கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் எமக்கு விமோசனம் பலர் ஒதுங்கி நின்றோம். ஆனால் உலக வல்லாதிக்கங்களும் பிராந்திய வல்லாதிக்கங்களும் தமது சுயலாப பொருளாதார, அரசியல், இராணுவ நலன் கருதியே அனைத்தையும் நடத்தி முடித்தனர். இன்றும் தமது நலன் கருதியே முட்டி மோதுகின்றனர்.

மறுபுறம் பெரும்பான்மைக் கட்சிகள் தமது இருப்புக்களை உறுதிப்படுத்தவும் தமது சுயநலன் கருதியும் இன்றைய நிலையில் இலங்கையின் இராணுவ பொருளாதார மையங்கள் மேல் உலகநாடுகள் கொண்டுள்ள அக்கறையையும் அதன் மூலம் உலக நாடுகளிடம் எழுந்துள்ள மறைமுக மோதல்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அணிதிரண்டு நிற்கின்றனர்.

எவ்வாறாயினும் இக்கட்சிகள் மிகப் பெரிய உள்நோக்கங்களுடனும் நீண்ட கால பார்வையுடனும் தமது நடவடிக்கைகளை திடமாகவே மேற்கொள்கின்றனர். அவை சிறுபான்மையினருக்கு எதை தந்திடப் போகின்றன என்பதை இதுவரை எதை எமக்கு தந்தார்கள் என்பதை வைத்து மக்கள் மதிப்பிடட்டும்.

ஆனால் எம் அன்புக்குரிய மக்களே! இன்றைய நிலையில் எமது தமிழ்ச் சகத்தின் எதிர்கால நிலையை தீர்மானிக்கும் சக்தியாக மக்களாகிய நாம் காத்திரமான முடிவெடுக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் மீண்டும் நாம் பிறரால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக இல்லாமல் எமது விதியை நாமே நிர்ணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உ,ய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உ,ய வகையில் நாம் இனங்காண வேண்டும்.

இவர்களில் பலர் பொதுநலன் சார்ந்து நிகழ்கால எதிர்கால நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது. தமது இருப்பை பேணுவதை மட்டுமே குறியாகக் கொண்டு மக்களை மீண்டும் துன்பத்தில் தள்ள முயல்கின்றனர்.

எமது புலம்பெயர் உறவுகள் பல தமிழர் பிரதேசத்தின் நடைமுறை யதார்த்தம் புரியாது பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்களை செப்பனிட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.

ஏனெனில் எமது பிரதேசத்தின் மீள்கட்டுமானம், பொருளாதாரம், அபிவிருத்தி சார்ந்த முதலீடுகள் என்பன புலம்பெயர் உறவுகளின் நிதி மூலங்களாலேயே கட்டியெழுப்பப்பட வேண்டி உள்ளதோடு எமது நியாயமான அரசியல் அபிலாஷைகளை எமது இனத்திற்கேயான தனித்துவத்தோடு பெற்றெடுக்க அவர்களின் குரல் இன்றியமையாதுள்ளது.

இருவரில் ஒருவரே வெற்றிபெறுவர் என்னும் நிலையில் உள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இன்று வரை முடிவெடுக்காத நிலையில் பல அணிகளாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துநிற்கின்றது. தமிழ் மக்களை கடந்தகாலத்தைப் போல் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனக் கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதும் அல்ல.

தமிழ் மக்களுக்குரிய பேரம் பேசலை தக்கவைக்க உகந்ததுமல்ல. உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறான விளைவுகளை பெற்றுத் தரும் என்பதை கடந்த காலம் எமக்கு கற்பித்து விட்டது. மாறிவரும் போக்கினை உணராது வாய்ப்புக்களை தவற விட்டால் எமது இனம் இருள்சூழ்ந்த எதிர்காலத்தையே எதிர்கொள்ள நேரிடும்.

அழிவில் உருக்குலைந்த பல நாடுகள் இன்று உலகிலேயே இராணுவ, பொருளாதார வல்லாதிக்க நாடுகளாக மாறிவிட்டன.

அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும். அமெரிக்காவால் உருக்குலைந்த ஜப்பான் அமெரிக்காவோடு இணைந்து செயற்பட்டு இன்று அமெரிக்காவை விட முன்னேறிச் சென்றுவிட்டது.

ஆனாலும் இன்றுவரை ஜப்பான் தனது நாட்டின் தனித்துவத்தை இழக்கவில்லை.

வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு எமது உரிமைகளை பெற்றெடுக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும். மாறாக தென்னிலங்கை, எம் மக்களை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்கு வழி சமைக்கும் வகையில் எமது அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாது.

அவ்வாறு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்கள் உரிய தீர்ப்பளிப்பர். தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்கள் நிச்சயமாக தமிழ்க் கட்சிகளின் செயல் வீரத்திற்கு முக்கியம் கொடுப்பதாய் அமையுமே தவிர வாய் வீரங்களுக்கு முக்கியம் கொடுப்பதாய் அமையாது.

எனவே முயற்சியை நிறுத்தாத வரையில் தோல்வி முடிவானதல்ல என்பதற்கிணங்க எமது சமூகத்திற்கு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் தொலைநோக்குப் பார்வையுள்ள தீர்மானங்களை எடுத்து ஒன்றிணைந்து செயற்படுவோம்.

அதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளது என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக் கொள்கின்றது.

மூலம் : http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/4829-jaffna-student-assosiation-election-decesion

Edited by yarlpriya
செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வாக்குப் போடவேண்டும் என்று தெளிவாகச் சொல்லவில்லையே???????????????

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வாக்குப் போடவேண்டும் என்று தெளிவாகச் சொல்லவில்லையே???????????????

உண்மை புலவரவர்களே!

என்ன காத்திரமான முடிவை எடுக்க வேண்டுமென்பதையோ, யாருக்குப் போடவேண்டுமென்பதையோ தெளிவாகக் குறிப்பிடவில்லை. எல்லோரும் குழப்பத்திலிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் சரியான பாதையை வகுக்கவும் மக்களை இலக்கு நோக்கி நகர்த்தவும் மாணவர்களால்தான் முடியும். இன்று அனைத்துலகினது கவனத்தைப் பெற்றுள்ள எமது உரிமைப்போரானது முக்கியமானதோர் கட்டத்திலே மதிப்பிட முடியாத ஈகங்களையும், சொல்லொனா துயரங்களையும் சுமந்தவாறு நிற்கிறது. இந்த நிலைக்குக் காரணமாணவர்களே தேர்தல் களத்திலும் நிற்கிறார்கள். அதனைத் தமிழினத்தினது துயரமென்று சொல்வதா? அல்லது விதியென்று இருப்பதா? எனவே இது தொடர்பாக உரியவர்கள் இன்றைய சூழலமைவுக்கு இசைவாக எமது இலக்கினை அடையும் விதமாகக் குறைந்தபட்சமாக இணங்கிவரும் தலைமை எது என்பதை, அவர்களோடு நடைபெற்ற பேச்சுக்களை வெளியிட்டு மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்துதல் வேண்டும். அத்தோடு அதிலிருந்து எப்படி அடுத்தகட்டத்துள் செல்லலாம் என்பது தொடர்பான திட்டங்களையும் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் இவர்களைத் தமிழினம் ஒதுக்கிவிடும் நிலையே ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வாக்குப் போடவேண்டும் என்று தெளிவாகச் சொல்லவில்லையே???????????????

முடிவு இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. முடிவு எடுப்போம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.