Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் கேட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைக்கிறீர்களா?சம்பந்தன் மகிந்தவிடம் கேள்வி!

Featured Replies

தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக எங்களை ஒதுக்கிவிட்டு டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் கேட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எமது மக்களுக்கு விமோசனம் வழங்குவீர்கள் என்று நாங்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்று அரச தலைவர் மகிந்தவுடனான சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் காட்டமாக கேட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார்.

ஜனாதிபதி உட்பட்ட அரசுத் தரப்புடன் நேற்று முன்தினம் இரவு அவர் நடத்திய பேச்சுகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என் றும், எனினும் அதே நேரம் நேற்றுக்காலையில் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் நடத்திய பேச்சுகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்தன என்றும் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுத் தரப்பு, எதிர்த்தரப்பு ஆகிய இரண்டு பக்கங்களுடனும் தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்து பேச்சுகளை நடத்தி வருகின்றது.

நேற்று முன்தினம் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுத் தரப்பினருடன் இரா. சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினர். அரசுத் தரப்பில் ஜனாதிபதியுடன் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ எம்.பி.,அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் பங்குபற்றினர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அரசுத் தரப்பினால் முறைப்படி முன்வைக்கப்பட்டது. எனினும், இவ்வளவு காலமும் கடந்த நான்கு வருடங்களும் அரசுத் தரப்பினால் தமிழ்க் கூட்டமைப்பு எப்படி நடத்தப்பட்டது என்பதை ஆரம்பத்திலேயே சம்பந்தன் எம்.பி., அரசுத் தரப்புக்கு உறைக்கும் விதத்தில் உரைத்தார் எனக் கூறப்படுகின்றது.

""இந்த நான்கு ஆண்டுகளாக ஜனாதிபதியைப் பல தடவைகள் சந்தித்துப் பேசினோம். ஆனால், எங்களை (கூட்டமைப்பை) தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மதித்துச் செயற்படக் கூட அரசு தயாராக இருக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவையும், கருணாவையும் வைத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினையைக் கையாளலாம் என்று கருதித்தான் இதுவரை நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பை முறியடித்த அரசு

வடக்கு கிழக்குப் பிரிப்பு விடயத்தை இந்த அரசே முழு அளவில் முன்னெடுத்தது. அதன் மூலம் அரசியல் தீர்வுக்கான அடிப்படைச் சூழலையே நீங்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். இணைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் முயற்சிக்கு உதவ ஐ.தே.கட்சி தயாராக இருந்தது. ஆனால், அந்த வசதியான வாய்ப்பை நீங்கள்தான் வேண்டுமென்றே பயன்படுத்தாமல் முறியடித்தீர்கள். எங்கள் மக்கள் எங்கள் மீது அதிகம் நம்பிக்கை வைத்துப் பார்த்திருக்கின்றார்கள். அவர்களை எந்த அழுத்தம் கருதியும் நாம் கைவிட மாட்டோம்.

"நாங்கள் அடுத்த தடவை ஆட்சிக்கு வந்ததும் உங்களோடு பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று நீங்கள் இன்று கூறும் உறுதியுரையை மட்டும் நம்பி நாம் திருப்திப்படமுடியாது. இத்தகைய பல உறுதியுரைகளைத் தென்னிலங்கையிடம் பெற்று ஏமாந்து போனமையே எமது வரலாறாக உள்ளது.'' இப்படி இரா. சம்பந்தன் அரசுத் தரப்பினரிடம் கூறினார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

"அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் நாம் மீள ஆட்சிக்கு வந்து உங்களுடன்தான் பேசித் தீர்வு காண்போம் என்ற உறுதியுரையை மட்டுமே அரசு தந்தது. அதற்கு அப்பால் தீர்வுக்கான அடிப்படையைக் கூட அவர்கள் கோடி காட்டவில்லை. அதனால் இந்தப் பேச்சுகளில் முன்னேற்றமோ, திருப்தியோ இல்லை'' என இரா. சம்பந்தர் சார்பில் பேசவல்ல கூட்டமைப்புப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். எனினும், தமிழ்மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளிலும் தாராளமாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன என்றும் அப்பிரதிநிதி கூறினார்.

முன்னேற்றகரமான பதில் இல்லை

"வலி வடக்கு மக்கள், முஸ்லிம் மக்கள் உட்பட இடம்பெயர்ந்த அனைத்து மக்கள் தொடர்பாகவும் மீள்குடியமர்வு நடவடிக்கை விரைந்து எடுக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தினோம். இதுவரை மீள்குடியமர்வு விடயம் தொடர்பாக அரசு எடுத்தவை என்று கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்குத் திருப்தியில்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம். அந்த மக்களுக்கு உரிய வாழ்வாதாரங்கள், சமூகக் கட்டமைப்புகள், குடியிருப்பு வீடுகள், வேலைவாய்ப்புகள், வருமான ஆதாரங்கள் போன்றவை வழங்கப்படாமல் அவர்களை வெறுமனே முகாம்களுக்கு இடம் மாற்றியோ அல்லது உறவினர் வீடுகளுக்கு மாற்றியோ விடுவதில் அர்த்தமில்லை என்பதைக் கூறினோம்.

வடக்கு கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களை விலக்கி மக்களைமீளக்குடியமர்த்தல், இராணுவ செயற்பாடுகளைக் குறைத்து மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதித்தல், தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் எம்.பி. மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ஆகியோரை விடுவித்தல் ஆகியவை குறித்தெல்லாம் அரசுத் தரப்பினரிடம் வலியுறுத்திப் பேசினோம். உடனடிப் பிரச்சினைகள் குறித்து எமது தலைவர்கள் இருவருடனும் உரையாடிய அரசுத் தரப்பினர், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தில் ஆக்கபூர்வமான முன்னேற்றகரமான பதில் எதையுமே தரவேயில்லை.'' என்றார் அவர்.

ரணிலுடன் நடந்த சந்திப்பில் ஆக்கபூர்வமான யோசனைகள்

இதேசமயம், நேற்றுக் காலை கொழும்பு, கேம்பிரிட்ஜ் டெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் அவரை இரா. சம்பந்தன் எம்.பி. தனியாகச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினார்.

"இந்தப் பேச்சு முன்னேற்றகரமாக இருந்தது. சாதகமான முறையில் பாதகமற்ற வகையில் அது அமைந்தது. பேச்சுக்களில் முற்போக்கான பல விடயங்கள் இடம்பெற்றன. தமிழர் தாயக ஐக்கியம் தொடக்கம் அரசியல் தீர்வு வரை பல விடயங்களில் ஆக்கபூர்வமான யோசனைகள் ஆராயப்பட்டுள்ளன.

"இந்தச் சந்திப்பை அடுத்து நான் இன்று (வெள்ளியன்று) திருகோணமலை செல்கிறேன். திரும்பி வந்து ஒருதடவை ஜெனரல் சரத் பொன்சேகாவை நான் சந்திக்க வேண்டியிருக்கும். அதன் பின்னரே ஜனவரி 4 ஆம் திகதி எமது நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து ஆராய்வோம்.'' என்று சம்பந்தர் நேற்றுத் தெரிவித்தார்.

http://www.eelanationnews.com/sri-lanka-news/106-colombo/1083-sampanthan-mahinda-meeting.html

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்வதற்கு ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டிய தேவையில்லை.அழைப்புவந்தபொழுதே இந்தக் கேள்விகளைக் கேட்டு பதில் கடிதம் அனுப்பியிருக்கலாம்.முடிவு எடுப்பதில் உள்ள தடுமாற்றமே அவரைச் சந்திக்கச் செய்துள்ளது.சரத்துடன் பேசுவதற்காக இந்தச் சந்திப்பென்று சொன்னாலும் வார்த்தைகளில் வலிமையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில ஒரு பழக்கம் இருக்குது பாருங்கோ, வேலிக்குள்ளாலை பக்கத்து வீட்டுக்காரருக்கு உறைக்கிறமாதிரி சத்தமாகப் பேசிச் சண்டை போடலாம், ஆனால் நேருக்கு நேர எங்கட பெண்டுகள் போய்ப் பேசிவிட்டு வந்தால்தான் ஒரு தில்லாக இருக்கும் அது போல்தான் இதுவும்.

இதில் ஒரு விடயம் தெளிவாகிறது அதாவது இரண்டு தரப்புமே தாங்கள் வெற்றி பெறவேண்டுமாயின் வடகிழக்கு தமிழ் வாக்குகள் மிக முக்கியம் என்பதையும் அதை தமிழர்கூட்டணியால் தான் பெறமுடியும் என்பதையும் வெளிப்படையகவே ஏற்றுக்கொள்கிரார்கள். த.வீ. கூ வை புலிகள் என்று கூறியவர்கள் அவர்களின் காலைப்பிடிப்பது என்பது !!!!!!!!!!!!?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயம் தெளிவாகிறது அதாவது இரண்டு தரப்புமே தாங்கள் வெற்றி பெறவேண்டுமாயின் வடகிழக்கு தமிழ் வாக்குகள் மிக முக்கியம் என்பதையும் அதை தமிழர்கூட்டணியால் தான் பெறமுடியும் என்பதையும் வெளிப்படையகவே ஏற்றுக்கொள்கிரார்கள். த.வீ. கூ வை புலிகள் என்று கூறியவர்கள் அவர்களின் காலைப்பிடிப்பது என்பது !!!!!!!!!!!!?

இது உலகத்துக்கே தெரிந்ததுதான்

ஆனால் தருவதற்குத்தான் சிங்களவனிடம் எதுவுமில்லை

அது புரியும்போது மீண்டும்.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.