Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிலாபம் நகரைவிட்டு தமிழர்களை வெளியேறும்படி காவல்துறை திடீர் உத்தரவு: பதற்றம், குழப்பம்

Featured Replies

சிறிலங்கா அரசுத் தலைவர் பதவிக்கான ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கான பரப்புரைக் கூட்டம் ஒன்று சிலாபம் நகரில் நேற்று நடைபெறவிருந்த நிலையில், நகரிலுள்ள தமிழர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டதால் அங்கு பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது.

சிலாபம் நகரிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற காவல்துறை அதிகாரிகள் சிலரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்ததையடுத்து அங்கு பெரும் அச்சநிலை உருவாகியது.

அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் ஒன்று நகரில் நடைபெறவிருப்பதால் தமிழர்கள் அனைவரும் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டும் என காவல்துறையினர் தமிழர்களுக்கு உத்தரவிட்டனர்.

சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் தமிழர்களும் நகரை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

வெளியேறுபவர்கள் அரசுத் தலைவர் கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டம் முடிவடைந்து அவர் அங்கிருந்து பாதுகாப்பாகச் சென்ற பின்னர், அதாவது இரவு 6.00 மணிக்குப் பின்பாக வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாகவே இதனையிட்டு சிலாபம் காவல்துறையின் கவனத்துக்கும், அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர். முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இது தொடர்பாக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசின் மேலிட அறிவுறுத்தலையடுத்து சிலாபம் காவல்துறை ஆணையாளர் சி.ஈ.வெடிசிங்க நேற்று நண்பகலளவில் அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். காவல்துறையினரின் உத்தரவை புறக்கணித்து தமிழர்கள் தொடர்ந்தும் நகரிலேயே இருக்கலாம் என அவர் அறிவித்தார்.

தமிழர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டது யார் என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சிலாபம் நகருக்கு வருகைதரவிருப்பதால் அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறான உத்தரவை காவல்துறை பிறப்பித்ததாகவும், இருந்தபோதிலும் இது ஒரு அரசியல் விவகாரமாக்கப்படலாம் என்பதால் அந்த உத்தரவு பின்னர் திரும்ப பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த உத்தரவு பின்னர் திரும்ப பெறப்பட்டபோதிலும், சிலாபம் நகரிலுள்ள தமிழர்கள் பலர் நேற்று காலையே தமது வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் மூடிவிட்டு நகரிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்கள்.

இவ்வாறு வெளியேறி வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பலரும் இன்று செவ்வாய்கிழமை காலையே தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியதாக சிலாபம் வாசிகள் தெரிவித்தனர்.

அரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதலே சிலாபம் நகரின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. சிறப்புக் காவல்துறைக் குழுக்கள் சிலாபத்துக்கு அனுப்பப்பட்டு சோதனை நடவடிக்கைகளும், வீதிச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. சிலாபம் நகருக்குள் நுளைந்த வாகனங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

சிலாபம் நகரில் அச்சம் காரணமாக நேற்றைய தினம் தமிழர்கள் எவரும் வீதிக்கு வராத அதேவேளையில், தமிழர்களுடைய வர்த்தக நிலையங்களும் முற்றாக மூடப்பட்டிருந்தன.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அரசுத் தலைவர் பங்குகொண்ட பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

http://www.puthinappalakai.com/view.php?20100105100277

  • கருத்துக்கள உறவுகள்

அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் ஒன்று நகரில் நடைபெறவிருப்பதால் தமிழர்கள் அனைவரும் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டும் என காவல்துறையினர் தமிழர்களுக்கு உத்தரவிட்டனர்.

மகிந்தவுக்கு வாக்குப்போட நினைத்த தமிழர்களும், இதற்குப் பின் மனம் மாறி சரத்துக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பலாம்.

யாழ் நூலகத்தை எரிப்பதில் முக்கிய பங்கு ஆற்றி, தமிழர்கள் அனைவரையும் தனி நாட்டு கோரிக்கைக்கு முழு ஆதரவாக மாற்றியது இந்த சிங்கள போலீஸ் ரவுடிகள் தான் என்பதை தமிழர் மறந்துவிடவில்லை.

அண்மையில் பம்பலபிட்டியில் ஒரு தமிழனை சிங்கள பௌத்த கோட்பாடுகளுக்கு அமைய அடித்து கடலில் மூழ்கடித்து கொன்றதும் இந்த சிங்கள போலீஸ் ரவுடிகள் தான் என்பதை தமிழர் மறந்துவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகத்தை எரிப்பதில் முக்கிய பங்கு ஆற்றி, தமிழர்கள் அனைவரையும் தனி நாட்டு கோரிக்கைக்கு முழு ஆதரவாக மாற்றியது இந்த சிங்கள போலீஸ் ரவுடிகள் தான் என்பதை தமிழர் மறந்துவிடவில்லை.

அண்மையில் பம்பலபிட்டியில் ஒரு தமிழனை சிங்கள பௌத்த கோட்பாடுகளுக்கு அமைய அடித்து கடலில் மூழ்கடித்து கொன்றதும் இந்த சிங்கள போலீஸ் ரவுடிகள் தான் என்பதை தமிழர் மறந்துவிடவில்லை.

1976 புத்தளத்தில் படுகொலை. 2010 சிலாபம் நகரில் வெளியேற உத்தரவு. வெளியேறாவிடில் கொலைதானே! வரலாறும் நடைமுறையும் தொடர்கிறது.

தமிழனோ மதத்தையும் கட்சியையும் கைத்தடியாக்கியே தமிழரின் அழிவுக்கு வித்திடுகிறான். இவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு எப்போது தமிழானிகின்றானோ அப்போதே இந்த அவமதிப்புகளும், அவலங்களும் விடைபெறும். அதுவரை காட்சிகள் மாறாது. அவமானத்துடன் கூனிக் குறுகி வாழ்வதுதான் விதியாகும். நிமிரவேண்டும்! அனைத்தையும் கடந்து..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.