Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம்

Featured Replies

சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம்

வீரகேசரி இணையம் 1/12/2010 3:50:45 PM - தங்கல்லை, உபுன்கம தலுன்ன பகுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹராமவில் நடைபெறவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீவிரமாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவினர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நால்வர் தங்கல்லை வைத்தியசாலையிலும் மூவர் மாத்தறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதான பெண் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=19865

... இறந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!! .... தொடரட்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாக்கு, விழுகிற வோட்டிலை ஒண்டு குறைஞ்சு போச்சுது.

நீதியான தேர்தல் நடப்பது குறித்து அமெரிக்கா மிகக் கரிசனை கொண்டுள்ளது - அந்நாட்டுத் தூதுவர் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நீதியா னதாகவும், சுதந்திரமானதாகவும், வன்முறைகள் அற்றதாகவும் அமையவேண்டும் என்பது குறித்துத்தான் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இடம்பெயர்ந்த மக்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளமை குறித்து ஏமாற்றமும் வெளியிட்டுள்ளது. "த சண்டே ரைம்ஸ்" வார இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புட்டெனிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுடன் அமெரிக்கா மீண்டும் நேர்காணலில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ மறுத்துள்ள அவர், மோதலின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடைநடுவில் சிக்கியுள்ளவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இலங்கை அரசு யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மனிதஉரிமை மீறல் விடயங்களுக்குத் தீர்வு காணப்படும்வரை இலங்கை இராணு வத்திற்கு அமெரிக்கா முழுமையான ஒத்து ழைப்பை வழங்க முடியாது எனக் குறிப்பிட் டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கை, அமெரிக்காவின் நீண்டகால சினேகிதன். எனினும் இருதரப்பு மத்தியிலும் கரிசனைகளும் பதற்றமும் காணப்படு கின்றன எனச் சொல்வதே நேர்மையானது. எனினும் இது இயல்பானது. எமது முக்கிய கரிசனைக்குரிய சில விட யங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோர் விடுவிக்கப்படுதல், மீள்குடியேற்றம், முகாமில் உள்ளவர்க ளின் நடமாட்டச் சுதந்திரம் போன்ற விட யங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தற்போது வர்த்தகம், புனர்நிர்மாணம் குறித்துக் கவனம் செலுத் தும் நிலையில் உள்ளோம். என்றாலும், எமது முக்கிய கவனம் தற்போது எதிர்வரும் தேர்தல் தொடர்பாகவே உள்ளது. அமெரிக்காவின் விருப்பத்திற் குரிய வேட்பாளர் என எவரும் இல்லை. எனினும், தேர்தல் நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும், வன்முறைகள் அற் றதாகவும் அமையவேண்டும் என்பது குறித்துக் கவலை கொண்டுள்ளோம். "கட் அவுட்"கள் தொடர்பாக சில சம்ப வங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் ஆணையாளர் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். சில அகற்றப்பட்டுள்ளன. பிரசார அலுவலகங்கள் மீது தாக்கு தல்கள் இடம்பெற்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சுறுத்தல் மற்றும் வன்முறை இல்லாமல் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தவேண்டும்.

அமெரிக்கா யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றி ருக்கலாம் என்பது குறித்து தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றது. பெருமளவில் இலங்கையர்களும் இது குறித்து அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை ஜனநாயக நாடென்ற வகை யில் சர்வதேச மனித உரிமைப் பிரகடனங் களைப் பின்பற்ற உறுதியளித்துள்ளது. இதனால் இந்த நாட்டு மக்களுக்கு மாத் திரமல்லாமல் உலக நாடுகளுக்கும் அதன் கடப்பாடுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் வரலாறு ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடை யிலான இராணுவ உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு இந்த உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யவேண்டும்.

இலங்கையுடன் எமக்கு நீண்டகால பாது காப்பு உறவுள்ளது. எனினும், உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2008 இற்குப் பின்னர் எம்மால் சிலவகைப் பயிற்சி களை வழங்க முடியாமல் போனது. இது நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் ஏற்படுத் துவதற்கு முயல்கிறோம். முழுமையான பயிற்சியை வழங்க விரும்புகிறோம். வாஷிங்டனில் வெளிவிவகாரக் கொள்கை என்பது பகிரங்கமான விடயம். பலர் இதில் தொடர்புபட்டுள்ளனர். காங்கிரஸ் வெளி விவகாரக் குழுவைச் சேர்ந்த நாங்கள் இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாக ஒபாமா நிர்வாகத்திற்கு அறிக்கையொன்றை வழங்கினோம்.

அது மிகவும் சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அதேவேளை, இலங்கைக்கு ஆயுதப் பயிற்சி வழங்கு வது குறித்த காங்கிரஸின் மக்கள் குழு கடும் நிலைப்பாட்டை எடுத்தது. கொள் கைகளைத் தீர்மானிப்பதில் பல சக்திகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால் இலங்கை இராணுவத்துடன் முழுமையான தொடர்புகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. மனித உரிமைகள் விடயத்திற்குத் தீர்வு காணும் வரை இவ்வாறான ஒத்து ழைப்பு சாத்தியமற்றது. தேர்தல் வன்முறையற்றதாக, சுதந்திர மானதாக, நீதியானதாக அமைய வேண் டும் என்பதே எமது முக்கிய அக்கறைக் குரிய விடயம்.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தம்மைப் பதிவு செய்து வாக்களிப்பதற்கான உரிமை யைக் கூடியளவிற்கு வழங்குவதும் இதில் அடங்கியுள்ளது. மிகவும் சவாலான பணியைப் பூர்த்தி செய்வதற்குத் தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாகப் பாடுபடுகிறார். தனது அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள் ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஏமாற்றமளிக்கும் அளவிற்கு குறைவாக வுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவ ரும் தற்போது தேர்தல் பற்றிச் சிந்திக் காமல் உயிர்வாழ்தல் பற்றியே சிந்திப் பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பெருமளவு இலங்கையர்களைப் போன்று நாமும் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான கரிசனைகள் உள்ளன எனக் கருதுகிறோம். அவர்களின் வாழ்க்கை மீது அவர்களே செல்வாக்குச் செலுத்தும் நிலையை உரு வாக்குவதன் மூலமே இதற்குத் தீர்வு காணலாம். இதனை அரசமைப்பின் 13 ஆவது அல்லது 17 ஆவது திருத்தத்தின் மூலம் ஏற்படுத்துவதா அல்லது தேர்தல் மூல மாகவா என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனினும் அரசியல் நல்லிணக்கத்தைத் தாமதிப்பது நாடு மீண்டும் எழுச்சி பெறுவதைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தின் பிரச்சாரப் பேரூந்து மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய உந்துருளி ஆள் அப்பகுதி சுதந்திரக் கட்சி அரசியல்வாதியின் புதல்வராம். போலீஸும் அவரை கைது செய்யாமல், ஆரென்றே தெரியாது என்று விட்டு விட்டார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.