Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடனான போரில் 27,000 படையினர் பலி! – கோத்தபாய ராஜபக்ச

Featured Replies

இறுதிக்கட்ட போரில் 27000 படையினரை நாம் இழந்தோம்: கோத்தபாய

சிறீலங்காப் படையினரின் இறுதிக்கட்ட போர் வெற்றிக்கு இருபத்தேழாயிரம் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அழிவை அல்லது ஆக்கத்தை இத்தேர்தல் நிர்ணயிக்கும். நாட்டை மீட்டெடுக்கும் வெற்றிப்போரில் 27000படையினர் உயிரழிந்துள்ளார்கள் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2895&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

இன்னொரு ஈழப்போருக்கு தயாராகும் சக்திகள் ராஜபக்சே சொல்கிறார் - மாலை மலர்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஜனாதிபதி மகிந்த ராஜக்சேக்கும், முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கும் தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்சே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இலங்கையை வலிமையான நாடாக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்களர்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அதில் ராஜபக்சே வெளியிட்டுள்ளார்.

தமிழர்களிடம் செல்வாக்கு கிடைக்காத காரணத்தால் சற்று பயந்து போய் இருக்கும் ராஜபக்சே, மீண்டும் ஈழப்போருக்கு சிலர் தயாராகி வருவதாக ஒரு தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:- 2005-ல் நான் ஆட்சிக்கு வந்த இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை கடுமையாக இருந்தது. அதை மீட்டு எடுத்துள்ளேன். விடுதலைப்புலிகளை ஒடுக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு சில நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. அந்த நாடுகளுக்கு நான் அடிபணியவில்லை. அவை அனைத்தையும் தூக்கி வீசி விட்டேன். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரை நிறுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் இப்போது ஒருங்கிணைந்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். அவர்கள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. இன்னொரு ஈழப்போராட்டத்துக்கு வழி அமைக்க அந்த சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறினார்.

தோல்வி பயம் காரணமாக ராஜபக்சே இப்படி புலம்பி உள்ளதாக எதிர்க் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர். இதற்கிடையே தோல்வி பயம் காரணமாக கோதபய ராஜபக்சேயின் மனைவி கோடிக்கணக்கான பணம், தங்க நகைகளுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பேச்சில் இறுதிக்கட்டப் போரில் என்று சொல்லப்படவில்லை. இப்போரை வெற்றிகொள்வதற்கு 27000 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றுதான் கூறியிருக்கிறார். சிலவேளை இது 30 வருடத்தில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாமோ என்னவோ. ஆனாலும் கடைசி மாதத்தில் மட்டும் 5000 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக சரத் அமெரிக்காவில் சொன்னது நினைவிருக்கு.

அது சரி... நம்மோட ஆக்களுக்கு நாம உரிஞ்சாங்குண்டியோட நிண்டாலும் அடுத்தவன் கோமணத்தோட நிண்டால் ஹிஹி அவன் கோமணத்தோட நிக்கறான் எண்டு சொல்லி மகிழ்ந்துதானே பழக்கம். இவ்வளவு அழிவுக்கு பின்னமும் நம்மடையள் திருந்தாவிட்டால்.. ???

விடுதலைப் புலிகளுடனான போரில் 27,000 படையினர் பலி! – கோத்தபாய ராஜபக்ச

விடுதலைப் புலிகளுடனாட போரில் 27,000 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகோதரன் மகிந்த ராஜபக்சவுக்காக தென்னிலங்கையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனாட போரில் 27,000 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். எனினும் படையினருக்கு ஏற்பட்ட முழுமையான சேதாரங்கள் குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை.

http://www.pathivu.com/news/5073/54/27-000/d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ இருதயநோய் எண்டும் சிங்கப்பூரில் கொஸ்பிட்டலில எண்டும் சொன்னார்கள்...... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.