Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. நான் அதனை முற்றாக எதிர்க்கிறேன். ஏனெனில் அவ்வாறான விசாரணைக்கு இங்கு எந்த அவசியமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பிபிஸி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. சமாதானத்தை உருவாக்க வெணஷ்டியுள்ளது. இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. செய்யவேண்டியவை இவை தான். இதைவிடுத்து பல்வேறு உள்நோக்கங்களுடன் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடாத்த வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்காவோ அல்லது வேறு எந்தவொரு நாடோ கேட்டாலும் அதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. இந்த நாட்டில் அவ்வாறான தவறான விடயங்களெதுவும் நடைபெறவில்லை. நான் அவ்வாறான எத்தகைய விசாரணைகளுக்கும் அனுமதிக்கப் போவதில்லை. இந்நாட்டு மக்களுக்கும் அது தேவையில்லை. இந்த நாட்டுக்கும் அது தேவையில்லை. எந்தவிசாரணையைப் பற்றியும் எந்தக் கேள்விகளையும் என்னிடம் கேட்க வேண்டாம். அவ்வாறான எந்த விசாரணைக்கும் இங்கு இடமில்லை. நான் அதனை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இதனை நான் கூறுகிறேன். இது தான் எனது இறுதி முடிவாகும். ஏத்தகைய விசாரணைகளுக்கும் இங்கு இடம் இல்லை.

தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

ஆம்.

அவர்கள் தங்களை மீள ஒருங்கமைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

எந்தவொரு அமைப்பும் தங்களை மீள ஒருங்கமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்களால் மீள ஒருங்கமைத்துக் கொள்ள முடியாத என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.

நாங்கள் இன்னொரு விடயத்திற்குப் போவோம். தேர்தலின் மறுநாள் அரசாங்கம் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளரும் மன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா அரசாங்கத்தின் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளாரே?

அவரை நாங்கள் ஒரு போதும் கைது செய்ய முயற்சிக்கவில்லை. அது அவருடைய கற்பனை.

அவ்வாறானால் ஏன் நூற்றுக்கணக்கான துருப்பினரை அங்கு அனுப்பி வைத்திருந்தீர்கள்?

நாங்கள் யாரையும் அனுப்பி வைக்கவில்லை. அவர்கள் அங்கிரந்த இராணுவத்தினர் தான்.

அவ்வாறானால் அவர்கள் ஏன் ஹோட்டலுக்குள் போனவர்களையும் வந்தவர்களையும் சோதித்தார்கள்?

அதனுடைய அர்த்தம் கைது செய்வதற்காக என்றல்ல. அவர் தானே அவ்வாறு சிந்திப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அவர் இந்நாட்டில் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று சொல்கிறீர்களா?

நிச்சயமாக.

நீங்கள் அவரை ஒருபோதும் கைது செய்யப்போவதில்லையா?

கைது என்பது வேறு விடயம். ஆவர் பல தவறுகளை விட்டிருக்கிறார். அவர் பாதுகாப்பு கவுன்ஸிலின் உறுப்பினர். மூன்று மாதத்திற்கு முதல் தான் அவர் அதிலிருந்து விலகினார். ஆனால் அவர் சில பாதுகாப்பு இரகசியங்களை பகிரங்கப்படுத்தி இருக்கிறார். அவர் அதில் பிழை விட்டிருக்கிறார். நான் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்ததாக அவர் என்மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.அது பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. பகிரங்கக் கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். அவை எல்லாம் தவறான விடயங்கள். இங்கு சட்டமுறைமை இருக்கிறது. அதன்கீழ் அவரக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர் வெறுமனெ எதிர்க்கட்சி வேட்பாளர் என்பதற்காகக் கைது செய்யப் போவதில்லை. ஏற்கெனவே பல தேர்தல்கள் நடந்துள்ளன. வேட்பாளர்கள் எவராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா?

நன்றி globaltamilnews

ஸ்ரீலங்கா ஒரு "ஜனநாயக - பயங்கரவாத"(Democratic Terrotist) நாடு.

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

"எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN

05 February 10 11:30 am (BST)

எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. நான் அதனை முற்றாக எதிர்க்கிறேன். ஏனெனில் அவ்வாறான விசாரணைக்கு இங்கு எந்த அவசியமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பிபிஸி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. சமாதானத்தை உருவாக்க வெணஷ்டியுள்ளது. இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. செய்யவேண்டியவை இவை தான். இதைவிடுத்து பல்வேறு உள்நோக்கங்களுடன் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடாத்த வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்காவோ அல்லது வேறு எந்தவொரு நாடோ கேட்டாலும் அதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. இந்த நாட்டில் அவ்வாறான தவறான விடயங்களெதுவும் நடைபெறவில்லை. நான் அவ்வாறான எத்தகைய விசாரணைகளுக்கும் அனுமதிக்கப் போவதில்லை. இந்நாட்டு மக்களுக்கும் அது தேவையில்லை. இந்த நாட்டுக்கும் அது தேவையில்லை. எந்தவிசாரணையைப் பற்றியும் எந்தக் கேள்விகளையும் என்னிடம் கேட்க வேண்டாம். அவ்வாறான எந்த விசாரணைக்கும் இங்கு இடமில்லை. நான் அதனை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இதனை நான் கூறுகிறேன். இது தான் எனது இறுதி முடிவாகும். ஏத்தகைய விசாரணைகளுக்கும் இங்கு இடம் இல்லை.

தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

ஆம்.

அவர்கள் தங்களை மீள ஒருங்கமைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

எந்தவொரு அமைப்பும் தங்களை மீள ஒருங்கமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்களால் மீள ஒருங்கமைத்துக் கொள்ள முடியாத என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.

நாங்கள் இன்னொரு விடயத்திற்குப் போவோம். தேர்தலின் மறுநாள் அரசாங்கம் தன்னைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி வேட்பாளரும் மன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா அரசாங்கத்தின் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளாரே?

அவரை நாங்கள் ஒரு போதும் கைது செய்ய முயற்சிக்கவில்லை. அது அவருடைய கற்பனை.

அவ்வாறானால் ஏன் நூற்றுக்கணக்கான துருப்பினரை அங்கு அனுப்பி வைத்திருந்தீர்கள்?

நாங்கள் யாரையும் அனுப்பி வைக்கவில்லை. அவர்கள் அங்கிரந்த இராணுவத்தினர் தான்.

அவ்வாறானால் அவர்கள் ஏன் ஹோட்டலுக்குள் போனவர்களையும் வந்தவர்களையும் சோதித்தார்கள்?

அதனுடைய அர்த்தம் கைது செய்வதற்காக என்றல்ல. அவர் தானே அவ்வாறு சிந்திப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அவர் இந்நாட்டில் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று சொல்கிறீர்களா?

நிச்சயமாக.

நீங்கள் அவரை ஒருபோதும் கைது செய்யப்போவதில்லையா?

கைது என்பது வேறு விடயம். ஆவர் பல தவறுகளை விட்டிருக்கிறார். அவர் பாதுகாப்பு கவுன்ஸிலின் உறுப்பினர். மூன்று மாதத்திற்கு முதல் தான் அவர் அதிலிருந்து விலகினார். ஆனால் அவர் சில பாதுகாப்பு இரகசியங்களை பகிரங்கப்படுத்தி இருக்கிறார். அவர் அதில் பிழை விட்டிருக்கிறார். நான் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்ததாக அவர் என்மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.அது பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. பகிரங்கக் கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். அவை எல்லாம் தவறான விடயங்கள். இங்கு சட்டமுறைமை இருக்கிறது. அதன்கீழ் அவரக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர் வெறுமனெ எதிர்க்கட்சி வேட்பாளர் என்பதற்காகக் கைது செய்யப் போவதில்லை. ஏற்கெனவே பல தேர்தல்கள் நடந்துள்ளன. வேட்பாளர்கள் எவராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா?

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=20492&cat=1

ஆரம்பிச்சுட்டான் கோத்தா...

இணைப்பிற்கு நன்றி நுணா.

ஆரம்பித்தால் மட்டும் போதுமா? முடிவிற்காக நாங்களெல்லாம் காத்திருக்கிறோம்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

இவனின் கொட்டத்தை யார் தான் அடக்க போகிறார்கள்? :lol::D

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், மீண்டும் தர்மம் வெல்லும் என்று எழுத முடியாதுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.