Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக புத்தர் சிலை.

Featured Replies

எங்கட ஆக்கள் கோயிலை மட்டும் இல்லை இருக்கும் பணங்களில் சொத்துக்களையும் முதலீடுகளையும் சிங்கள ஊர்களில் தான் செய்கிறார்கள்... கொழும்பில் தமிழர்களுக்கு இருக்கும் சொத்து பெரும்பான்மை சிங்களவனுக்கு கூட அங்கை இருக்க முடியாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சக்காலம் போனால் புத்தர்சிலைக்கு முன்னால்தான் நல்லூர்முருகன் கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றை மாற்றி எழுதுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்கள் கோயிலை மட்டும் இல்லை இருக்கும் பணங்களில் சொத்துக்களையும் முதலீடுகளையும் சிங்கள ஊர்களில் தான் செய்கிறார்கள்... கொழும்பில் தமிழர்களுக்கு இருக்கும் சொத்து பெரும்பான்மை சிங்களவனுக்கு கூட அங்கை இருக்க முடியாது...

நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கள பகுதிகளிலேயெ முதலீடு செய்து, அங்கே உள்ளவர்களையே வேலைக்கும் வைத்து கடந்த பல வருடங்களாக வணிகம் செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:

  • தமிழ் பகுதிகளில் போரால் வணிக முதலீடுகள் அழிந்து போனது,
  • வரிகள், லஞ்சங்கள், கப்பங்கள் போன்றவற்றை தவிர்க்க விரும்பியது,
  • மூலப்பொருட்களும், உற்பத்திகளும் பாதிப்புகளின்றி கொண்டு செல்லப்படும் வசதிகள்.

தமிழர்களைப்போல 10 மடங்கு அதிகமானவர்கள் சிங்களவர்கள். ஆகவே சிங்களவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வந்து வணிகம் செய்வதை ஊக்குவித்தால், தமிழர் சிங்களபகுதிகளில் முதலிட்டு வழங்கிய வேலைவாய்ப்புகளை போல 10 மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழ்ப்பகுதிகளில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

Edited by Jude

நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கள பகுதிகளிலேயெ முதலீடு செய்து, அங்கே உள்ளவர்களையே வேலைக்கும் வைத்து கடந்த பல வருடங்களாக வணிகம் செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:

  • தமிழ் பகுதிகளில் போரால் வணிக முதலீடுகள் அழிந்து போனது,
  • வரிகள், லஞ்சங்கள், கப்பங்கள் போன்றவற்றை தவிர்க்க விரும்பியது,
  • மூலப்பொருட்களும், உற்பத்திகளும் பாதிப்புகளின்றி கொண்டு செல்லப்படும் வசதிகள்.

தமிழர்களைப்போல 10 மடங்கு அதிகமானவர்கள் சிங்களவர்கள். ஆகவே சிங்களவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வந்து வணிகம் செய்வதை ஊக்குவித்தால், தமிழர் சிங்களபகுதிகளில் முதலிட்டு வழங்கிய வேலைவாய்ப்புகளை போல 10 மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழ்ப்பகுதிகளில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

அதுக்குப்பிறகு தமிழர் என்ற பிரச்சனையே சிங்களவருக்கு இருக்காது என்று சொல்றீங்க. இனி சிறுபான்மை என்று ஒரு இனமே சிறிலங்காவில் கிடையாது என்று மகிந்தர் சொன்னது போல்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பைப்போதித்த புத்தரை எமதூருக்குள் அனுமதிப்பதில் எந்தவிதமான பிரச்சனையுமில்லை, ஆனால் ஆக்கிரமிப்புப் புத்தராகவெல்லோ இவர் வந்திருக்கின்றார், அதில்தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது.

அந்த ஆக்கிரமிப்பு புத்தருக்கு போட்டியாக எங்கள் மணிமேகலை காலத்து அன்புப்புத்தரை நாம் ஏன் இறக்கிவிடக்கூடாது? என்பதுதான் எனது கேள்வி. ஆக்கிரமிப்பு புத்தரிடம் போவதா? அல்லது அன்புப்புத்தருடன் கூடவே கிடைக்கும் கந்தரிடமும், காளியிடமும் சரணடைவதா என்று ஆக்கிரமிப்பு இராணுவம் தடுமாறும் நிலைவரலாம்.

MaNimEkalai01.jpg

மணிமேகலை

500 வருடங்களுக்கு முதல் கிறிஸ்தவமதம் வரும் பொழுதும் இப்படித்தான் அடிபட்டவையளாம் எல்லா பிரதேசவாதிகளும் பிறகு அவையளும் அந்த மதத்தை தழுவி தமிழுக்காக போராடினவையள்...

100 வருடங்களுக்கு பிறகு உந்த பிரதேசவாதிகளும் புத்தரை கும்பிட்டுப்போட்டு தமிழுக்காக போராடினாலும் போராடிவினம்.

ஜெசு,அல்லா, சிவன் ,நாராயனன்,ஆஞ்சநேயர்,பாபா,எல்லோர்க்கும் அந்த மண்ணில இடம்மிருக்கு என்றால் ஏன் புத்தருக்கு இருக்க கூடாது. :lol:

நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கள பகுதிகளிலேயெ முதலீடு செய்து, அங்கே உள்ளவர்களையே வேலைக்கும் வைத்து கடந்த பல வருடங்களாக வணிகம் செய்து வந்திருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில:

  • தமிழ் பகுதிகளில் போரால் வணிக முதலீடுகள் அழிந்து போனது,
  • வரிகள், லஞ்சங்கள், கப்பங்கள் போன்றவற்றை தவிர்க்க விரும்பியது,
  • மூலப்பொருட்களும், உற்பத்திகளும் பாதிப்புகளின்றி கொண்டு செல்லப்படும் வசதிகள்.

தமிழர்களைப்போல 10 மடங்கு அதிகமானவர்கள் சிங்களவர்கள். ஆகவே சிங்களவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வந்து வணிகம் செய்வதை ஊக்குவித்தால், தமிழர் சிங்களபகுதிகளில் முதலிட்டு வழங்கிய வேலைவாய்ப்புகளை போல 10 மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழ்ப்பகுதிகளில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

இப்பிடித்தான் இங்கை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் சொன்னார்... நாலு வருடத்துக்கு முன்னம் என்னை அந்த யாழ்ப்பாணத்திலை இருக்கும் வீட்டை 4 லட்ச்சம் ரூபாவுக்கு வாங்கச்சொல்லி கேட்டினம்... நான் அப்ப வாங்க இல்லை... இப்ப 20 லட்ச்சத்துக்கும் மாட்டன் எண்டுகினம் எண்டார்... அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்க வேண்டிய சொத்து கைகழுவி போட்டுது எண்டு ஒரே கவலை...

இதுதான் சாதாரணமாக தமிழரின் எண்ணம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குப்பிறகு தமிழர் என்ற பிரச்சனையே சிங்களவருக்கு இருக்காது என்று சொல்றீங்க. இனி சிறுபான்மை என்று ஒரு இனமே சிறிலங்காவில் கிடையாது என்று மகிந்தர் சொன்னது போல்.

இலங்கையில் நடப்பது உண்மையில் சிறுபான்மையினர் ஆட்சி. இந்த சிறுபான்மையினர் இனவித்தியாசத்தின் அடிப்படையிலான சிறுபான்மையினர் அல்ல. பணபலமும் அடியாட்களும் கொண்ட பயங்கரவாதிகள் குழுக்களே இலங்கையை ஆட்சி செய்து வந்திருக்கின்றன. பெரும்பான்மையான பொதுமக்கள், சிங்களவர், தமிழர், ஏனையோர் இந்த சிறுபான்மை பயங்கரவாதிகளின் ஆட்சிக்கு ஆடுவதை தவிர வேறு வழியில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த சிறுபான்மையினர் சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழ் ஆயுதக்குழுக்களும் இதனுள் அடங்குகின்றன.

தமிழ் இனத்துக்கு எதிராக செயற்படும் இந்திய மட்டுமல்ல சகல உளவு அமைப்பின் சிந்தனைப் போக்கினை, ஈழத்தமிழர் விரோத போக்கினை, சில உண்மைகளுடன் பல பொய்களை அவிழ்த்துவிட்டு தமிழரின் நியாயங்களை சிதைக்க முயலும் தமிழின விரோத போக்கினை உடையவர்களின் சிந்தனைகள் எப்படியிருக்கும் என்பதற்கு இங்கு எழுதப்பட்ட சில கருத்துக்கள் நல்ல உதாரணங்கள் ஆகும்.

தம்மையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றி வாழும் இவர்கள் - மிக ஆபத்தானவர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

100 வருடங்களுக்கு பிறகு உந்த பிரதேசவாதிகளும் புத்தரை கும்பிட்டுப்போட்டு தமிழுக்காக போராடினாலும் போராடிவினம்.

ஜெசு,அல்லா, சிவன் ,நாராயனன்,ஆஞ்சநேயர்,பாபா,எல்லோர்க்கும் அந்த மண்ணில இடம்மிருக்கு என்றால் ஏன் புத்தருக்கு இருக்க கூடாது. :lol:

ஆயிரம் வருடங்களுக்கு முதல் புத்தரை கும்பிட்டவை எழுதின சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் வைத்து தானே தமிழும் ஒரு தொன்மையான மொழி என்று சொல்லுகினம்! அப்ப கும்பிட்ட புத்தருக்கு இப்ப இடமில்லை பாபாவுக்கும், யேசுவுக்கும் மட்டும் இடம் கிடைச்சிட்டுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்துக்கு எதிராக செயற்படும் இந்திய மட்டுமல்ல சகல உளவு அமைப்பின் சிந்தனைப் போக்கினை, ஈழத்தமிழர் விரோத போக்கினை, சில உண்மைகளுடன் பல பொய்களை அவிழ்த்துவிட்டு தமிழரின் நியாயங்களை சிதைக்க முயலும் தமிழின விரோத போக்கினை உடையவர்களின் சிந்தனைகள் எப்படியிருக்கும் என்பதற்கு இங்கு எழுதப்பட்ட சில கருத்துக்கள் நல்ல உதாரணங்கள் ஆகும்.

தம்மையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றி வாழும் இவர்கள் - மிக ஆபத்தானவர்கள்!!!

அந்த உண்மைகள் என்ன?, பொய்கள் என்ன? யார் இந்த ஆபத்தானவர்கள்? இவர்கள் எப்படி ஆபத்தானவர்கள்? என்றெல்லாம் விளக்கமாக எழுதினால் மக்களுக்கு கொஞ்சம் புரியுமல்லவா?

உதாரணமாக, மணிமேகலை புத்த துறவி அல்ல சாயிபாபாவின் சிஷியை என்று சொல்கிறீர்களா? இந்த ஆபத்தானவர்கள் தான் முள்ளிவாய்க்காலில் 40,000 மக்களை பலி கொடுத்தவர்கள் என்று சொல்கிறீர்களா? ஒன்றுமே புரியவில்லையே? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.