Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர்: பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர் ‐ பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான்

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஜெனரல் சரத்பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம் ஓர் இராணுவப் பிரச்சினை எனவும், இந்தப் பிரச்சினை குறித்து தம்மால் எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி என்ற ரீதியில் மிகச் சிறந்த முறையில் யுத்தத்தை முன்னெடுத்தார் என்பதில் சந்தேகமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான் :

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் தீர்மனிக்கப்படவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த வாரமளவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் பிரதான நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் பிரச்சாரப் பணிகளின் போது கருணா அம்மான் தரப்பினருடன் மோதல்கள் ஏற்படாத வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவே உத்தேசித்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும், சில கப்பம் கோரல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோரல் சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளப்படுத்த விரும்பவில்லை எனவும், காவல்துறையினர் விரைவில் குறித்த நபர்களை கைது செய்து தண்டனை வழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews

நக்கித் தின்னும் நாய்க்கு எலும்புகள் இரண்டு பக்கத்தாலும் கிடைக்கிறது.

ஈழத் தமிழர்களின் ஏகப் பிரதி நிதியல்லவா, சும்மா கிடவுங்க---- அத விட்டுட்டு--- ஏப்றில் ஒண்ணாம் திகதிக்கு இன்னும் நாளிருக்கு.

நக்கித் தின்னும் நாய்க்கு எலும்புகள் இரண்டு பக்கத்தாலும் கிடைக்கிறது.

பார் சும்மா சுடு எண்டா சுட்டவனும்,நில் எண்டா நிண்டவனும் இண்டைக்கு தமிழன் சார்பாக பேட்டிகள் அறிக்கை. ஒரு மாகாண அரசு. எவ்வளவு கீழ் நிலைக்கு இறங்கி விட்டோம்.

போராடியவர்கள் மறைந்து விட்டார்கள். எட்டப்பானும் ,காட்டி கொடுப்பவனும் துரோகிகளும் சொகுசாக உலா வருகிறார்கள்.

தமிழ் இனத்தில் தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பள வாயா நீ முதலிம் வீரனா? அதை முதலில் சொல் :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.