Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது குறித்து ஆராய்வு!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது குறித்து ஆராய்வு!

.தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உட்படதமிழ் பேசும் பிரதேசங்களில் முஸ்லிம் கங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக உள்ளதாகத் தெரியவருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐவரும் கூடி தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அடுத்துவரும் தினங்களில் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பொறிமுறை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இரா.சம்பந்தன் அங்கு கருத்துத் தெரிவித்தர் என அறியவருகிறது.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால் இனிமேல் நடைபெறவுள்ள புதிய வேட்பாளர் தெரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இதுவரை எம்பிக்களாக இருந்த 22 பேரையும் அழைக்கும் நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என்று கூட்டமைப்பின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்தத் தலைவர் கோடிகாட்டினார்.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

அதேவேளை, இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்தத் தலைவர் கோடிகாட்டினார்

thumbs-up.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலை நல்ல வருமானம் வருமோ.? இல்லை இந்தியாவிலை இருந்து வருமோ.?

Edited by ஆறுமுகம்

ஊரில கோவணம் மிஞ்சுவதே சந்தேகம் பட்டனத்தில பட்டுவேட்டிக்கு கனவு கான்கிறார்கள்.

ஊரில கோவணம் மிஞ்சுவதே சந்தேகம் பட்டனத்தில பட்டுவேட்டிக்கு கனவு கான்கிறார்கள்.

மருத்துவம், ஆய்வாளர் எண்டு போட்டு துகிலியலை ஆராயுறீங்கள். :o

மருத்துவம், ஆய்வாளர் எண்டு போட்டு துகிலியலை ஆராயுறீங்கள். :o

ஆயுத களைவை புலிகள் ஏற்காதன் விளைவு தெரியும் தானே அது தான் கூட்டமைப்புக்கு ஆடைக்களைவாது செய்து பார்ப்போம் என்று தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில கோவணம் மிஞ்சுவதே சந்தேகம் பட்டனத்தில பட்டுவேட்டிக்கு கனவு கான்கிறார்கள்.

சரியான கருத்து ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி, சனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் கொடுத்த தீர்பை பார்த்து இருப்பீர்கள்தானே :o:D

ஆயுத களைவை புலிகள் ஏற்காதன் விளைவு தெரியும் தானே அது தான் கூட்டமைப்புக்கு ஆடைக்களைவாது செய்து பார்ப்போம் என்று தான்.

அவை தானாகவே கழட்டி போட்டு ஆட்டாமல். சீச்சி ஆடாமல் இருந்தால் மக்களுக்கு நல்லது. :o

சரியான கருத்து ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி, சனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் கொடுத்த தீர்பை பார்த்து இருப்பீர்கள்தானே :D:lol:

போட்ட கொஞ்ச சனத்தையும் வோட்டு போட வரப்பண்ணினது கூட்டமைப்பு எண்டா இண்டைக்கும் நினைச்சு கொண்டு இருக்கிறீயள்.?

மகிந்த மேலை இருந்த கடுப்பும் தாங்கள் வோட்டு போடாமல் இருந்தால் கள்ள வோட்டாக போட்டுவிடுவார்கள் எண்ட பயமும் எல்லோ. :D

Edited by பொய்கை

சரியான கருத்து ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி, சனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் கொடுத்த தீர்பை பார்த்து இருப்பீர்கள்தானே :o:D

.உண்மையில் நடந்த சனாதிபதி தேர்தலில் நடந்த்து என்ன?

கூட்டமைப்புக்கு தெரியாமலே கழட்டு விழுந்து கொண்டு இருந்த கோவணத்தை தமிழ் மக்கள் தங்கள் கரங்களால் மீண்டும் எடுத்து கட்டிவிட்டார்கள் இல்லை என்றால் தற்போது கூட்டமைப்பு அம்மனக் குண்டியோட தான் நின்று இருக்கு அதுவும் சந்தன் இந்தியாவுக்கு போட்டு வந்த சொன்ன கதைகள் கூட்டமைப்பை இலங்கை அரசியலில் இருந்து வேரோடு அழித்து விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.உண்மையில் நடந்த சனாதிபதி தேர்தலில் நடந்த்து என்ன?

கூட்டமைப்புக்கு தெரியாமலே கழட்டு விழுந்து கொண்டு இருந்த கோவணத்தை தமிழ் மக்கள் தங்கள் கரங்களால் மீண்டும் எடுத்து கட்டிவிட்டார்கள் இல்லை என்றால் தற்போது கூட்டமைப்பு அம்மனக் குண்டியோட தான் நின்று இருக்கு அதுவும் சந்தன் இந்தியாவுக்கு போட்டு வந்த சொன்ன கதைகள் கூட்டமைப்பை இலங்கை அரசியலில் இருந்து வேரோடு அழித்து விடும்.

அதே சனம்தான் பாரளமண்ற தேர்தலிலும் எடுத்து காட்ட போகிறார்கள். :o

அதே சனம்தான் பாரளமண்ற தேர்தலிலும் எடுத்து காட்ட போகிறார்கள். :o

வேற வழி?

புருஷன் குடிகாரன் என்றாலும் புல்லானலும் புருசன் கல்லானலும் கனவன் என்று வாழ்ந்த பரம்பரை அது போல தான் ஆண்மை இல்லாத கனவன் என்றாலும் தாலிக்காக வைச்சு இருகிறது இல்லையா அது போல கூட்டமைப்பால ஒரு தீர்வும் வாங்கி தர முடியாது என்று தெரிந்தாலும் கூட்டமைப்பு தான் எங்கள் தெரிவு என்று தமிழ்மக்கள் வேட்டு போட்டே தீருவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற வழி?

புருஷன் குடிகாரன் என்றாலும் புல்லானலும் புருசன் கல்லானலும் கனவன் என்று வாழ்ந்த பரம்பரை அது போல தான் ஆண்மை இல்லாத கனவன் என்றாலும் தாலிக்காக வைச்சு இருகிறது இல்லையா அது போல கூட்டமைப்பால ஒரு தீர்வும் வாங்கி தர முடியாது என்று தெரிந்தாலும் கூட்டமைப்பு தான் எங்கள் தெரிவு என்று தமிழ்மக்கள் வேட்டு போட்டே தீருவார்கள்.

அப்ப ஆண்மையுள் டக்கிளசு என்ன செய்வார் :o:D:lol:

அப்ப ஆண்மையுள் டக்கிளசு என்ன செய்வார் :o:D:lol:

டக்கிளஸ் என்ன அடிக்கடி இந்தியாவுக்கு போட்டு வந்து இந்தியா தீர்வு வாங்கி தரம் நான் கொண்டு வாறேன் என்று சொன்னவனோ? அவன் தெளிவாக இருக்கான் தன்னால் முடிந்த அளவுக்கு போதை வஸ்தும் செக்ஸ் டெவேடியும் ஒழுங்கா தாரான் தானே? சும்மா ப்ளீம் காட்டல அவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளஸ் என்ன அடிக்கடி இந்தியாவுக்கு போட்டு வந்து இந்தியா தீர்வு வாங்கி தரம் நான் கொண்டு வாறேன் என்று சொன்னவனோ? அவன் தெளிவாக இருக்கான் தன்னால் முடிந்த அளவுக்கு போதை வஸ்தும் செக்ஸ் டெவேடியும் ஒழுங்கா தாரான் தானே? சும்மா ப்ளீம் காட்டல அவன்.

அப்ப சனம் என்ன பிலிம் காட்டுற ஆக்களுக்கோ வாக்கை அள்ளி வீசுங்கள், அப்ப சம்பந்தர் பிலிமோ காடுறார், தமிழ் சனத்துக்கு அரசியல் அறிவே கிடையாதா? :o

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில கோவணம் மிஞ்சுவதே சந்தேகம் பட்டனத்தில பட்டுவேட்டிக்கு கனவு கான்கிறார்கள்.

இத்தேர்தலில் விகிதசார அடிப்படையில் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனால் தான் சென்ற தேர்தலில் 90 வீத வாக்குகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் பெற்ற கூட்டமைப்பு 9 அமைச்சர்களைப் பெற்றது. ஈபிடிபி 5 வீகிதம் பெற்று 1 இடத்தை(டக்லஸ்) பெற்றார். இம்முறை கூட்டமைப்பு கொழும்பில் வாழும் தமிழர்களை நினைத்து ஒரு 5 விகிதமாவது வாக்குகளைப் பெற்றால் குறைந்தது 1 அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்தார்களோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.