Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள் - ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள் - ஜெயானந்தமூர்த்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

“கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்தே போட்டியிட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழீழக் கொள்கைக்கு ஆணை வழங்கியிருந்தனர். தற்போது தற்காலிகமாக ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் எமது அரசியல் ரீதியான செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இதைக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்கால் சம்பவத்திற்குப் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டதாக கூட்டமைப்பில் உள்ள சிலர் நினைக்கின்றனர். அதனால் தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் பற்றி கதைக்க முற்பட்டுள்ளனர்.

எமது தேசியப் போராட்டம் பல அர்ப்பணிப்புகள் தியாகம் என்பனவற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ள முயலக் கூடாது. தற்போது சுயநல அரசியலை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை திசைதிருப்பும் வேலை அக்கட்சியில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் என விளக்கம் கூற இவர்கள் முற்படலாம். அதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்காமல் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின்னர் இது பற்றிப் பேசலாம் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்கள் முன் கூற முற்படுவது தமது பதவியைப் பெறுவதற்கே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எமது தேசியத்திற்கும் கடந்த 30 வருடகாலமாக உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களுக்கும் எமது இனத்திற்கும் செய்யும் துரோகமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வரலாறு இவர்களை என்றுமே மன்னிக்கப்போவதில்லை” என்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில்: ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தமிழீழக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக அமைக்கபட்ட கட்டமைப்பு. அதனை ஏற்றுக் கொண்டே அதில் இணைந்துள்ள தமிழ் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் அரசியல் நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை என்றுமே முன்வைக்கவில்லை என கூறுவது தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும். அது மாத்திரமின்றி என்ன கொள்கைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதன் கொள்கையை கொச்சைப்படுத்தும் செயலாகவுமே பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவின் நலனுக்காக இவர்கள் செயற்படாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானதாகவும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது. அவர்கள் யாருக்கு இடம் கொடுப்பதில்லை என்பதை பார்த்தால் அதிகமானோர் தேசியத்தோடு கொள்கையை இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாறாக கடந்த காலங்களில் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வியாக்கியானம் பேசியவர்களுக்கும் மாற்றுக் கொள்கையுடன் இருந்து செயற்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். தற்போது விடுதலைப்புலிகளுடன் ஆதரவு இல்லாதவர்களே கட்சியில் உள்ளனர் என்பதை காட்டும் செயற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியதாக அது அமைய வேண்டும். இல்லாவிட்டால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எத்தகைய நடவடிக்கைகளும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெனில் புலம் பெயர் மக்கள் எமது தேசிய விடுதலைப்போராட்டத்திலும் சரி தமிழர்களின் அரசியல் நகர்வுகளிலும் சரி ஒரு பின்புலமாக உள்ளனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.’ என ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/5608/54/.aspx

கூட்டமைப்பு போக்கிரித்தனமாக நடந்தால் - அதை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மொத்தத்தில், இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை சிதைக்க முயற்சிக்கும் வட இந்திய - சிங்கள பயங்கரவாதிகளின் சதிகளில் இருந்து கூட்டமைப்பு வெளிவரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் என விளக்கம் கூற இவர்கள் முற்படலாம். அதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்காமல் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின்னர் இது பற்றிப் பேசலாம் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்கள் முன் கூற முற்படுவது தமது பதவியைப் பெறுவதற்கே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எமது தேசியத்திற்கும் கடந்த 30 வருடகாலமாக உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களுக்கும் எமது இனத்திற்கும் செய்யும் துரோகமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வரலாறு இவர்களை என்றுமே மன்னிக்கப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு ஆட்சியமைப்பாக இருந்தாலும் ஒரு நாட்டை ஆள்வது சட்டமே!

சர்வாதிகார அல்லது இராணுவ ஆட்சியாயிருந்தாலும் அந்த ஆட்சியை இயக்குவதற்கு சட்டம் என்ற எரிபொருள் வேண்டும்,

இலங்கை,இந்திய நாடுகளில் சட்டத்துறைக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் உரசலுக்கு காரணம் அதிகார துஸ்பிரயோகமே!

இன்று இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அளவற்ற அதிகாரங்கள் இலங்கையை மக்கள் ஆட்சியிலிருந்து சர்வாதிகார ஆட்சியை நோக்கி எப்போதோ திருப்பிவிடப்பட்டு விட்டது,இதற்கு எதிராக இலங்கையில் ஏற்பட்டு வரும் எதிர்ப்பலைகளுடன் சமாந்தரமாக த தே கூ வும் பயணிக்க வேண்டும் இல்லாவிட்டால்

உலக வரலாற்றில் முதலும் கடைசித்தடைவையாக ஜேர்மனியில் 98% மக்களாதரவுடன் ஆட்சிக்கு வந்த கிட்லர் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தேர்தல்கள் பல் கட்சிகள் என்று கூறி மற்றைய கட்சிகளை நீக்கி விட்டு தேசிய கட்சி ஒன்றை உருவாக்கினது போன்ற நிலை உருவாகும் ஏனெனில்

போர் நடந்த காலத்தில் இலங்கையில் போரை எதிர் கொள்ள ஒரு தேசிய கட்சியினை உருவாக்கவேண்டும் என்ற பரவலான எண்ணம் சிங்களவரிடையே இருந்தது அத்துடன் இப்போது உள்ள ஐக்கிய இராச்சியம்,ஐக்கிய அமெரிக்கா,அவுஸ்திரேலியா கூட்டாட்சி முறையையே கடைப்பிடிக்கின்றன ஏனெனில் இந்த நாடுகளில் கூட பல் தேசியங்கொண்ட ஆட்சி முறை நிலவியது ஒற்றை ஆட்சி முறக்குள் ஆளுவது முடியாது என்ற உண்மையை அவர்கள் புரிந்திருந்தார்கள் ஆனால் சிங்களவர்களோ ஒற்றை ஆட்சி என்று ஓலமிட்டுக்கொண்டுள்ளார்கள்

வெள்ளையர் இலங்கை ஆக்கிரமிக்கும் போது தமிழராட்சி இலங்கையிலிருந்தது ஆகவே தமிழ்த்தேசியம் என்பது உண்மையே அதை சிங்களவர்களால் தடுத்துவிட முடியாது அது த்ண்ணீரில் அமிழ்த்தும் பந்து போல் மீண்டும் Mண்டும் வெளியில் தோன்றும் அதைத்தடுப்பதற்கு ஒரு வளி தமிழ்த்தேசிய கட்சிகளை தடைசெய்வதே

குறுங்கல சுய நல சிந்தனையுடன் சம்பந்தர் சித்திக்காது உண்மையான தமிழர் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலேயே த் தே கூவும் தமிழரும் வாழ்வர்

Edited by vasee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.