Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை.

இணைந்த வடக்கு கிழக்கு மாகணத்தின் முதலமையச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசாங்கத்தின் பங்காளிகளான கருணா, பிள்ளையான் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மூலமாக அதனை நிர்வகிப்பதற்கும் இலங்கை அரசாங்கதிற்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா கருதுகின்றது.

அதேசமயம் புலம் பெயர் நாடுகளில் தோற்றம் பெற்று வரம் நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்புகள் மூலம் தமிழ் மக்கள் பிரிந்த போகும் உரிமையை அல்லது சுயநிர்ணய உரிமையை மேற்குலக நாடுகளின் உதவியுடன் பெறுவதை தடுக்க முடியும் என்றும் இந்திய நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மேற்குலக நாடுகளின் தலையீட்டினை இல்லாமல் செய்ய முடியும் என்றும் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியர்களின் ஆதிக்கத்தை தமிழர்கள் மத்தியில் இருந்து அகற்ற வேண்டின் தமிழக தமிழர்கள் உட்பட எல்லோருக்கும் தமிழ் தேசிய உணர்வை இடைவிடாது ஊட்ட வேண்டும். அதுமட்டுமன்றி இந்தியா என்ற தேசத்துக்குள் கட்டுண்டு கிடக்காமல் பிரிந்து சென்று சுயநிர்ணய உரிமை பெற்று வாழ விரும்பும் பஞ்சாப் காலிஸ்தான்.. காஷ்மீரிய தேசியவாதிகள்.. மாவோஜிஸ்டுக்கள் என்று இந்தியாவின் ஆதிக்கத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் போராட நினைக்கும் மக்களோடு தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் கூட்டுச் சேர வேண்டும்.

இந்திய ஆதிக்கதிற்கு எதிராக பிராந்தியத்தில் செல்வாக்குச் செய்ய விரும்பும் மேற்குலகல்லாத சக்திகளோடும் தமிழர்கள் உறவுகளை பேணிப்பலப்படுத்த வேண்டும்.

அதேவேளை உலகத்தமிழினத்தை தமிழ் தேசியம் நோக்கி ஒன்றிணைப்பதோடு தமிழீழத் தனியரசின் தேவைகுறித்து அவர்களுக்கும் உலகிற்கும் உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழீழத் தனியரசு.. நாடு கடந்த தமிழீழ அரசு என்பது போன்று தாயகத்தில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து உள்ளூர் அரசியலில் அவர்களை செல்வாக்குள்ளவர்களாகவும் மக்களை மதிக்கவும் கவனிக்கவும் செய்பவர்களாகவும் உருவாக்கி தாயகத்தை தமிழ் தேசியவாதிகள் அபிவிருத்தி,ஆட்சி செய்வதை அல்லது பிரதிநிதிப்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாம் இந்தியாவிற்கு எதிரான நகர்வுகளை செய்யாது.. இந்தியாவோடு நட்பு மட்டும் எதிர்பார்த்திருப்போம் என்றால் எம்மால் எந்த ராஜதந்திரத்தையும் தீர்மானிக்க முடியாத படிக்கு இந்திய அடிவருடித்தனமே மேலோங்கச் செய்யப்படும்

சிறீலங்காவை மட்டுமல்ல.. இந்தியாவை நோக்கியும் எமது ராஜதந்திர நகர்வுகளைச் செய்தால் அன்றி இந்திய வல்லாதிக்கத்தின் வாலாட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகக் கடினமானதாவதுடன்.. இந்திய - சிங்கள கூலிகள் தமிழ் மக்களின் உரிமைகளை ஏப்பம் விட்டு அரசியல் செய்யும் நிலை எம் கண்முன்னே மீண்டும் 1987 ம் ஆண்டு நடத்திக் காட்டப்பட்டதைப் போன்று உருவாக்கப்படும்.

மக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருக்கும் படி பார்த்துக் கொள்வதே இந்திய நாசகாரிகளின் நகர்வுகளை படிப்படியாக முறியடித்து விடுதலைப்புலிகள் இல்லாத இந்தச் சூழலில் தமிழ் மக்களை சூழ்ந்துள்ள அபாயத்தில் இருந்து அவர்களைக் காக்க முடியும்.

வெறுமனவே சிறீலங்கா பாராளுமன்றத்தை அலங்கரிப்பதாலோ.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு தலையாட்டித் திரிவதாலோ.. எமக்கு எந்த உய்வும் வரப்போவதில்லை.

இந்தியாவை நட்பு நாடாக நோக்குவதை விடுத்து எச்சரிக்கை கொள்ள வேண்டிய நாடாக மக்களுக்கு இனங்காட்ட வேண்டும். அதன்படி நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டால் அன்றி இந்திய வல்லாதிக்கத்தின் சுதந்திரமான தலையீட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடித்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பாதுகாக்க முடியாத நிலையே தோன்றும்.

Edited by nedukkalapoovan

எல்லாக் குப்பை கூழங்களையும் திரும்பக் கொண்டுவந்து கொட்டப் போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.