Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள்.

[Monday, 2010-02-22 09:37:10]

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர்.

இராணுவ விசாரணையாளர்கள் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விசாரணைசெய்தபோது, அவர்களது பதில்கள் பொன்சேகாவின் அறையிலிருந்த ஒலிபெருக்கியில் கேட்டபோது அந்த ஒலிபெருக்கியை பொன்சேகா எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர் தனது இரண்டு காதுகளிலும் விரல்களை அழுத்தி, ஒலிபெருக்கியில் வெளியான விடயங்களை தான் கேட்பதற்கு தயாரில்லை என்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

பொன்சேகாவுடன் சேர்ந்து சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்படும்போது, அவர்கள் வெளியிடும் பதில்களை பொன்சேகா கேட்டு, அவற்றுக்கேற்ப தனது பதில்களை தயார் செய்யலாம் என்ற நோக்குடனேயே பொன்சேகாவின் அறையில் இந்த ஒலிபெருக்கி பொருத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தடுப்புக்காவலில் உள்ள பொன்சேகா, தான் நாட்டின் சாதாரண குடிமகன் என்றும் இராணுவ விசாரணைக்கு தான் முகம்கொடுக்க போவதில்லை என்றும் சிவில் நீதிமன்றிலேயே தான் விசாரிக்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றார். தற்போது அவர் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தங்கும் கட்டடத்தின் முதலாவது தளத்தில் - முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் மொஹான் சமரசேகர தங்கிய வீட்டில் - தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

நன்றி................செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள்.

[Monday, 2010-02-22 09:37:10]

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர்.

தளபதி வைஸ் அட்மிரல் மொஹான் சமரசேகர தங்கிய வீட்டில் - தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

நன்றி................செய்தி

ஆஹா வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே :wub: :wub: :) :) :D

உதைக்கும்போது பக்கத்தில் யாரும் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். படாத இடத்தில் பட்டுவிடப் போகிறது. :wub::wub:

கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!

ஹி ஹி ஹீ... தலைப்பைப் பார்த்ததும், பொன்ஸ் யாரோ பெரும் புள்ளியைத் தான் எட்டி உதைத்தார் என்று நினைச்சன்... அட் லீஸ்ட் ஒரு புலநாய்வு அதிகாரியைத் தன்னும்.... என்ன ராணவத் தளபதி இவன்? சா... :wub:

...இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர் தனது இரண்டு காதுகளிலும் விரல்களை அழுத்தி, ஒலிபெருக்கியில் வெளியான விடயங்களை தான் கேட்பதற்கு தயாரில்லை என்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

...

நன்றி................செய்தி

என்ன இது சின்னபுள்ளத் தனமா இருக்கு... :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

அடடா கழுதை கோவிக்க போகுது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.