Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்புச் செயற்படவில்லை - இரா.சம்பந்தன்

Featured Replies

இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற் படுகின்றது என்ற சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரின் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்த மான நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளது. அதன்படி நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகி றோம். நாமும் இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம். ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை முடிபுக்கு கொண்டு வருவதற்குரிய திட்டங்களுடன் செயற்படவேண்டும்.

நாம் இந்தியாவுக்கு சென்று புலிகளுக் கும் அரசுப் படைகளுக்குமிடையில் இடம் பெற்ற யுத்தத்தில் அகப்பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றுவதற்கு கோரினோம். ஆனால் அவர்கள் கூறுவது போன்று நாம் இந்திய அரசுடன் இணைந்து ஒன்றும் செய்யவில்லை. நாம் கலந் துரையாடிய பின்னர் சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் ஆகி யோர் இலங்கைக்கு வந்து போரை நிறுத்துமாறு கூறினார்கள். இலங்கை அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழர்களின் தன்னாட்சி, சுய நிர்ணயம் போன்ற கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுள் ளது என்பது பிழையான கருத்து. தமிழ் மக்களின் சுயநிர்ணய அடிப் படையில் அவர்கள் வாழ்ந்து வந்த தாயகத்தில் பூர ணசுயாட்சி வழங்கப் படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றார்.

http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் நெறிப்படுத்தலின் கீழ் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு

இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாகவும் நேரடி நெறிப்படுத்தலின் கீழும் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குழு ஒன்று இம்முறை கூட்டமைப்பின் தேர்தல் பணிகளை நேரடியாக வழிநடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றுவார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய இனம் என்பது பற்றியும் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முதன்மைப்படுத்திய தீர்வினையே தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவுள்ளது.

இந்தியாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள உதயன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகள் மூலமாக கூட்டமைப்பினருக்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

அதேவெளை கூட்டமைப்பு மாற்று குழுவினருக்கு எதிரான செய்திகளையும் இந்த பத்திரிகைகள் வலிந்து வெளியிட ஆரம்பித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையான விடயங்களை சென்றடையக் கூடிய அனைத்து வழிகளையும் இந்தியா மூடிவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்களை சரியான திசையில் சிந்திக்க வைப்பதற்கு வாய்புகள் அற்ற நிலைக்கு தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி பதிவு

The following persons are the candidates in the TNA nomination list:

•Mavai Somasuntharam Senathirajah - politician

•Arumuagam Kanthaiah Premachandran - social worker

•Appathurai Vinayagamoorthy - lawyer

•C. V. Kanthaiah Sivagnanam - charted accountant

•Soosaipillai Xavier Kulanayagam - draftsman

•Arumugam Nadesu Rasenthiran - accountant

•Kanthiah Arunthavapalan - principal

•Sivagnanam Sritharan - head master

•Eswarapatham Saravanapavan - industrialist

•Rasarathinam Sivachandran - professor

•Ponuthurai Ayinkaranesan

•Mudiyappu Remedias - lawyer

.... அவர்கள் கூறுவது போன்று நாம் இந்திய அரசுடன் இணைந்து ஒன்றும் செய்யவில்லை. நாம் கலந் துரையாடிய பின்னர் சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு வந்து போரை நிறுத்துமாறு கூறினார்கள். இலங்கை அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை......

:):D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.