Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 00:25

பி.எம்.முர்ஷிதீன்

kajendarkumar-60-new.jpg

EXCLUSIVE புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாங்கள் உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கட்சி யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் போட்டியிடுவதாகவும் கூறினார்.

ஏனைய கட்சிகளைப்போல் இல்லாமல் அண்மைக்காலம்வரை,தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமது அடிப்படை கொள்கைகளுடன் இணைந்து போனதால்தான் எம்மால் கூட்டமைப்பின் சம பங்காளியாக இருக்க முடிந்தது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

எத்தனை ஆசனங்களை எதிர்ப்பார்ர்க்கின்றீர்கள் என தமிழ்மிரர் கேட்டபோது எத்தனை ஆசனங்கள் என்பதைவிட, தாங்கள் வெற்றிபெறுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

http://www.tamil.dailymirror.lk/செய்திகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!!!

உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இவர்களும் சேர்ந்து வேலைசெய்யும் காலம் வரும். யாழ் மக்கள் சிங்கள இனவாத கட்சிகளில் போட்டி இடும் தமிழர்களை நிராகரித்து சுயேட்சை யாக நிற்கும் உணர்வுள்ள தமிழர்களையும், கூட்டமைபின் பிரதிநிதிகளையும் தெரிவு செய்து எங்கள் பிரதிநிதுவத்தை உறுதி செய்ய வேண்டும்.

சிங்கள கட்சிகளில் போட்டி இடும் தமிழ் வேட்பாளர்கள் ஒன்றும் செய்ய போவதில்லை அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய பட்டால். 30 இலட்சம் பெறுமதியான ஒரு வாகனம். சாரதி. 5 பொலிஸ்காவலர்களுடன் வலம் வந்து 5 வருடம் கடத்தி விட்டு மாதம் ஓய்வூதியம் எடுத்து கொண்ண்டு வீடு சென்று விடுவார்கள்.

இதை போட்டி இடும் ஒருவர் நேரடியாகவே சொல்லி உள்ளார்.

தமிழ் தேசிய கூட்ட்மைப்பும், மற்றும் சுயேட்சை தமிழர்களும் அவர்களும் ஒன்றும் செய்து விடமுடியாது தான்.

இருந்தாலும் எங்கள் பிரதிநிதித்துவம் இருந்தால் ஒரு நிரந்தர தீர்வுக்காக இந்தியாவையோ மேற்குலக நாடுகளையோ நெருக்கடி கொடூத்து தீர்வு ஒன்றுக்கு முயற்சிக்கலாம்.

சில அற்ப சலுகைகளுக்காக சிங்கள கட்சிகளின் தமிழர்களை ஆதரிப்பது. இன்னும் படுகுழிக்குள் போவதற்கு சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்தேசியத்தை பற்றி கதைக்கிறம்,கடல் கடந்த அரசு குறித்து புலம்பெயர் மக்களுடன் கதைக்கிறம் என்று அறிக்கை விட்டால் தான் தேர்தலிலை வோட் விழும் என்று நல்லாத்தான் தெரிஞ்சு வைத்திருக்கிறார்.

பிழைக்க தெரிந்த மனுசனப்பா

ஏம்பா.....இந்த புலம்பெயர்ந்தவங்க எல்லாரும் கேணையங்கள் என்று ஸ்ரிக்கர் ஒட்டிட்டு திரியுறாங்களோ.. :lol: .

உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!!!

அனைத்து தமிழர்களையும் (புலம்பெய்ந்த மக்களையும்) இணைத்து செயற்பட தயாராக இருக்கும் கஜேந்திரன் அவர்கள் வெற்றி பெற வேண்டும் எண்று நானும் வாழ்த்துகிறேன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாங்கள் உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கட்சி யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் போட்டியிடுவதாகவும் கூறினார்.

மன்னார்,வவுனியா,முல்லைதீவு,கிளிநொச்சி,மட்டகளப்பு,அம்பாறை தமிழீத்துக்குள் வர தகுதி அற்றவையா அல்லது கட்சிக்கு ஆட்கள் இல்லையா? :lol::lol::D திகோணமலையில் மகிந்தாவிற்க்கு ஆதரவு தெரிவித்து மகிந்தாவின்கட்சிக்கு பாடுபட்டவர் உருப்பட்ட மாதிரித்தான். :D:D:D

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அறிக்கை வரவேற்கத்தக்கது.புலம் பெயரந்த தமிழர்களும் தாயகத்தமிழர்களும் வேறுவேறல்லர்.எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.