Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும்

Featured Replies

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன: தமிழ்நெற்

திகதி: 05.03.2010 // தமிழீழம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா அரசு ஒய்வுபெற்ற படையினருக்கு வழங்கி வருகையில் சிறிலங்கா அரசின் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டு உதவிகளை வழங்கி வருவதாக தமிழ் மக்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு அதிக உதவிகளை வழங்கிய நாடாக சீனா முன்னிலையில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடபகுதிக்கான சீனாவின் உதவிகள் அங்கு சிறீலங்கா அரசு ஒரு இராணுவமயப்படுத்தலை உருவாக்க உதவியுள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களின் தனித்துவத்தை சிதைக்கும் முயற்சிகளில் சிறீலங்கா அரசுக்கு இந்தியா உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அதேசமயம் மேற்குலகத்தின் அழுத்தங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக உடன்படிக்கைகளின் அடிப்படையில் சிறீலங்கா இந்தியாவுக்கு அதிகளவு புடவைப் பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும் என சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் உதவித்திட்டத்துடன் வடக்கு – கிழக்கில் குடிசார் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டால் அது தற்போது அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணக்கையை குறைக்கலாம் என தமிழர் தரப்பு தெரிவித்துள்ளது. அதனை மேற்கொள்ளுமாறு தென்னிலங்கையில் இருந்தும் குரல்கள் கொடுக்கப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப்பகுதிகளின் குடித்தொகை வீழ்ச்சி கண்டு வந்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஈழத்தில் நடைபெறும் இனஅழிப்பு போரை விளங்கிக்கொள்ளாது மேற்குலகம் நடிப்பதுடன், அதனை இனஅழிப்பு போர் அல்ல என்பதையும் கூற முற்பட்டு வருகின்றது. ஒரு நாடு என்ற கோட்பாட்டின்கீழ் தீர்வு என அவர்கள் தம்மையும் குழப்பி ஏனையவர்களையும் குழப்பி வருகின்றனர்.

கண்துடைப்புக்காக மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், இராணுவத்தின் மேற்பார்வையில் அங்கு ஏழை மக்களை கொண்ட சமூதாயம் ஒன்று உருவாக்கப்படுகின்றது. படைகளில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களை நிரந்தரமாக ஒரு மேற்பார்வையின் கீழ் கொண்டுவர அரசு முயல்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏறத்தாள இரு தசாப்தங்களாக யாழ்குடநாட்டில் தமிழ் மக்களின் வீடுகளில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் அங்கு வாழும் மக்களை ஒரு திறந்த சிறைச்சாலையினுள் தள்ளியுள்ளது. அண்மையில் கைப்பற்றப்பட்ட வன்னிப் பகுதியில் எஞ்சிய நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களில் படையினர் நிலைகொண்டுள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற நிர்வாக அதிகாரிகள் கூட தமது விடுதிகளுக்கு செல்லமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினரல் கைப்பற்றப்பட்ட வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை சீனா நிர்மாணித்து வருவதாக சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரியா கடந்த வருடம் கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு சீனா 1.2 பில்லியன் டொலர்களை உதவியாக சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது. அது கடந்த வருடம் சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட வெளிநாட்டு உதவிகளில் அரை பங்கிற்கும் அதிகமாகும் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா தற்போது சீனா, இந்தியா, ஈரான், யப்பான், மியான்மார் ஆகிய நாடுகளின் பின்னால் அணிதிரண்டுள்ளது.

கொழும்பு தொடர்பில் சீனா காண்பித்துவரும் ஈடுபாடுகளை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன, ஆனால் தமது இந்திய அரசு சிறீலங்காவில் என்ன செய்கின்றது என்பதை வெளிக்கொண்டுவருவதை அந்த ஊடகங்கள் தவிர்த்துவருகின்றன என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்திற்கான கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கூட ஏற்றுக்கொள்வதற்கு மேற்குலகமும் பின்னடித்து வருகின்றது. எனினும் சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டியது முதன்மையானது என்பதில் மேற்குலகம் அழுத்தமாக குரல் கொடுத்து வருகின்றது.

எனினும் கொழும்புடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்த இந்தியா முனைந்துவருவது சிங்கள மக்களின் அரசியல் பொருளாதார நலன்களை பெறுவதற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாக அழித்துவிடம் செயலாகும் என்தே தமிழ் மக்களின் மனங்களில் எழுந்துள்ள கேள்விகள். கடந்த ஆறு தசாப்தங்களாக இந்திய மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை வலுவடைய வைத்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைப்பதில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்காக அது அதனை மேலும் மேலும் மேற்கொண்டு வருகின்றது என தமிழ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் ஆளும் தரப்பும், அதன் ஊடகங்களும் தமது சொந்த நலன்களுக்காகவும், பணம் சேர்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை சிறுமைப்படுத்த முயன்று வருகின்றது என அவை மேலும் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவில் நடைபெற்ற இனஅழிப்பு போரை அனைத்துலக சமூகம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியுள்ளதால் சிறீலங்காவில் பிரச்சனைகளும், அதிகார பேட்டிகளும், நீதி மறுக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து சென்றுள்ளதாக தமிழ் மக்கள் தரப்பு தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழம் இ நியூஸ்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3876&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைப்பதில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது

நாங்கள் மட்டும் இந்தியாவை சிதைக்க வேண்டும் ஆனால் அவர்கள் தமிழ்மக்களின் அபிலாசைகளை சிதைக்ககூடாது

  • தொடங்கியவர்

நாங்கள் மட்டும் இந்தியாவை சிதைக்க வேண்டும் ஆனால் அவர்கள் தமிழ்மக்களின் அபிலாசைகளை சிதைக்ககூடாது

எல்லாம் தாக்கத்துக்கான மறு தாக்கம். அவர்கள் ஆரம்பித்து வைத்தது தான் எல்லாமே.

நாங்கள் மட்டும் இந்தியாவை சிதைக்க வேண்டும் ஆனால் அவர்கள் தமிழ்மக்களின் அபிலாசைகளை சிதைக்ககூடாது

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போலி சாமியார்கள். ...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் எல்லோரும் ஒரு குழுமமாக இருந்திருந்தால் சிங்களவனை விட நாங்களே பெரும்பான்மை இனமாக இருந்திருப்போம். அப்போது எமது ஆதரவைப் பெறவே போட்டி இருந்திருக்கும். :)

உண்மையில் தமிழர்கள் எல்லோரும் ஒரு குழுமமாக இருந்திருந்தால் சிங்களவனை விட நாங்களே பெரும்பான்மை இனமாக இருந்திருப்போம். அப்போது எமது ஆதரவைப் பெறவே போட்டி இருந்திருக்கும். :)

பிரித்து ஆள்வது எப்படி எண்று நூல் எழுதியவர்கள் வடகதியர் தென்னிந்தியர்களையும் தென்னகத்தார் எல்லாரையும் பிரித்து ஆள்வதில் எப்போதும் வெற்றி கண்டும் இருக்கிறார்கள்... தங்களுக்கு ஆதரவாக ஒரு குழு இல்லாது பல குழுக்களை வைத்து இருப்பது என்பது இந்தியாவின் எப்போதைய நிலைப்பாடு ஆகும்... எப்போது தனது எலும்புக்காக பல குழுக்க இருந்தால் தான் விசுவாசத்தின் அளவு அதிகமாக இருக்கும்...

இந்திய ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான தமிழ் குழுக்கள் அனைத்தையும் முதலில் புறம்தள்ள பட வேண்டும் அல்லது மாற்றம் காண வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் எல்லோரும் ஒரு குழுமமாக இருந்திருந்தால் சிங்களவனை விட நாங்களே பெரும்பான்மை இனமாக இருந்திருப்போம். அப்போது எமது ஆதரவைப் பெறவே போட்டி இருந்திருக்கும். :)

இன்று இருப்பதையும் பிரிக்கும் வேலையைச்செய்வோர் இப்பொழுதாவது உணரவேண்டும்

இன்று இருப்பதையும் பிரிக்கும் வேலையைச்செய்வோர் இப்பொழுதாவது உணரவேண்டும்

நிச்சயமாக... கூட்டமைப்புக்கு பலமாக இருந்த ( இப்போதும் உறுப்பினர்களாக இருப்பவர்களை விட அதிகமான மக்களால் தெரிவு செய்யப்பட) பல உறுப்பினர்களை இந்தியாவின் ஆலோசனைக்கு அமைய வெளியேற்றிய சம்பந்தர் இதை கவனத்தில் எடுக்க வேண்டும்...

Edited by தயா

நிச்சயமாக... கூட்டமைப்புக்கு பலமாக இருந்த ( இப்போதும் உறுப்பினர்களாக இருப்பவர்களை விட அதிகமான மக்களால் தெரிவு செய்யப்பட) பல உறுப்பினர்களை இந்தியாவின் ஆலோசனைக்கு அமைய வெளியேற்றிய சம்பந்தர் இதை கவனத்தில் எடுக்க வேண்டும்...

நிச்சயமாக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.