Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து

Featured Replies

அநாதை அகதிப் பயலுகளா….!

அநாதை அகதிப் பயலுகளா…

எப்போதும் இங்கு தெருவிலோஇ முச்சந்தியிலோ

எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும்

வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..!

கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம்.

குளிர்கூட ஊடுருவ முடியாத் தோலுக்குள்

எப்படிச் செல்லும் ‘அகதி;’ ச் சொல்.

அப்படியாரும் சொல்லிக் காட்டாதுவிட்டால்

இந்த வாழ்வே இந்திரவாழ்வென நாமும்

சுந்தரக்கனவுகளில் இந்நேரம் கரைந்திருப்போம்.

இந்தமுறை குரல்வந்த திக்கு தொப்புள்கொடித்

தமிழ்நாட்டின் செங்கல்ப்பட்டிலிருந்து..!

யாரோ ஒரு காக்கிச்சட்டை சொன்னான் என்றே

ஊடகம் எல்லாம் சொல்லின-

யாரென்று பேர் தெரியவில்லை.

ஆயினும் அவனுக்கு ஒரு கும்பிடு!

அப்பனே உன்னைத் தெரியவில்லை

உன் முகமும் புரியவில்லை.

ஆனாலும் அடிக்கடி நீ இப்படிச்சொல்லிக்

கொண்டேயிரு.

நீயும் இதைச்சொல்லாதுவிட்டால்

சொந்தமாக ஒரு தாயகமும்

குந்தி இருந்து கூழ் குடிக்க ஒரு குடிலும் தேவையென்ற

நினைப்பை நாமும் உதறித்திரிந்திருப்போம்.

எங்களுக்காக போய் எரிந்த உத்தமரை மறந்து

சிவனே என்று து}ங்கிக்கிடந்திருப்போம்.

முள்வேலிக்குள்ளிருந்து வெளிவரும் ஏக்கக்குரல்களை

ஏனென்று கேட்காமலே யாரோபோல நடந்திருப்போம்.

நீயும் உன்னைப்போலவே இங்கு புலத்திலும்

யார் யாரோ அடிக்கடி ‘அகதி’ என்றும்

‘நாட்டுக்குபோ’ என்றும் எம் முகத்திலறைந்தாற்போல

சொல்லும்போதுதான் எங்களின்

அந்நியக்குடியுரிமைக்கனவு அடிபட்டுப்போகிறது.

கிறீன்கார்ட் என்றும் சிற்றிசன் என்றும்

பீ.ஆர் என்றும் நாம் நித்தம் து}ங்கி எழும்

கனவுவாழ்வினுள் தீ எறிந்து போயுளது நீ

சொன்ன ‘அநாதை அகதிப் பயலே’க் குரல்.

ஓண்டவந்த எமக்கு அண்டி இடம்தந்து

அகதித்தகுதியும் தந்து அவனவன் தந்த

குடியுரிமைச் சான்றிதழாலும்இ கடவுச்சீட்டாலும்

ஓய்யாரமாய் தலைவாரிக் கொண்டிந்தோம்.

கால்கள் அற்றவர்க்கு சதங்கையும்

முகங்களை தொலைத்தோருக்கு ஒப்பனையும்

ஏதுக்கென்று சட்டென்று ஓங்கிஅடித்து

அகதிவாழ்வுக் குமிழியை போட்டுடைக்கிறது.

அந்த நடு இரவினில் நீ சொன்ன சொற்கள்.

இன்னும் உறைக்க வேண்டும் எமக்கு.

அடிமைப்பட்டுள்ள தேசத்தின் மக்கள் போலவா

நாம் நடந்தோம்.- இங்கு நித்தமும்

நட்சத்திரவிழா நடாத்தி அல்லவா நாள்கடத்தி

வந்துள்ளோம்.- தொன்மை மூத்தகுடி என்ற

வாழ்வு தெலைத்து -இரவல் தேசத்தில்

இரண்டாம் இடத்தில் இருப்பதற்கான

வாழ்வுப் போட்டியாகவே நகர்துளது எமது வாழ்வு.

எப்படியோ நாம் இருக்கும் நிலையை

நன்றாய் இடித்துச் சொன்ன

தமிழ்நாட்டு காவலாஇ

எம்மை அகதி என்றாய் – நல்லது

ஏற்றுக்கொள்கிறோம். -ஆனால்

உன்னை ஏதோ கட்டற்றசுதந்திர மனிதனாக

நீ காட்டிக்கொள்வதுதான் கொஞ்சம்

இடிக்கிறது. -எம்மை எட்டி உதைத்து

சிங்களவன் சொல்கிறான் அடிமை என்று. -உன்னை

கட்டி அணைத்து ஆரியம் சொல்லுது அடிமை என்று.

நாம் துரத்தப்படும் அடிமைகள். -நீயோ

வீட்டுக்குள் வளர்க்கப்படும் அடிமை.

எங்கள் நெஞ்சுக்குழிக்குமேலே

ராஜபக்சாக்களின் இரும்புச்சப்பாத்துக்கள்.

உன்னுடைய முதுகுக்குமேலே ஒய்யாரமாக

ஆரியத்தின் பாதணிகள்.-யாரோ ஒரு

பண்டாரியும்இ முகர்ஜியும் கேரளத்து

மேனன்களும் உனக்கான உன் விதியை

எழுதித் செல்லும்போது நீயோ தமிழகத்து

திரைப்படத்தின் வெளிச்சங்களுள் புதைந்துபோய்

‘அகதி’என்றும் ‘அநாதைப்பயல்கள்’ என்றும்

எம்மை விழிப்பது நல்ல முரண்தான் போ.

எங்கள் இருப்புணர்த்தி எமை எழுப்ப ஒரு

கரிகாலன் வந்ததுபோல உந்தன் கனவுகலைக்க

காலம் ஒரு வீரனை பிறப்பிக்கும். -அதுவரைக்கும்

எம்மை நோக்கி நீ இன்னும் கத்து.!

அகதி’இ அகதிப்பயலுகளென்று….

ச.ச.முத்து 07.03.2010

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

குண்டூசியால் குத்துவதைப் போல் இருக்கிறது.பாராட்டுக்கள்.

நல்ல கவிதை, சலசலப்பற்ற ஆழமான சிந்தனையோட்டம்.

இணைப்பிற்கு நன்றி

முகம் தெரியாத முத்துவை வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா... கனிமொழி மாநாட்டு க்கு கரும்புள்ளி போல் தமிழர் சார்ந்து எந்த போராட்டமும் வரக்கூடாது என்று தமிழ் ஈன த்தலைவர் நினைக்கிறார்... அதனால்தான் செங்கல் பட்டு முகாம் எதிலிகளுக்கு லாடம் கட்டபட்டது..

"என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா.."

இது முழுக்க ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காஞ்சிபுரம் எஸ்.பி. ப்ரேம் ஆனந்த் சின்கா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரிலே செங்கல் பட்டு முகாமில் செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படையினரின் குரல் தான் இது

அது போகட்டும் ..

இன்று மட்டும் கனிமொழி மாநாட்டுக்கு கோவையில் 490 மேலான அறைகள் புக் செய்யபட்டுள்ளனவாம்...சூடு சொரணை உள்ள ஈழதமிழர் யாரும் கனிமொழி மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்பதே நமது வேண்டுகோள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.