Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறையவில்லை - கிலாரி கிளிங்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிபுக்கு வந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறைவடையவில்லை. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கப் போக்கு வீழ்ச்சியடைந்து வந்துள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளிங்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மொத்தச் சனத்தொகை 16 சதவீதமானதாகவே காணப்படும் வேளையில் இந்த கொலைகள் மற்றும் வன்முறைகள் ஏற்புடையதாக இல்லை. இந்த கொலை மற்றும் கடத்தல் வேலைகளை அரசாங்கத் துடன் இணைந்த துணை இராணுவம் மற் றும் கடத்தல்கள் காரணமற்ற கொலைகள் போன்ற சட்டவிரோத செயல்களை அரசாங்கத்துக்காக செய்துவந்தன.

இந்த நிலையில் அரசாங்கம் பாரிய கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசாங்கமானது அநா வசியமான அவசர கைதுகள், தடுத்து வைப்பு கள், முறையற்ற தடுப்பு முகாம்கள், ஊடக வியலாளர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் எதிரான வன்முறைகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், ஊடகங்களை சுயலாப நோக்கில் பயன்படுத்தல் போன்ற அடிப்படை யில் குற்றவாளியாக கருதப்படுகிறது.

இதேவேளை மனித உரிமைகள் கண் காணிப்பாளர்களின் தகவல் அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் தாக் கப்பட்டு கொல்லப்பட்டதுடன் அவர்களின் உரிமைகள் மீறப்பட்டு பல்வேறு துன்புறுத் தல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மீது நேரடியான அதிகாரங களை பிரயோகித்துள்ளதுடன் அவர்களை அசெளகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்தவருடம் மே மாதம் இராணுவத் தினர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாகக் கூறுகின்றனர். இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சுதந்திரமாக ஒன்று கூடல், பேச்சு சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம், நடமாட்ட சுதத்திரம் என்பவற்றையும் பாதித்தது.

இதற்கிடையில் இறுதி நேரத்தில் பொது மக்கள் விடுதலைப் புலிகள் அரசாங்கக்கட் டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுத்ததுடன், சிறுவர்களையும் வயது வந்தவர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். அத்துடன் பொதுமக்களின் மத்தியில் தமது ஆயுதங்களை வைத்து தாக்கு தல் நடத்தியுள்ளனர்.

இறுதியில் யுத்தம் முடிபுக்கு வரும் தறுவாயில் மே மாதம் விடுதலைப் புலிகள் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்த தீர்மானித்தனர். இந்த தாக்குதல்கள் அரசியல்வாதிகள், சொத்துக்கள் பொது மக்களை இலக்கு வைத்ததாக அமைந்தன.

இந் நிலையில் அரசாங்கமும் அதன் துணை இராணுவ மற்றும் கோசக் குழுக் களும் மனித உரிமைகள் சாசனங்களின் சில வற்றின் சரத்துக்களை மீறியுள்ளன. ஒரு நபரின் தனிப்பட்ட நடமாட்ட சுதந்திரம் உள்ளிட்ட சுய இறைமையும் மீறப்பட்டுள்ளது.

கடத்தல்கள் அதிகரிப்பு இதேவேளை கடத்தல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அவை எதனையும் மேற்கொள் ளும் அரசாங்க சார்பான குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் இதுவரை யில் மேற்கொள்ளப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankamam.com

இப்பதான் தூக்கம் முறிஞ்சதோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருசமா இரண்டு இலட்சம் தமிழர் என்ன தாங்களா தங்கட தலைக்கு மேலை தொடுப்பு குண்டே போட்டே செத்தவை??

கண்டி மொட்டை பிக்குகளும், சிங்கள சாதி வெறியரும், ஸ்ரீ பார்சி காந்தி குடும்பத்துடன் சேர்ந்து எங்களை அழித்துவருகிரார்கள். எங்களது குரலையும் அடக்க தமிழ் பேசும் அடிவருடிகளை வைத்து எங்களுக்கு மேலே சேரை வாரி இறைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறையவில்லை - கிலாரி கிளிங்டன்

இஞ்சை உந்த பகிடிதானே வேண்டாம் எண்டுறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.