Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக அதிசயமாக விளங்கும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக அதிசயமாக விளங்கும் இலங்கை

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கைத் தீவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் இலங் கைத் தீவு "தென்னாசியாவின் அதிசயம்'' ஆக மாறும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குத் தமது "மஹிந்த சிந் தனை' திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அடுத்த தசாப்தத்தில் இலங் கையை "தென்னாசியாவின் அதிசயம்' ஆக மாற்றும் நிலைக் குத் தமது "மஹிந்த சிந்தனை' இட்டுச் செல்லும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதற்கான நடவடிக் கைகள் அடுத்த ஆறு ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். தமது அடுத்த ஆறு ஆண்டுகாலப் பதவி உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் தான் இந்த ஆறு ஆண்டு இலக்கை அவர் குறிப்பிட்டாரோ என்னவோ..?

எது எப்படியென்றாலும், இலங்கைத்தீவை இனித்தான் தென்னாசியாவின் அதிசயமாக மாற்றுவது பற்றி அதிபர் மஹிந்த ராஜபக்ஷ பேசுகின்றார். ஆனால் வேறு பல விட யங்களில் தென்னாசியாவினது மட்டுமல்ல உலகில் அதி சயமாகவே இலங்கைத்தீவு மாறியிருக்கின்றமை மறைக் கப்படக் கூடியதல்ல.

பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கின்றோம் என்ற பெயரில் ஓர் இனக் கட்டமைப்பையே துவம்சம் செய்து சீரழித்து சின்னாபின்னமாக்கி நாசப்படுத்திய கொடூரம் அரச பயங்கரவாதமாக நவீன உலகில் அப்பட்டமாக வெளிப் படையாக வெளிவெளியாக கட்டவிழ்ந்தபோது அதைத் தடுக்க வழியின்றி சர்வதேசம் மௌனம் பேணி வாளா விருந்து அடங்கிக் கிடந்த அதிசயம் இந்தத் தீவில்தான் அரங்கேறியது.

அப்பாவிப் பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்படும் இன வெறியாட்டம் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குப்பட்டுள்ள லட்சக் கணக் கான சனக் கூட்டத்தின் மீது ஏவிவிடப்பட்ட போது, சர்வ தேசமும் உலகப் பொதுமன்றமுமான ஐ.நாவும் திக்கற்று வாய்புதைத்து அடங்கிக் கிடந்த அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்டதும் இந்த இலங்கைத் தீவில்தான்

சிறுபான்மையினமான தமிழ் பேசும் மக்களுக்கு நியா யம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை ஒரு புறம் அளித்த படி, மறுபுறம் அதை நிறைவேற்றாமல் தன்னிஷ்டப்படி தன் விருப்பப்படி சிங்கள பௌத்த மேலாண்மையைத் திணிக்கும் விதத்தில் தனது தென்கோடித் தீவில் இருக்கும் "இந்துணூண்டு' அளவுடைய இலங்கைத்தீவு நடந்து கொள்ள, அதைத்தட்டிக் கேட்டு தனது தமிழகமாநிலத்து டன் தொப்புள்கொடி உறவுவைத்துள்ள ஈழத்தமிழர் களுக்கு நியாயம் செய்யும்படி வற்புறுத்துவதற்கு வகையின்றி அயல் நாடான இந்தியா விழிபிதுங்கி நிற்கும் அதிசயம் இங்குதான் நடக்கின்றது.

இலங்கை என்று ஒரு சிறிய தீவு, அயலில் வாழும் வல் லாதிக்க சக்தியாகத் திகழும் இந்தியாவிற்கு கண்ணில் விரலை விட்டு ஆட்டும் முறையில் ராஜதந்திர ரீதியில் நடந்துகொள்ளும் அதிசயம் இங்குதான் நடைபெறுகின் றது.

புலிகள் மீதான தாக்குதல் அல்லது இராணுவ நடவ டிக்கை என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள், யுத்தக் குற் றங்கள் ஆகியவை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப் பிய ஒன்றியம் போன்ற மேற்குலக நாடுகள் நன்குணர்ந் துள்ள போதிலும் அறிந்துள்ள போதிலும் அந்த அட்டூ ழியங்கள் குறித்து ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கஇயலாத வக்கற்ற வகையற்ற திராணியற்ற நிலையில் அவை அல்லாடும் அதிசயம் இந்த இலங்கைத் தீவை ஒட்டித்தான் இடம்பெறுகின்றது. பெரும் மனிதப் பேரழிவுக்கும் வரலாறு காணாத இனத்துவச் சீரழிவுக்கும் ஒரு தனித் தேசியத்தின் கணிசமான சொத்து அழிவுக்கும் காரணமான கொடூரயுத்தத்தை குரூரமான இராணுவ நட வடிக்கையை மனிதாபிமான நடவடிக்கை என்று விதந்து போற்றி, ஏத்தி மகிழும் உலக மகா அதிசயம் கூட இந்த இலங்கைத் தீவில்தான் அண்மைக் காலத்தில் நடந்தேறி யது. பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த யுத் தத்தை நடத்தி முடித்துவிட்டு ஒரு தமிழ் மகனைக் கூடக் கொல்லாமல் வரும் அதிசயமீட்பு முயற்சியொன்றை இலங்கை இராணுவம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து கொண்டது எனப் பீற்றிக் கொள்ளும் அதிசயமும் இங்கு தான் இடம்பெற்றது.

ஓர் இனத்தின் நீதி, நியாயமான அபிலாசைகளை ஆயுத முனையில் அந்தத் தேசிய இனத்தை வெற்றி கொண்டு அடக்கி அதன் மூலம் மறுத்தபடிஅந்த இனத்தை பேரின வாத மேலாதிக்கத்தின் நிரந்தர அடிமைத் தனத்துக்குள் நிரந்தரமாக சங்கிலியிட்டுப் பிணைத்துக் கொண்டு அந்த இனத்தை பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்து சுதந்திரத்தையும் மீளப்பெற்றுக் கொடுத்துள்ளதாக ஆட்சித் தரப்புஅதிகாரபீடம் இலகுவாகப் புளுகக் கூடிய அதிசயச் சூழல் இந்தத் தேசத்தில்தான் நிலவுகின்றது.

இத்தகைய கொடூரங்கள், மேலாதிக்க அடக்கு முறை கள், கோர யுத்தங்கள், கற்பனை பண்ணியே பார்க்க முடி யாத பேரழிவுகள் ஆகியவை திணிக்கப்பட்டு சின்னாபின் னமாகித் தமது இனம் சிதறிக் கிடக்கின்ற சூழ்நிலையிலும் எஞ்சிய இனத்தையாவது காப்பாற்றிப் பாதுகாத்து, இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, கௌரவ வாழ்வை ஈட்டுவதற் காக இச்சமயத்திலாவது ஐக்கியப் பட்டு ஒன்று திரண்டு நிற்க வேண்டிய தமிழினத்தின் தலைவர்கள் அதை மறந்து தமது இனத்தை மேன்மேலும் சீரழிக்கும் விதத்தில் பிளவு பட்டு, தமது இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து தமது மக்களை நலிவு படுத்துகின்றமை மட்டுமல்லாமல், அடி மைப்படுத்தும் பேரினவாதத்துக்கு கூஜாதூக்கி கால் பணிந்து, ஏவல் பணியாளர்கள் போல ஏளனமாக நடந்து கொள்ளும் அதிசயமும் இங்கு தான் நடக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ குறிப்பிடும் தென்னாசியாவின் அதிசயம் ஆக இலங்கை இனித்தான் மாற வேண்டும் என்பதல்ல. அது ஏற்கனவே பல விதங்களிலும் உலகத்தின் அதிசயமாக மாறிவிட்டது என்பது தெளிவாகும்.

நன்றி - உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.