Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ வேட்பாளர் சி.வி.கே சிவஞானம் ஜி.ரி.என் இற்காக தீபச்செல்வனுக்கு அளித்த பேட்டி

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் யாழ் நகர முன்னாள் ஆனணயாளரான சீ.வி.கே சிவஞானம் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவராகவும் இருந்தவர். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு பணிகளை செய்ததுடன் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலம் இருந்தவர். தமிழ் தேசியக் கொள்கையில் மிகுந்த பற்றுக்கொண்ட இவர் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வன்னி மாணவர்களுக்கும் உதவியிருந்தார். குளோபல் தமிழ் செய்திகளுக்காக சி.வி.கே. சிவஞானம் அவர்களை நேரடியாக சந்தித்து இந்த நேர்காணலை மேற்கொண்டேன்.

தீபச்செல்வன் : யுத்தத்தின் பின்னர் இன்று தமிழ் அரசியலில் பிளவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் ஏற்பட்டு மக்களை கடுமையான குழப்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியிருக்கின்றன. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் இந்த விடயங்கள் எங்களை தோல்வியுறச் செய்திருக்கின்றன என்று நினைக்கிறேன். ஈழ அரசியலில் மிகுந்த பற்றுக் கொண்ட அர்ப்பணிப்புக்களைச் செய்த நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சி.வி.கே. சிவஞானம் : இந்தப் பிளவுகளையும் சிதைவுகளையும் உடைவுகளையும் மிகுந்த வேதனையுடன் பார்க்கிறேன். ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஒற்றுமை நோக்கி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதுவும் சிதைந்து பெயரளவுக் கூட்டணியாக கட்சியாக உள்ளது. ஆயுதப் போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிதறிப்போய் மூன்று அணிகளாக நிற்பது கவலைக்குரியதும் ஏமாற்றத்துக்குரியதுமாகும். இவை எமது தமிழ் தேசிய உணர்வுகளிலும் முன்னெடுப்புக்களிலும் குறுகிய கால பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

தீபச்செல்வன் : எங்களுக்குள் நாங்கள் சேறு பூசும் கலாசாரத்தையும் பழி வாங்கும் நோக்கங்களையும் தோற்கடிக்கும் நடவடிக்கைகளையும் எப்படி பார்க்கிறிர்கள்? அதனால் நமக்கு எவ்வாறான இடர்கள் விளையப் போகின்றன?

சி.வி.கே. சிவஞானம் : இந்தப் பிளவுகளின் முதல் விளைவாக நாம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே இழந்து விட்டோம் என்றே நான் நினைக்கின்றேன். நுண்ணிய வார்த்தைப் பிரயோகங்களில் முரண்படுவதும் சேறு பூசுவதும் தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்ததாக அல்ல. இவை மறுதரப்புக்கு உதவுவதாகவே அமையும்.

தீபச்செல்வன் : தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகள்இ உடைவுகள் குறித்து உடைந்து அல்லது சிதைந்து சென்றவர்கள் பல வகையில் தமக்கு ஏற்றபடி தங்கள் நியாயங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஆனால் மக்கள் எந்த உடைவுகளையும் விரும்பாதவர்கள் என்பதை நாம் அறிவோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த இனி எப்படி முன்னெடுக்க முடியும் என நினைக்கிறர்கள்?

சி.வி.கே. சிவஞானம் : தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் பாதுகாவல் அரணாக இருக்கின்றது. இனியும் இருக்க வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள் என்பதுடன் அவ்வாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் எனவும் மக்கள் எதிர் பார்க்கின்றார்கள். அடிப்படை இலட்சியங்களிலிருந்து பிறழாமல் அது இருக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டிருக்கும்.

தீபச்செல்வன் : கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தோல்வியை சந்தித்திருந்தீர்கள். ஆனால் நேர்மையான நீதியான தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்பதை பல வகையில் வலியுறுத்தி வந்தீர்கள். இம்முறை எதிர் கொள்ளப்போகும் தேர்தல் எப்படி இருக்கும்? அல்லது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

சி.வி.கே. சிவஞானம் : 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பொருத்தமானவை அல்ல என்பதை பலர் பகிரங்கமாக கூறியுள்ளார்கள். தருமவாக்குகள் பற்றி பேராசிரியர். சி.க சிற்றம்பலம் அவர்கள் பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார். இது பற்றி யாருக்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அவருக்கு அதை நான் தெளிவாகவும் துணிவாகவும் தெரியப்படுத்தினேன். இந்தத் தேர்தலிலும் மக்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து தமது வாக்குகளைப் பிரயோகித்து வேட்பாளர்களை ஒழுங்காக மதிப்பீடு செய்து தெரிவு செய்வதற்கான வாய்ப்பை எதிர்வரும் தேர்தல் வழங்குகிறது. மக்கள் இந்தக் கடமையை சரியாக செய்தால் பல குறைபாடுகள் நீங்கும். பிழையான தெரிவுகளை மேற்கொண்டு விட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை. பிரதேசத்திற்கு வருவதில்லை அங்கலாயப்படுவதிலும் விமர்சிப்பதிலும் குற்றம் சுமத்துவதிலும் தேடித்திரிவதிலும் அர்த்தம் இல்லை.

தீபச்செல்வன் : இலங்கை அரசாங்கம் தந்திரோபாய ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் வலுவை சிதறடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுகின்றன. அவை குறித்து என்ன கருதுகிறீர்கள்? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

சி.வி.கே. சிவஞானம் : இலங்கை அரசாங்கம் பல வழிகளிலும் தமிழ் தலமைகளை பலவீனப்படுத்தி சிதறடிக்க பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டுமாயின் தமிழ் தேசியத்தின் பால் அசைக்க முடியாத பற்றுறுதி கொண்டவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களை தெரிவுசெய்ய வேண்டும். அவர்கள் அந்த பற்றுறுதி நிலையில் ஸ்திரமாக நின்றுகொண்டு வீர வசனங்களை மட்டும் பேசாமல் மக்களது சமூகப் பொருளாதாரஇ வாழ்வாதாரஇ மீள்குடியேற்றம்இ புனர்வாழ்வு விடயங்களிலும் தீவிர அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.

தீபச்செல்வன் : இனி வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அர்த்தம் தரும் வகையில் உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அமைகின்றனவா?

சி.வி.கே. சிவஞானம் : நான் ஏற்கனவே கூறியதுபோல அடிப்படை இலட்சியங்களிலும் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். மக்களோடு மக்களாக உண்மையில் வாழ்ந்து அவர்களது எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் பிரதிபலிப்பவையாக பல்வேறு துறைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எனது தேர்தல் வாக்குறுதிகள் அமைகின்றன.

தீபச்செல்வன் : தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை எப்படி உணருகிறீர்கள்? யுத்தத்தில் எப்படி சிதைந்த வடக்கு கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை எப்படி கட்டி எழுப்ப வேண்டும்?

சி.வி.கே. சிவஞானம் : இணைந்த வடக்கு கிழக்கு அது தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் அம் மக்களுக்கு தன்னாட்சி மற்றும் சுயநிர்ண உரிமை உண்டு என்ற அரசியல் எதிர் பார்ப்புக்களுடன் விபரிக்க முடியாத மனித அழிவுகளையும் சொத்து இழப்புக்களையும் உட்கட்டுமான இழப்புக்களையும் சீர் செய்யும் வகையில் உரிய திட்டங்களை வகுத்து சர்வதேச உதவிகளுடனும் குறிப்பாக எமது புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளுடன் செயற்படுத்த வேண்டும். வெளிப்படை தன்மையுடையதும் நம்பகத் தன்மையுடையதுமான ஒரு கட்டமைப்பு இதற்காக உருவாக்கப்பட வேண்டும்.

தீபச்செல்வன் : இன்று நாம் எதிர்கொள்ளும் பண்பாடுஇ தொழில்இ நிலம் சார்ந்த நெருக்கடிகள் குறித்து சொல்லுங்கள். அதனால் விளையப்போகும் அல்லது எமது சமூகம் எதிர்கொள்ளப்போகும் விபரீதங்கள் குறித்து குறிப்பிடுங்கள்.

சி.வி.கே. சிவஞானம் : எமது மக்கள் எமக்கென தனியான பண்பாட்டுஇ கலாசார விழுமியங்கள் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும் என மிகவும் பணிவன்போடு வேண்டுகிறேன். எமது இழந்த இன அடையாளங்களை அழித்துவிட பல வழிகளில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறுபான்மை இனமே இங்கு இல்லை என்று கூறுவதும் இதன் ஒரு அம்சமே. இப்பொழுதே நாம் விழித்துக்கொள்ளா விட்டால் தமிழனம் என்று ஒன்று இந்த நாட்டில் இல்லை என்ற நிலையை தென்னிலங்கை அரசம் இனவாதிகளும் மிக விரைவில் உருவாக்கி விடுவார்கள். எமது மக்கள் விழிப்படைய வேண்டும்.

தீபச்செல்வன் : கடந்த காலத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது களத்தில் தொவது யாழ்ப்பாணத்தில் நீங்கள் இருந்திர்கள். அந்த உணர்வையும் அனுபவித்த நெருக்கடிகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சி.வி.கே. சிவஞானம் : இத்தகைய கொடுமை, அதிலும் ஒரு பெரிய நிலப்பரப்பில் மக்களும் உட் கட்டமைப்புக்களும்இ சொத்துக்களும், உடமைகளும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டதும் சுமார் முப்பதாயிரக்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் மூன்று நாட்களிலும் சாட்சியமின்றி கொல்லப்பட்டதும் என் ஆத்மாவை எப்பொழுதும் வருத்திக் கொண்டிருக்கிறது. அவல ஆத்மாக்களின் மண்ணாக இந்தப் பெரு நிலம் மாறியிருப்பதும் நெஞ்சை நெருடிக் கொண்டிருக்கிறது.

தீபச்செல்வன் : குளோபல் தமிழ் செய்திகளின் வாயிலாக புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சி.வி.கே. சிவஞானம் : அன்புக்குரிய எமது புலம்பெயர் உறவுகளே உங்களது உறவுகளின் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் உங்களின் உதவியையும் தாயகம் வேண்டி நிற்கிறது. இனி வரும் காலத்தில் நீங்களும் நாங்களும் இணைந்து இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

நேர்காணல் : தீபச்செல்வன்

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி இணைப்புக்கு

கை கோர்ப்போம்

பலம் சேர்ப்போம்

  • தொடங்கியவர்

நன்றி நிழலி இணைப்புக்கு

கை கோர்ப்போம்

பலம் சேர்ப்போம்

நன்றி விசுகு, நான் இணைத்தது ஒரு முக்கிய பேட்டி என்பதனாலும் சில கேள்விகள் சில தேவையான புள்ளிகளை தொட்டுச் செல்கின்றமையாலும்தான். ஆனால், சம்பந்தர் தலைமையிலான த.தே.கூ மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதே போலத்தான், கஜேந்திரன் அணி மீதும்.

Edited by நிழலி

இனி வரும் காலத்தில் நீங்களும் நாங்களும் இணைந்து இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

இதற்கு சம்பந்தரிடம் கேட்டுவிட்டுச் சொல்லாமே அவர் நீங்கள் யார் எங்களுக்கு சொல்ல என்று சொல்லுகின்றார் ?

த.தே.கூ மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதே போலத்தான், கஜேந்திரன் அணி மீதும்.

இப்படிச் சொல்லி சம்பந்தர் தலைமைக்கு மறைமுக ததேகூ விளம்பரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.