Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு இரண்டு தேசங்களாம்: பரிந்துரைக்கின்றது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு இரண்டு தேசங்களாம்: பரிந்துரைக்கின்றது சிறிலங்கா

[ வியாழக்கிழமை, 25 மார்ச் 2010, 09:50 GMT ] [ தி.வண்ணமதி:புதினப்பலகை]

பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது.

அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது.

அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனை தான் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வினைத் தரும் என சிறிலங்காக உறுதியாக நம்புகிறது.

இவ்வாறான ஒரு தீர்வு, பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவருவதோடு - சுதந்திரமன, இறையாண்மை மிக்க, நீடித்து நிலைக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிர, பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள்.

பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து நிற்பது தான் அங்கு மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதற்கான அடிப்படைக் காரணம் என சிறிலங்கா வாதிடுகிறது.

ஆதலினால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்த இஸ்ரேலியர்களின் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இவை - தவிர காசா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு சிறிலங்கா தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100325100777

ஆகா அற்புதம்.

தன்னுடைய முதுகிலிருக்கும் படையைச் சொறிவதற்குக் கை இன்னும் எட்டவில்லை. அதுதான் இதன் அர்த்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னதில என்ன பிழை காசா வெஸ்பாங் ரண்டு தேசமா..... எங்கட கிழக்கு அமைஞ்சிட்டுது வடக்கு அமையபோறது மாதிரி ஒரு கட்டமைப்பா இருக்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதில என்ன பிழை காசா வெஸ்பாங் ரண்டு தேசமா..... எங்கட கிழக்கு அமைஞ்சிட்டுது வடக்கு அமையபோறது மாதிரி ஒரு கட்டமைப்பா இருக்கலாம். :lol:

உங்கட கிழக்கு பொலனறுவையோட இணைஞ்சிட்டுது. வடக்கு அனுராதபுரத்தோட இணையும். அதுபோல காசா வெஸ்ட்பாங் இரண்டையும் இஸ்ரேலோடு சேர்த்து விட்டு ஐக்கிய நாடுகள் மூன்.. ஐக்கியம் பேணினால்.. பலஸ்தீனியர்களின் இறமை.. இளையான் எல்லாம் பத்திரமா இருக்கும்.

இஸ்ரேலுக்கு ஒரு நீதி.. சிங்களச் சிறீலங்காவிற்கு இன்னொரு நீதியோ..??! :huh::D:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட கிழக்கு பொலனறுவையோட இணைஞ்சிட்டுது. வடக்கு அனுராதபுரத்தோட இணையும். அதுபோல காசா வெஸ்ட்பாங் இரண்டையும் இஸ்ரேலோடு சேர்த்து விட்டு ஐக்கிய நாடுகள் மூன்.. ஐக்கியம் பேணினால்.. பலஸ்தீனியர்களின் இறமை.. இளையான் எல்லாம் பத்திரமா இருக்கும்.

இஸ்ரேலுக்கு ஒரு நீதி.. சிங்களச் சிறீலங்காவிற்கு இன்னொரு நீதியோ..??! :lol::D:huh::D

அண்ணைக்கு எப்பிடி புரியவைக்கிறதெண்டு விளங்கேல , இப்ப பாருங்கோ.....கிழக்கில முதலமைச்சர் சிவனெசதுரை சந்திரகாந்தன் எண்டுற தமிழன் அதேமாதிரி பாலிமன் லெக்சன் முடிய வாற மாகாணசபை லெக்சன்ல யாரோ ஒரு தமிழன்தான் வரப்போறான். ரண்டு தேசம் ஒரு நாட்டுக்குள்ள......அதுமாதிரி ஒரு தீர்வு பாலஸ்தீனத்துக்கு அமையிறத பல நாடுகள் அங்கீகரிக்குமெண்டு யோசிக்கலாம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு எப்பிடி புரியவைக்கிறதெண்டு விளங்கேல , இப்ப பாருங்கோ.....கிழக்கில முதலமைச்சர் சிவனெசதுரை சந்திரகாந்தன் எண்டுற தமிழன் அதேமாதிரி பாலிமன் லெக்சன் முடிய வாற மாகாணசபை லெக்சன்ல யாரோ ஒரு தமிழன்தான் வரப்போறான். ரண்டு தேசம் ஒரு நாட்டுக்குள்ள......அதுமாதிரி ஒரு தீர்வு பாலஸ்தீனத்துக்கு அமையிறத பல நாடுகள் அங்கீகரிக்குமெண்டு யோசிக்கலாம்தானே!

ஐயையோ.. எனக்கு புரிய வைக்கப் போறாராம். முதலில் காசாவையும்.. வெஸ்ட் பாங்கையும் இஸ்ரேலின் இரண்டு மாகாணங்களாக்கிப் போட்டு அதற்கு.. காசாக்கு கமாஸில் இருந்து ஒருத்தரையும்.. வெஸ்ட் பாங்குக்கு பி எல் ஓ வில் இருந்து ஒருத்தரையும் முதலமைச்சராக்கச் சொல்லி இருந்தால்.. ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்று நல்ல யோசனையாக இருந்திருக்கும்.

இத்தால் பலஸ்தீன மக்களே.. இதோ உங்களுக்கு ஒரு அருமையான தீர்வை சிங்கள தேசமும் அதன் அருவருடி தமிழ் ஒட்டுக்குழுக்களும் முன் வைத்து உலக சாதனை புரிகின்றன. அதை ஏற்றுக் கொண்டு பெருவாழ்வு வாழ வேண்டிக் கொள்கிறேன்.

வீணா ஏன் செத்து தொலையுறீங்க. புலிப் பயங்கரவாதிகள் போல அழியப் போறீங்களா..! :huh::lol:

சாத்தான் வேதம் ஓதுது http://usetamil.forumotion.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே .....உலகம் வழங்கின தீர்ப்பெண்டு சொல்லுங்கோ......கிழக்கு முடிஞ்சிட்டு....அதிண்ட தொடர்ச்சி வடக்கு.......இருந்து பாருங்கோ நடக்காட்டி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு எப்பிடி புரியவைக்கிறதெண்டு விளங்கேல , இப்ப பாருங்கோ.....கிழக்கில முதலமைச்சர் சிவனெசதுரை சந்திரகாந்தன் எண்டுற தமிழன் அதேமாதிரி பாலிமன் லெக்சன் முடிய வாற மாகாணசபை லெக்சன்ல யாரோ ஒரு தமிழன்தான் வரப்போறான். ரண்டு தேசம் ஒரு நாட்டுக்குள்ள......அதுமாதிரி ஒரு தீர்வு பாலஸ்தீனத்துக்கு அமையிறத பல நாடுகள் அங்கீகரிக்குமெண்டு யோசிக்கலாம்தானே!

அங்கீகரிக்க தாடி இல்லாத ஆளாய் கூப்பிடலாம். அதை சந்திரகாந்தன் ஒத்து கொள்வாரோ?

தமிழன் வாறது சரி உங்களை போல ஆட்கள் இல்லை.

அது சரி பலஸ்தீனம் என்றால் என்ன விலை மதிவதனம்g :lol::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.