Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!

Featured Replies

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.

எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது. இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மையானது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சக்திகளுக்கு பலமானதாகப்போய்விடும் என அஞ்சுகின்றோம். அவ்வாறான நிலைமை, எமக்கு ஏற்படுகின்ற மிகப்பாரிய பின்னடைவாகவே இருக்கும்.

அதன்காரணமாக இந்த இறுதி நிமிடத்திலும் உங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு ஒரு அணியாக போட்டியில் தேர்தலை எதிர்கொள்வதன் மூலம், துணிவுடன் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுக்கக்கூடிய வேட்பாளர்களை தெரிவுசெய்யப்படுவதை இலகுபடுத்துமாறு புலத்து தமிழ் மக்களின் சார்பாக, உலகத் தமிழர்களின் பேரவையானது வேண்டிக்கொள்கின்றது.

- என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilarkal.com/

இந்த அறிக்கையை 10 ம் திகதி விட்டால் நல்லது :)

10 ஆந் திகதிக்குப் பின்னென்றாலும் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழ்க் கட்சிகள் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கத்துக்குரிய இம்மானுவல் ஐயா அவர்கள் இந்தியாவுக்கு முதுகு சொறிஞ்சுவிடச் சொல்லுறூர். உலகத்தமிழர் பேரவை, இந்தியா தமிழர் விரோததேசம் என்பதை உணரவில்லையா அன்றேல் இன்னமும் கனவுலகில் வாழ்கின்றதா? எஸ்எம்எஸ் அணியினர் இந்தியாவின் அடிமைகள்போல் நடக்கிறார்கள். இந்தியாவும் தம்மீது விழுந்த வடுவசையை நல்லபடி துடைத்தெறியாது மீண்டும் மீண்டும் துரோகத்தின் மீதே பயணம் சொய்து எமை அழி;க்கமுனைகின்றதற்குக் போடரிக்காம்பகளாக கூட்டமைப்பின் மாறியுள்ளனர். இத்தேர்த்தலின்மூலம் தமிழர்கள் உடனடித்தீர்வினையெட்டிட முடியாது. ஆனால் நாம் இத்தேர்தலின்மூலம் உலகத்திற்கு ஒரு செய்தியினைக் கூறலாம் அதுவெதுவெனில், இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் உள்ள இந்தியா எனும்தேசத்தை நாம், எமது இனப்பிரச்சனையைத் தீர்த்துவைத்திட உதவிடும் நடுநிலைநாடாக சோக்கவில்லையென்பதையும,; மாறாக அதை ஒரு தமிழர்விரோததேசமாகவே நாம்சோக்குகிறோமென்பதையும். இத்தேர்தல் தமிழர் வாழ்வில் பாலாறும் தேனாறையும் கொண்டுவந்து சேர்க்காது. ஆனால் தமிழர் நாம் எவ்வழியில்ப் பயனிப்பது என்பதை அறியத்தருமு ஒரு கருவியாகவே இருக்கும். ஆனால் கட்டுச்சாதத்திற்குள் எலியையும் சேர்த்துக்கட்டியதுபோல் இந்தியாவையும் கைகோர்த்துக்கொண்டு போனால் உருப்பட்டமாதிரித்தான். புலம்பெயர் தேசங்களில் உலகத்தமிழர் பேரவைக்கு இருக்கின்ற ஒரேயொரு அச்சுறுத்தல் நாடுகடந்த தமிழீழ அரசமைப்பாகும். இந்த நாடுகடந்த தமிழீழ அரசை சிங்களமும் இந்தியாவும் எப்படி முடக்குவது எனத்தருணம் பார்த்துக்கொண்டிருக்கினம் ஆக புலத்தில் அரசியல்பேரம்பேசும் வலுவைஇந்தேர்தலைச் சாக்காக வைத்து நாடுகடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவடலாம் எனத்தருணம்பார்த்து உலகத்தமிழர் பேரவையும் காய்நகர்த்துகின்றது.

எட்டப்பன் கருநாநிதி போக தமிழக் குரல் என்றோ ஒருநாள் மாறும்.

அப்போ இந்தியாவும் மாறும்,

மக்கள் சிங்கள கட்சிகள் சேர்ந்த தமிழர்களுக்கு வாக்களிக்காமல் விட்டால் சரி.அவர்கள்தோற்க வேண்டும்.

இன்றைய நிலைக்கு அதுதான் முக்கியம்.

வெளிநாடுகள் அதை தான் பார்க்கின்றன.

தனித்துவம் அங்குதான் பார்க்க படுகிறது.

மற்றும்படி தமிழ்கட்சிகளின் ஒற்றுமை பற்றி பிறகு பார்க்கலாம்.

ஈராக்கில் இப்போ நடந்து முடிந்த தேர்தலில் சியாமுஸ்லிம் பகுதிகளில் ஒரு சுனி முஸ்லீம் வேட்பாளர் கூட வெல்லவில்லை.அதேபோல் சுனி முஸ்லீம் பகுதியில் ஒரு சியா வேட்பாளர் வெல்லவில்லை. அனால் எல்லாரும் முஸ்லீம் இனம் தான்.

இப்போ கூட்டு ஆட்சி அமைப்பதற்கு பேசி கொண்டு இருக்கிறார்கள்

இதுதான் தமிழீழ மக்களுக்கும் தேவை. தமிழ்கட்சிகள் வென்று சிங்களகட்சி தோற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.