Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரேயொரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! – ஆசிரியர் இரா. செல்வவடிவேல்

Published By editor On Saturday, April 3rd 2010. Under செய்திகள்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமுள்ள ஒரே தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்குகின்றார் என ஆசிரியர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். யாழ் நாவாந்துறை கொட்டடி சனசமூக நிலைய முன்றலில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கோமகன் தலைமையில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 30 ஆண்டுகாலமாக எதிர்ப்பு அரசியல் எமது மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்ததுதான் மிச்சம். இலங்கை அரசியல் வரலாற்றில் முரண்பாட்டு அரசியலால் எதனையும் எவரும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இணக்கப்பாட்டு அரசியல் மூலமே எமது உரிமைகளைப் பெறலாம். முக்கியமாக கடந்தகால அரசியல் வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இரண்டாம் நிலையில் வைத்தே அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதன் விளைவே தமிழர் வாழ்வு பேரிழப்பில் முடிந்தது.

இன்றைய ஜனநாயகச் சூழலில் இரண்டு மொழிகள் பேசுகின்ற இருவேறு மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்பதே முக்கியமானதாக இருக்கின்றது.

இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவம் உள்ள ஒரேயொரு தலைவர் என்றால் அது நிச்சயமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்றும் ஆசிரியர் செல்வவடிவேல் மேலும் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈ.பி.டி.பி. மக்களுடன் இரத்தமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருக்கின்றனர். தமிழ் மக்களின் குரலாகவே பாராளுமன்றத்தில் எமது குரல்கள் ஓங்கி ஒலிக்குமென்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாவட்ட லயன்ஸ் கழக இணைப்பாளர் ரஞ்சன் பிரபல வர்த்தகர் சந்திரமோகன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.ilakku.com

  • கருத்துக்கள உறவுகள்

அட இவர் இன்னும் இருந்து அரசியல் செய்யுறாரா..??! இரா.செல்வவடிவேல் அவர்களே விஞ்ஞானம் போதிப்பதோடு உங்களை நிறுத்திக் கொண்டால் அது உங்கள் மீதான மரியாதை காக்கும் என்று நினைக்கிறேன். தேவையில்லாமல் அரசியல் செய்யப் போய் 1988 களில் பதுங்கித் திரிந்த கணக்காக மீண்டும் பதுங்கப் போகிறீர்களா..??! நீங்கள் உங்கள் பிள்ளைகளை பத்திரமாக நல்ல லண்டன் மாப்பிள்ளை பார்த்து கட்டி அனுப்பி வைச்சிட்டு.. இப்ப ஓய்வா இருந்து ஈபிடிபி அரசியல் செய்யுறது.. அநியாயம் ஐயா.

டக்கிளஸ் தேவானந்தா என்ற எலும்பு பொறுக்கி எப்படி பிழைப்பு நடத்தினார் என்பதை தமிழ் மக்கள் நன்கே அறிவார்கள். அவர் இப்ப தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத்தரப் போறாராம்.

மத்தியில் கூட்டாட்சி வடக்கு-கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி அதை முதலில் வாங்கச் சொல்லுங்கோ. அதற்கு பிறகு பாப்பம்.. பாட்டும் பயனும்..! :):lol::D

Edited by nedukkalapoovan

நீங்கள் உங்கள் பிள்ளைகளை பத்திரமாக நல்ல லண்டன் மாப்பிள்ளை பார்த்து கட்டி அனுப்பி வைச்சிட்டு.. இப்ப ஓய்வா அரசியல் செய்யுறது.. அநியாயம் ஐயா.

நெடுக்ஸ், உங்கள் புலம்பல் எங்கையோ உதைக்கிதே.. பிள்ளைகளை பத்திரமாய் லண்டன் அனுப்பிவிட்டு ஊரிலை இருந்து அரசியல் செய்கிறதைவிட... லண்டனிலை குடும்பமாய் இருந்துகொண்டு ஊரில அரசியல் செய்கிறது அதைவிட ரொம்ப அநியாயம் ஐயா. ஆக்கள் சொல்லிற கருத்துக்களை எதிர்கொள்ளாமல்.. அவையளை விமர்சனம் செய்து என்ன காணப்போறீங்களோ..?

Edited by மச்சான்

நெடுக்ஸ், உங்கள் புலம்பல் எங்கையோ உதைக்கிதே.. பிள்ளைகளை பத்திரமாய் லண்டன் அனுப்பிவிட்டு ஊரிலை இருந்து அரசியல் செய்கிறதைவிட... லண்டனிலை குடும்பமாய் இருந்துகொண்டு ஊரில அரசியல் செய்கிறது அதைவிட ரொம்ப அநியாயம் ஐயா. ஆக்கள் சொல்லிற கருத்துக்களை எதிர்கொள்ளாமல்.. அவையளை விமர்சனம் செய்து என்ன காணப்போறீங்களோ..?

மிகத் தெளிவான கருத்து. இன்று பெருண்பான்மையான தமிழ் அரசியல்வாதிகள் தமது குடும்பத்தை தாயகத்தில் வைத்துக் கொண்டா அரசியல் செய்கின்றார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்கள் புலம்பல் எங்கையோ உதைக்கிதே.. பிள்ளைகளை பத்திரமாய் லண்டன் அனுப்பிவிட்டு ஊரிலை இருந்து அரசியல் செய்கிறதைவிட... லண்டனிலை குடும்பமாய் இருந்துகொண்டு ஊரில அரசியல் செய்கிறது அதைவிட ரொம்ப அநியாயம் ஐயா. ஆக்கள் சொல்லிற கருத்துக்களை எதிர்கொள்ளாமல்.. அவையளை விமர்சனம் செய்து என்ன காணப்போறீங்களோ..?

ஐயா இது புலம்பல் அல்ல. 1988 - 90 காலப்பகுதிகளில் செல்வ வடிவேல் கொட்டடியில் வசித்து வந்தவர். அங்கு தனது வீட்டில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தவர். மேற்குறிப்பிட்ட காலத்தில் இந்தியப் படைகளோடு சேர்ந்தியங்கிய ஒட்டுப்படைகள் பிள்ளை பிடி ஆயுதக் குழு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் கூட பெற்றோரின் எதிர்ப்புக்களையும் மீறி பிள்ளைகளை ரியுசனுக்கு அழைப்பித்து பிள்ளை பிடிகாரர்கள் பிடித்துப் போக துணை போனவர் இவர். இதில் முஸ்லீம் இளைஞர்களும் பிடிபட அவர்களின் பெற்றோர் இவரின் வீட்டிற்கு வந்து காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

தனது பிள்ளைகளை வெளியிடத்துக்கே அனுப்பாது பாதுகாத்துக் கொண்ட இவர் அக்காலத்தில் பிறரின் பிள்ளைகளை பிள்ளை பிடிக்கும்பலிடம் பலி கொடுக்க துணை போனவர் என்று பெற்றோரின் கடும் விசனத்துக்கு ஆளாகி இருந்தவர்.

அதன் பின்னர் விடுதலைப்புலிகள் யாழ் குடாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும்.. இந்து ஆலயங்களில் மேடைப்பேச்சாளராக தனது பரிமானத்தை மாற்றிக் காட்டிக் கொண்டார். இருந்தாலும் இவரின் சில செயற்பாடுகளால் மக்கள் விரோத நிலைப்பாடுகளால் விடுதலைப்புலிகளால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தவர்.

அன்றும் சரி இன்றும் சரி தனது பிள்ளைகளின் நலனை முன்னிறுத்திச் செயற்பட்ட ஒருவர் மக்களின் குழந்தைகளின் நலனில் அக்கறையற்றிருந்த ஒருவர் எப்படி இன்று மக்களின் அரசியல் பிரதிநிதியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முனைகிறார் என்பதைத்தான் எனது கருத்தில் குறிப்பிட முனைந்திருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு ஆசிரியராக இவரின் சேவையை வரவேற்கலாம். ஆனால் இவருக்கும் பொது வாழ்விற்கும்.. எந்த விதமான நெருக்கமும் இருப்பதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒருவர் தமிழ் மக்களின் குருதியில் கட்சி நடத்தி வரும் சிங்கள அருவருடி டக்கிளஸ் தேவானந்தாவிற்கு வக்காளத்து வாங்குவது ஆச்சரியப்படும் விடயம் அல்ல. இவர் முன்னர் இந்திய சார்புக் குழுக்களுக்கு வக்காளத்து வாங்கப் போய் மாணவர்களின் எதிர்ப்பையும் சந்தித்தவர் என்பதையும் நினைவு கூற வேண்டும்.

1988 - 90 காலப்பகுதிகளில் இவரின் நடவடிக்கைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் எங்கள் பாடசாலை அண்ணன்மார்களும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலை குடும்பமாய் இருந்துகொண்டு ஊரில அரசியல் செய்கிறது அதைவிட ரொம்ப அநியாயம் ஐயா. ஆக்கள் சொல்லிற கருத்துக்களை எதிர்கொள்ளாமல்.. அவையளை விமர்சனம் செய்து என்ன காணப்போறீங்களோ..?

இப்படித்தான் சிலர் இங்கு எழுதிக்கொண்டிருக்கினம்

சுட்டுவிரலை நீ காட்டி மற்றவனை போடும்போது.....

4 விரல்கள் உனை நினைந்து நாணி நிக்குதடா தமிழா...

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.