Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து பரந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கிறோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து பரந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கிறோம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராஜாவுடன் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காகவும் உதயன் பத்திரிகைக்காகவும் தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் பெரும் சக்தி என்று கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு சவால்களுடன் தேர்தல் போராட்டத்தை எதிர்கொள்கிறது. பேரினவாத அரசாங்கத்தின் தாக்குதல்கள், சூழ்ச்சிகள், தந்திரங்கள் எனப் பல நடவடிக்கைகளை எதிர் கொண்டுவருகிறபோதும்., உள் முரண்பாடுகள், இறுதிநேர தேர்தல் கால வெளியேற்றங்கள், அவைகளினால் ஏற்பட்ட வாதங்கள் எல்லாவற்றையும் எதிர் கொண்டபடி வடக்கு கிழக்கின் ‐ தமிழ் ஈழ மக்களின் ஜனநாயகச் சக்தியாக நிமர்ந்து நிற்கிறது. இவ்வாறான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும்; கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை. சேனாதிராஜா அவர்களை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இறுதி நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய வேலைகள் அதற்கு அடுத்த கட்டமாக வரும், எதிர் காலத் திட்டங்கள் என்பன குறித்து சிறிய உரையாடல் ஒன்றை நடத்தினேன்.

தீபச்செல்வன் :

இந்தத் தேர்தலில் என்ன மாதிரியான சவால்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கொள்ளுகிறது? அவை தமிழ் மக்களின் வாழ்வு போராட்டத்தில் எவ்வகையில் மோதுகின்றன?

மாவைசேனாதிராஜா:

நாங்கள் எங்களுடைய தேசிய இனம் என்ற அடையாளத்தை இழப்பதா? சுய நிர்ணய உரிமை என்ற தத்துவத்தை இழப்பதா? என்ற கேள்விகளுடன் இருக்கிறோம் சவாலுடன் இருக்கிறோம். மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றுவரை ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லுவதன் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனுடைய மறுபக்கம் சொல்லுவது என்னவெனில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள் பௌத்த சிங்கள நாடாக ஆக்கபடும் என்பதுதான் அவருடைய மகிந்த சிந்தனையாக இருக்கின்றது. மகிந்த சிந்தனையை அவருடைய நிகழச்சித் திட்டத்தை அவர் இன்று நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார். இன்று கிழக்கு மாகாணத்தை தனிமைப்படுத்தி தமிழர்களின் தாயகத்தை தனிமைப்படுத்தி கிழக்கை இன்று இராணுவ மயமாக்கி சிங்கள மயமாக்கி தன்னுடைய பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு அமைத்திருக்கிறார். அதேபோன்ற நிகழ்ச்சித் திட்டத்iதான் வடக்கிலும் அவர் நிலை நாட்ட இந்தத் தேர்தலை பயன்படுத்துகிறார். அப்படி அவர் எடுக்கின்ற முயற்சிகளில் முதலில் புலிகளைதான் தோற்டித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டு அந்தப் பிரதேசத்தை இராணுவ மயப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தமிழர்களின் நிலங்கள் வர்த்தக ரீதியாக விற்கப்படுகின்றன. எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இராணுவக் கட்டமைப்புக்கனளை விரிவடையச் செய்ய சீனா இந்த அரசாங்கத்திற்கு பெரியளவில் உதவி வருகிறது. அதைவிட பொலிஸ் கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதன் வாயிலாக பொலிஸ் குடியிருப்புக்களை வடக்கில் குறிப்பாக வன்னியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதைவிட தமிழர்களின் கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. பௌத்த கலாசாரத்தை திணிப்பதற்கு முயற்சிப்பதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள்தான் நாங்கள் ராஜபக்ஷ அரசுமீது நாங்கள் குற்றம் சுமத்த காரணமாக இருக்கின்றன. வராற்று புகழ் பாரம்பரியம் மிக்க தமிழ் தேசிய இனத்தினுடைய அடையாhளத்தை அழித்து விட்டு அவர்களுக்கு உரித்தான சுயநிர்ணய தத்துவத்தை அழித்துவிட்டு அவர்களை ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்ல வைக்க முயற்சி செய்கிறார். அதற்கும் பலர் இணங்கிப் போக தயராக இருக்கிறார்கள். இதிலிருந்து எம்மை மீட்கப் போகிறோமா இல்லையா? என்பதுதான் எமது உள்ள சவால். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா இல்லையா? இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தடுத்தி நிறுத்தி தமிழர்களுடைய தாயகத்தை தமிழர்கள் தங்களை ஆளும் சுயநிர்ணய உரிமையுடைய ஆட்சியை உருவாக்கும் வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். அல்லது விரைவல் தமிழர்கள் சிங்களவர்களாகவும் பௌத்தர்களாகவும் எங்களுடைய தேசம் பௌத்த சிங்கள தேசமாகவும் இராணுவ அடித்தளத்தை கொண்டு கட்டப்படுவதற்கான வேலைகள் நிறைவேற்றப்படும். இவைகளை தடுத்து நிறுத்த தமிழர்கள் இந்த்த தேர்தலில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். அதுதான் எமது பலம் மிக்க ஜனநாயக சக்தியாக இன்று இருக்கின்றது. அதன் மூலம் கொள்கைப்பற்றையும் இலட்சியப்பற்றையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதன் மூலம்தான் மகிந்தராஜபக்ஷவினுடைய மகிந்தசிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தை நாங்கள் முறியடிக்க முடியும்.

மகிந்தவினால் ஊக்கப்படுத்தப்பட்ட உதிரிக் கட்சிகள், பெருமளவு உதவி செய்யப்பட்ட சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றை இறக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தவும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவும் தான் விரும்பிய பொம்மைகளை உருவாக்கி கிழக்கைப் போன்று வடக்கையும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று தன்னுடைய மகிந்த சிந்தனையை நிவேற்ற வேண்டும், திணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டும். நிராகாக்க வேண்டும். தடுக்க வேண்டும்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கட்;டமாக யாருடன் எந்த நிலையிலிருந்து பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறது?

பதில்: சுயநிர்ணய தத்துவத்தின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆள விரும்புகின்றோம் என்ற அந்த அடிப்படையில்தான், நாங்கள் சிங்கள தேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்த ஆயத்தமாக இருக்கின்றோம். விடுதலைப் புலிகளின் போராட்டம் இன்று சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அதிலிருந்து மாறி நாங்கள் ஜனநாக பலத்தை அடையும் பொழுது எங்கள் ஜனநாயக பலத்தை அழிக்க அரசாங்கம் முனைகிறது. விடுதலைப் புலகளை நாங்கள் அழித்து விட்டோம் தமிழர்களின் குரல் இனி இல்லை தமிழர்களின் உரிமைக்குரல் இல்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவிக்கப் பார்க்கிறது. அதை முறியடித்து அரசாங்கத்தை நாங்கள் எதிர் கொண்டு பேச்சு நடத்த வேண்டும்.

தமிழ் மக்கள் இதனை நிராகரித்து ராஜபக்ஷவினுடைய மகிந்த சிந்தனையை நிராகரித்து தமிழ் மக்கள் தங்களினுடைய தனித்துவத்தையும் தங்களுடைய தன்னாட்சித் தத்துவத்தையும் தங்கள் தாயக சுயநிர்ணய அடிப்படைக் கோட்பாட்டை நிலை நாட்டுவது ஒன்றுதான் அவர்களது இலக்கு என்பதை இந்தத் தேர்தலில் நிருப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாஙகள் பேச வேண்டி உள்ளது. அல்லது நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்தவர்களாக தமிழர்களினுடைய தாயகத்தை இழந்தவர்களாக சுயநிர்ணய கோட்பாட்டை இழந்தவர்களாக தன்னாட்சி தத்துவங்களையும் இழந்தவர்களாக மாற்றப்படும் சூழல் உருவாகும் என்பதினால் ஒரு வாக்கையும் சிறதவிடாமல் உதிரிகளையும், சுயேச்சைகளையும் நிராகரித்து விட்டு எங்களுக்கு வாக்களியுங்கள்., தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் என்று கேட்கிறோம். அதன் பின்னர் தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமிக்க சக்தியாக அரசுடனோ சர்வதேசத்துடனோ பேச்சு வார்த்தை ஒன்றை நடத்த முடியும்.

கேள்வி : நீங்கள் முன் வைத்திருக்கும் தீர்வு ஒஸ்லோ உடன்படிக்கையையின் அடிப்படையிலா தயாரிக்கப்பட்டதா? தீர்வுத் திட்டத்தினுடைய அடைவு எதை நோக்கியதாக இருக்கிறது?

பதில்: ஓஸ்லோ உடன்படிக்கை என்பது ஒரு தீர்வு அல்ல. அது தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கான ஆரம்பமான வழிகாட்டிதான். அது முடிந்த முடிபல்ல. தமிழ் மக்களிடம்தான் இறமை இருக்கிறது. அவர்களிடம்தான் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. அவர்கள் எதிர்கால அரசியல் தீ;வுத் திட்டத்தை முடிவு செய்வார்கள். அது பேச்சு வார்த்தையின் பொழுது முடிவு எடுக்கப்படும். அப்படி எடுக்கப்படும் முடிவானது மீண்டும் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பபடும். நாங்கள் 1976ஆம் ஆண்டில் ஒரு ஆணையைப் பெற்றிருக்கிறோம். அது வட்டுக் கோட்டை பிரகடனத்திற்காக முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆனை 77 இல் பெறப்பட்டது. ஒஸ்லோ உடன்படிக்கை அடிப்படையில் தீர்வுத் திட்டம் வருமாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதை மக்கள் முன் வைப்போம்.

இதில் இரண்டு தேசம் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் இதற்குள் ஒரு மறைவை வைக்க விரும்பவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இரண்டு தேசம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதை இறமை உள்ள மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சிலவேளை இரண்டு தனித்தனித் தேசங்களாகவும் இருக்கலாம். அதற்கான சாத்தியங்களை நிராகரிக்கவில்லை. அதனை மக்கள் தீர்மானிப்பார்கள். இறமை மக்களிடம்தான் இருக்கிறது. அது தேசத்திடம் அல்ல. மக்கள்தான் அரசாங்கத்திற்கு இறமையை வழங்கலாம். தேசத்திற்கு வழங்கலாம். மக்களின் இறமையை அரசாங்கத்திடம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. மக்களிடம்தான் இறமை இருக்கிறது என்று நாங்கள் சொல்லுகிறோம். நாங்கள் அரசியல் தீர்வுக்கான அடிப்படையைத்ததான் தோற்றுவித்திருக்கிறோம்.

கேள்வி : தேர்தல் சில நாட்களில் முடிவடையப் போகிறது. தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன மாதிரியான வேலைகளை செய்யப் போகிறது? அரசாங்கத்தை அது என்ன வகையில் எதிர்கொள்ளப்போகிறது?

பதில்: தமிழ் தேசியக் கூட்மைப்பு தன் எதிர்கால திட்டத்தை தெளிவாக தேர்தல் அறிக்கையில் வரைந்திருக்கிறது. உடனடிhக எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு தேவைப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு ஒரு இடைக்கால தன்னர்டசி அதிகார சபைக்கான அவசியம் இருந்தது. 2004இல் இருந்த நிலமையைவிட பல மடங்கு மிக மோசமான நிலையில் இப்பொழு மக்கள் இருக்கிறார்கள். அதனையடுத்து சர்வதேச நாடுகளின் உதிவிகளின் மூலம் எமது மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டியிருக்கின்றது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுடன் நடத்தியிருக்கிறோம். தேர்தலின் பின்னர் மக்களின் ஆதரவைப் பெற்ற வலுவான கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்துடனும் சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகத்தில் இந்தப் புனழ்வாழ்வு புனரமைப்பைப செய்ய ஒரு கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழ் மக்களின் பெரும்பான்மைத்துவத்தையும் முஸ்லீம்களின் பெரும்பான்மைத்துவத்தையும் சொந்த மண்ணிலேயே சிறுபான்மைகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டமாக எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கிற முஸ்லீம் மக்களினுடைய பிரதிநிதித்துவத்தை, மலையக மக்களினுடைய பிரதிநிதித்துவத்தை உள்வாங்கி ஒரு பரந்த கூட்டமைப்பை உருவாக்கி அந்தக் கூட்டமைப்பு ஊடாக அரசிடம் பேரம் பேசவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். அதன் வாயிலாக சிறுபான்மை கட்சிகளின் வலு இல்லாமல் அரசாங்கம் இயங்க முடியது என்ற நிலயை உருவாக்குவோம். இரண்டு மாதங்களில் இந்தக் கூட்டமைப்புகள் ஊடாக பெரிய மகாநாடு ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைபின் தேர்தல் பிரேரணைகளுடன் பரந்த கூட்டமைப்பு வாயிலாக பெறபபடும் பிரேரணைகள் என்பவற்றுக்கு அங்கு வடிவம் கொடுக்கப்படும். அப்படி வடிவம் கொடுக்கப்படும் பிரேரணைகளை அரசாங்கத்தின் முன்பாகவும் சர்வதேசத்தின் முன்பாகவும் வைப்போம். அப்படி வைக்கும் பொழுது அது பற்றி அரசாங்கத்துடன் சர்வதேச சமூகம் பேச வேண்டிய நிலை ஏற்படும்.

அரசாங்கம்மீதான அழுத்தங்கள் இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. அரசின் போர்க்குற்றங்களுக்காக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார ரீதியான தடைகள் எழுந்து வருகின்றன. பரந்து பட்ட கூட்டமைப்புடன் பேச மகிந்தராஜபக்ஷ தவறுவாராக இருந்தால் மக்களை ஜனநாயக வழிகளில் அணிதிரட்டி சாத்வீக போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டத்தை மகாநாட்டிலே அறிவிப்போம். எனவே உலகின் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்கவும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தி தீர்வை பெறவும் நடவடிக்கைகளை செய்வோம்.

நேர்காணல் : தீபச்செல்வன்

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=22846&cat=1

அப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளவும் 22 ஆசனம் கிடைச்சு முழுமையாக வெற்றி பெற மாட்டினமோ...??? வெல்ல மாட்டினம் எண்டால் அது ஏன் எண்டு சொல்ல மாட்டாரோ...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.