Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியம் பேசுவோரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆப்பு

Featured Replies

மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5652

இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலம் முதல் தொடர்ச் சியாக நிலை நிறுத்தப்பட்டு வரும் தமிழ்த் தேசியம், தற் போதும் சிதைந்துவிடாமல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டு பேணப்படவேண்டும் எனக் கருதும் தமிழ் ஆர்வலர்களுக்கு நடந்து முடிந்த, பொதுத் தேர்தலின் முடிவுகள் பேரிடியாய் வந்திறங்கியிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதில் முழு ஈடு பாடு கொண்டுள்ள கட்சி அல்லது அணி எனத் தன்னைக் இனங்காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் தனது தனித்துவமான இடத்தை நிரூபித்துள்ளபோதிலும், அதுகூட இம்முறை பெரும்பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது என்ப தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையே.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழரின் ஏக ஜனநாயக சக்தியாக உயர்ந்து இருபத்தியிரண்டு நாடாளுமன்ற ஆச னங்களை ஈட்டிய அக்கட்சிக்கு இம்முறை பதினான்கு ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்திருக்கின்றது.

அதேசமயம், தமிழ்க் கூட்டமைப்பைப் பிளந்து, தனித்து நின்று தமிழ்த் தேசியம் பேசிய அகில இலங் கையின் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் அணிசேர்ந்து தமிழர் தனித்துவம் பேசிய சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா கூட்டு போன்றவையும் ஒரேயடியாக மண் கவ்வியிருக்கின்றன. இந்த அணிகள் தமிழ் மக்களால் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் இன்னொரு விடயமும் கவனிக்கத்தக்கது.

கடந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகி, இம்முறை தமிழ்க் கூட்டமைப்புக்கு வெளியே நின்று தேர்தலை சந்தித்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டிருக்கி றார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந் திரன், பத்மினி சிதம்பரநாதன், என்.ஸ்ரீகாந்தா, சிவாஜி லிங்கம், சிவநாதன் கிஷோர், கனகரட்ணம், தங்கேஸ்வரி ஆகியோர் இப்போது தோல்வியடைந்துள்ளனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த முறை தெரிவாகி, இந்தத் தடவையும் அதேகூட்டமைப் பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் மீண் டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஒரு சிறிது வேறுபாடு உள்ளது.

கடந்த தடவை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் கூட்டமைப்புக்குக் கிடைத்தது. அந்த இடத் துக்கு தெரிவான பத்மநாதன் இயற்கை மரணம் அடைய பின்னர் அப்பதவிக்கு டாக்டர் தோமஸ் தெரிவானார். அதேசமயம் கடந்த தடவை அமரர் ஜோசப் பரராஜசிங் கத்தின் இடத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக் கப்பட்ட சந்திரகாந்தனும் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை டாக்டர் தோமதாஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டார். கடந்த தடவை போல இம்முறையும் அம்பாறையில் ஓர் ஆசனத்தை கூட் டமைப்புத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால் விருப்பு வாக்குகளின் படி சந்திரகாந்தனுக்கோ, டாக்டர் தோமதா ஸுக்கோ எம்பியாகும் வாய்ப்பு கிட்டவில்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பியசேன என்ற தமிழ் ஆர்வலர் இந்த இடத்துக்கு எம்பி யாகி இருக்கின்றார். இவர் விடுதலைப் புலிகளின் காலத் தில் ஆலையடி வேம்பு பிரதேச சபை தேர்தலுக்கு தமிழ ரசுக் கட்சியால் கடந்த தடவை நிறுத்தப்பட்டு, ஐயாயிரத் துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று, அந்த தமிழர் பிரதேசத்தின் பிரதேசசபைத் தலைவரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆகவே, அம்பாறையில் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் சார்பில் போட்டியிட்ட அதன் முன்னாள் எம்பிக்கள் இருவர் இம்முறை அங்கிருந்து தெரிவாகவில்லை என் பது தமிழ்க் கூட்டமைப்புக்கு ஒரு தோல்வியே அல்ல.

ஆனால் கடந்த தடவை தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் எம்பியாக இருந்து விட்டு இம்முறை அதற்கு மாறான தரப்புகளில் போட்டியிட்ட அனைவருமே தோல்வி கண் டுள்ளனர் என்பதும் கடந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டு வெற்றியை எட்ட முடியாமல் வாய்ப்பிழந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இந்தத் தடவை இதுவரை தாம் அங்கம் வகித்த ஒரேஒரு கட்சி யான அகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் கைவிட்டு தமிழரசுக்கட்சிச் சின் னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியை யீட்டியுள்ளார் என்பதும் இந்தத் தேர்தலை ஒட்டி தமிழர் தரப்பில் இதுவரை குதர்க்கம் பேசிக், குழப்பிவந்த அரசியல் பிரமுகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

இப்படித் தமிழர் தரப்பில் தேசியம் பேசுபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கச் செய் யும் எத்தனங்களில் ஈடுபட்ட எட்டப்பர் கூட்டங்கள் அதன் மூலம் தேர்தலில் தாங்களும் மண் கவ்வித்தோற்று ஓடியதுடன் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மேலும் உறுதிபெறவும் வழி சமைத்துச் சென்றிருக்கின்றன.

இனியாவது இவ்வாறு குழப்பம் விளைவிக்கும் குசும் புத்தனத்தை நிறுத்திவிட்டு தமிழ்ச் சமூகத்திற்கு நீதி நியாயத்துடன் செயலாற்ற இவர்கள் முன்வர வேண்டும். முன்வருவார்களா .....?

இதுக்கும் ஒரு கட்டுரை போடவேண்டுமா? இவர்களால் தானே தமிழினம் இன்று இந்த நிலையை அடைந்தது. அண்ணை நாங்கள் இருகின்றோம் விடாதே பின்னு என்று உசுப்பேத்தி உசுப்பெத்திபோட்டு கடைசியில் அந்த மனிதனுக்கு தங்கள் புத்தியை காட்டிவிட்டவர்கள் தான் இந்த தமிழ் தேசியம் பற்றி அடிக்கடி உணற்சிவசப்படுபவர்கள்

  • தொடங்கியவர்

ஈனவும் மாட்டாங்கள் நக்கவும் மாட்டாங்கள்.

ஆரும் ஆடினா உருவேத்துவாங்கள் அதுக்கும் நாலுபேர் சேர்ந்தால் அடிபடுவாங்கள்.

ஏன்ரா தம்பி இப்பிடி புடுங்குப் படுரிங்கள் எண்டால் ரவுண்டுகட்டி அடிப்பாங்கள்

செல்லவரும் விசயத்திலும் சொல்லுவதிலும் நாகரிகம் இருக்காது.

ஆரும் சொல்லும் விசயத்திலும் அக்கறை இருக்காது.

ஆனால் நாங்கள் தமிழர்கள்.

பேசுவதற்கும் ஆள் இல்லாது இருந்தால்

பேசாப் பொருள் விற்பதற்கு இலகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசுவதற்கும் ஆள் இல்லாது இருந்தால்

பேசாப் பொருள் விற்பதற்கு இலகு

பேசப்டாத பொருளை யார் வாங்க ஆர்வம் காட்டுவார்கள், காய்கி்ற மரத்துக்குத்தான் கலெறி படும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.