Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

Featured Replies

உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா!

தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்டிவதைக்க தமிழினம் துடிதுடித்துத் தவித்துப்போயிருந்த காலத்தில், நாடுகடந்த தமிழீழம் என்ற ஒற்றைவரி, தமிழர்களை சற்று நிமிர்த்தி உட்கார வைத்திருக்கின்றது. எதிர்காலம் பற்றிய ஒருவிதமான நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. மீண்டும், சிரிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கால்களை மெல்ல நிலத்தில் ஊன்றி நிமிர்வதற்கான ஒரு தென்பு கிடைத்திருக்கின்றது.

புலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கையைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.

இது குறித்து நீங்கள், வரைந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஊடகங்களில் வாசித்தேன். முதல் வெளிவந்த மடலைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு மடல் வரையவேண்டும் என நினைத்தேன் பின் அது அப்படியே போய்விட்டது. இன்று நீங்கள் வரைந்திருக்கும் இரண்டாவது மடல் கண்டு இதனை வரைகின்றேன்.

உங்கள் முயற்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கிலும், தடை ஏற்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, நீங்கள் வேதனைப்படுவதும், உங்கள் முயற்சிகளை இடையில் நிறுத்திவிட நீங்கள் முயற்சித்து பின் அதிலிருந்து மீண்டதாகவும் இதுவிடயங்களில் மிக நெருக்கமானவர்களினூடாக அறிந்தேன். வேதனைப்பட்டேன். அதனால், இதனை வரைகின்றேன்.

அண்ணா!

இது வரலாறு. உங்கள் மீது சுமத்தியிருக்கும் பெரும் பணி. எமது தேசியத் தலைவர், எத்தனை துன்பங்களை, எத்தனை நெருக்கடிகளை, எத்தனை அவமானங்களை, எத்தனை ஆபத்துக்களைச் சுமந்து கல்லில் நார் உரிப்பதுபோல இந்த விடுதலை இயக்கத்தை கட்டிவளர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள். சுயநல சிந்தனையுடைய யாழ்ப்பாண சமூகத்தில் இருந்து அதி அற்புதமான தியாக மனிதர்களை உருவாக்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்?

இன்று, உலகத்தமிழ் சமூகத்தை, நாடு பற்றிய இனம் பற்றிய சிந்தனையுடன் அக்கறையுடன், தமது இனத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புடன், உணர்வுள்ள மக்கள் சமூகமாக மாற்ற அவர் புரிந்த தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைத்துப் பார்க்கமுடியாதவை.

விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன்போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள்.

குழப்பவாதிகள், குழப்படிக்காரர், தங்கள் அதிகார இருப்பு ஆட்டங்கண்டுவிடும் என்ற பயத்தில் இருப்பவர்கள், தங்கள் பிழைப்பில் மண்வீழ்ந்துவிடும் என அச்சப்படுபவர்கள், தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் தங்களின் அனுமதியுடனேயே நடைபெறவேண்டும் என்று, தலைமைக்குப் புறம்பாக சிந்திக்கத் தலைப்படும் குட்டிக் குட்டி குறுநில மன்னர்கள் இப்படியாக பலர் குறுக்கிடுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பயணப்பட வேண்டியது, தமிழ்மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களினது தலையாய பணி.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள்.

அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது.

தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே என்போன்றவர்களின் விருப்பம்.

எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும்.

காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும்.

உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்புடன்

ராஜநாதன்

thanks

nathakeetham@gmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழரசு மிகவும் பலமான அமைப்பாக அமையபோகிறது. ஒரு சிலரே ராஜபக்சவின் எலும்புத்துண்டு அலைகிறார்கள். பெரும்பான்மையானமக்கள் நாடுகடந்த அரசின் பிறப்பை எதிபார்த்து இருக்கிறார்கள். மே இரண்டு தமிழரின் விடிவுக்கு அத்திவாரமாக நிச்சயம் அமையும்.

வெளிநாடுகளில் உள்ளவர்களால் ஒண்டும் புடுங்க முடியாது. முள்ளிவாய்க்கால்வரை சனத்தை கொண்டுபோய் கொல்லத்தான் வெளிநாடுகளில உள்ளவர்களால முடியும். தமிழ் தேசியக்கூட்டமைப்பால் மட்டுமே நாட்டில் உள்ள மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க முடியும். நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளில உள்ளவர்களை நம்பவும் இல்லை. அவர்களின் கதையை கேட்க தயாராகவும் இல்லை என்பதை தேர்தல் மூலம் சொல்லிப்போட்டினம். வெளிநாட்டில உள்ளவை நாட்டில உள்ள சனத்தை வைச்சு பிழைப்பு நடத்த வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் உள்ளவர்களால் ஒண்டும் புடுங்க முடியாது. முள்ளிவாய்க்கால்வரை சனத்தை கொண்டுபோய் கொல்லத்தான் வெளிநாடுகளில உள்ளவர்களால முடியும். தமிழ் தேசியக்கூட்டமைப்பால் மட்டுமே நாட்டில் உள்ள மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க முடியும். நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளில உள்ளவர்களை நம்பவும் இல்லை. அவர்களின் கதையை கேட்க தயாராகவும் இல்லை என்பதை தேர்தல் மூலம் சொல்லிப்போட்டினம். வெளிநாட்டில உள்ளவை நாட்டில உள்ள சனத்தை வைச்சு பிழைப்பு நடத்த வேண்டாம்.

கூட்டமைப்பால் ஒரு கட்டத்துக்கு மேல் போக முடியாது, முகாமில் இருக்கும் மக்களை சொந்த இடத்தில் குடியேத்தி இருக்க வீடு கட்டி கொடுத்து தொழில் வாய்புக்களை தொடங்க வசதி செய்து கொடுத்து இயல்பு வாழ்கைக்கு திரும்ப வைக்க பலமாக உழைக்க வேண்டும், சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களை இயல்பு வாழ்க்கை வாழ வைக்க கடுமையாக மேலும் உழைக்க வேண்டும், போராளிகளுக்கு பொது மன்னிப்பு வாங்கி கொடுத்து அவர்களை இயல்பு வாழ்கைக்கு திரும்பி பொது மகனாக வாழவைக்க மிக கடுமையாக மேலும் மேலும் உழைக்க வேண்டும்.தம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த அரசின் மீது வெறுப்பு போய், தாமும் சரிசமனாக வாழ தமிழர்கள் ஏற்றுகொள்ள கூடிய ஒரு தீர்வை பெற்று கொடுக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும், இவை எதுவும் நடவாத போது போராட்டம் மீண்டும் மீண்டும் முகிழ்க்கும், இது எதுவும் நடை பெறாமல் இருக்க சிங்கள அரசு முன்வரவேண்டும், சிங்களத்தை முன்வர வைக்க புலம்பெயர் மக்களின் இத்தகய செயற்பாடுகள் மிக மிக அவசியம், இவர்களது இத்தகய போராட்டமே சிங்களத்தை முன்நகர்த்தி செல்லும், கூட்டமைப்பின் மூலமாக செயற்படுத்தினாலும், நகர்த்தும் உந்து சக்தியாக புலம்பெயர் மக்களே இருப்பர், நான் பெரிது நீபெரிது என பாராது நாடு பெரிது என அனைவரும் சேர்ந்து போராடி தமிழர் தம் உரிமையை பெற்று கொடுக்க வேண்டும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே. :rolleyes:

Edited by சித்தன்

வெளிநாடுகளில் உள்ளவர்களால் ஒண்டும் புடுங்க முடியாது. முள்ளிவாய்க்கால்வரை சனத்தை கொண்டுபோய் கொல்லத்தான் வெளிநாடுகளில உள்ளவர்களால முடியும். தமிழ் தேசியக்கூட்டமைப்பால் மட்டுமே நாட்டில் உள்ள மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க முடியும். நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளில உள்ளவர்களை நம்பவும் இல்லை. அவர்களின் கதையை கேட்க தயாராகவும் இல்லை என்பதை தேர்தல் மூலம் சொல்லிப்போட்டினம். வெளிநாட்டில உள்ளவை நாட்டில உள்ள சனத்தை வைச்சு பிழைப்பு நடத்த வேண்டாம்.

தம்பி நீர் உள்னாட்டில் இருந்தும் ஒண்டும் புடுங்க முடியாது. தமிழர்களை விற்று கொஞ்சம் பணமும் , சில எலும்ம்புதுண்டும் சம்பாதிக்கலாம்.

த தே கூ மட்டுமே உரிமையை பெற்று கொள்ள முடியும் உமது வாக்கு பலிக்க வேண்டும் என ஆசைபடுகிறேன். உமக்கு தெரியுமோ இந்த கூட்டமைப்பு தான் முன்னர் வேறு சில கட்டிகளின் பேரில் பார் ஆளு மன்றம் சென்று வெற்று கையோடு திரும்பியவர்கள்.

இங்குள்ள முக்கிய தடை

1.சிங்களவன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க விரும்பாமை

2. தமிழரின் ஒற்றுமையின்மை ( நீங்களே பிரிவினை வளர்க்கிறீர்கள்)

ராஜபக்ச வீசும் எலும்புத் துண்டுகளுக்கு அலையும் இந்திய இராசதந்திரிகளும், இந்திய அடிவருடிகளும் உற்சாகமாக கொஞ்ச காலம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரையும் ஏற்றிச் செல்லக் கப்பல் வருமா?

கடைசி நம்பிக்கையை கொடுத்து இந்தியா இது தவறு, தவறுக்காக வருந்துகாலம் உருவாக்கபடும், ஒட்டு மொத்த தமிழர்களின் எதிரி இந்தியா. இந்தியாவின் எதிரிகளுடன் கைகோப்போம், அவர்களை பலப்படுத்துவோம்,அவர்களுக்கு உதவிகள் செய்வோம், இந்தியாவை உடைப்பதையே லட்சியமாக வரித்து கொள்வோம், இந்திய நக்சலட்டுகளின் போராட்டத்துக்கு உலகவெளியில் ஆதரவை திரட்டுவோம், அவர்களது வெற்றிகளை உலகம் முழுதும் பரவும் வகை செய்திடுவோம், அடக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் ,அவர்கள்சார்ந்த ஒன்றுகூடல்களிலும், பேரணிகளிலும் விருப்புடம் பங்கேற்போம். அவர்களுக்கு ஆதரவாக எ்ன்றும் செயற்படுவோம். :lol::lol::lol:

இது நடக்காது, முடியாது என்றிருக்காது, ஏதாவது ஒருவழியில் இருக்கும் சக்திக்கு ஏற்றவாறு நகரத்தான் வேண்டும்.

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன்.

முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.

அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களின் நிலைப்பாடனதே எனதும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களுடனான பலமான கருத்துப்பரிமாற்றத்தின்பின்பே இக்கடிதம் வரையப்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முக்கியமானது நாடுகடந்த அரசின் கோட்பாடுகள் எமது தேச நலன்களுக்கு எதிராக இருப்பது. அடுத்தது தேர்தல் விதிமுறைகள்.

உதாரணம்: தமிழீழத்தில் இருநாடுகள் தேசியக்கொடி ஏற்காதது போன்றது மிக முக்கியமானது.

புலம்பெயர் மக்களிடம் நேரடி விவாதங்கள் மூலமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் இந்த முக்கியமான விடயத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தன்னிச்சையாக இந்த முடிவுகள் எட்ட காரணங்களை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் அறிவித்தபடியே நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமிழினம் பேரழிவை சந்திப்பதை தவிர்க்க இயலாது போய்விடும்.

இன்று நீங்களும் சரி நாங்களும் சரி உலகிற்கு தெரிவதற்கும் உலகம் உங்களை அறிவதற்கும் காரணம் எமது தேசியத் தலைவரும் அவர் வழி வந்த விடுதலைப்புலிகளும் அவர்கள் செய்த தியாகங்களும்தான். அவ்வழிகாட்டியவர்களின் தீர்க்கமான போரட்ட சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் மாற்ற உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?.

விடுதலைப்புலிகளின் சிந்தனையும் கோட்பாடும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விருப்பமே அன்றி தனிநபர்களுடையது அல்ல. ஆகவே அதை மற்ற வேண்டிய தேவையின் அவசியம்தான் என்ன? எமது மக்களும் மாவீரர்களும் நேசித்து நெஞ்சை நிமிர்த்தி வணங்கிய கொடியினை, எமது மக்கள் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு கண்கள் தளும்ப இந்தக்கெடியினை ஏற்றி மீண்டும் எப்போது எமது விடுதலை வீரர்கள் வணங்கப்போகிறார்களே என ஏங்கும் கொடியினை, இளையோர் கை சேர்ந்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் எழுட்சியும் வீரமும் தந்திட்ட கொடியினை, பாரில் நாம் தமிழரென எம்மை அடையாளப்படுத்திய கொடியினை, நீங்கள் மட்டும் ஏற்ற மறுத்ததன் மர்மம்தான் என்ன.

இது தீவிரவாதிகள் கொணர்ந்த கொடி ஆகவேதான் என எமக்கும் தீவிரவாதம் காட்ட நினைக்கின்றீர்களா?.அப்படி நீங்கள் எதிர்க்கவில்லையென்றால் ஏன் நாடுகடந்த அரசின் கொடி புலிக்கொடி என அறிவிக்கவில்லை. இல்லை இவற்றை தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் தீர்மானிப்பார்கள் என்றால் ஏன் முன்கூட்டியே கோட்பாடு வரையப்பட்டது. அனைத்து வரைவுகளையும் தீர்மானிக்கும் பொறுப்புக்களையும் பிரதிநிதிகளிடமே விட்டிருக்கலாமே.

தேர்தலை நடத்தும் பொறுப்பை மட்டும் வகிப்பதோடு நிறுத்தியிருக்கலாமே. சிலது மட்டும் இப்பொழுது மற்றையது பிற்பாடு என ஏன் தள்ளாட்டம். வெளிப்படையானது என்றால் தடைகளை நேரிடையாக மக்களிடம் அறிவிக்கலாமே. முஸ்லிம் மக்களை நாம் வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. அவர்களும் தமிழர்கள் போன்று அனைத்து சுதந்திரத்துடனும் எதிர்கால தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களினது விருப்பமும்.

தமிழீழத்தில் அனைத்து சமூக மக்களும் சரி நிகரான பேதத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் எமது தேசியத் தலைவரின் விருப்பமும் கூட. இதை அறியாதவர்கள் அல்லர் எமது மக்கள். அனைத்து தரப்பு மக்களின் விருப்பமும் அதுவே. விரும்பும் விரும்பாத பட்சத்தில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படியான மிக முக்கியமான விடயங்களை மக்களுக்கு முன் நேரடி விவாதத்திற்கு விட்டிருக்கவேண்டும்.

விடயம் இப்படியிருக்க முஸ்லிம் சகோதரர்களுக்கு தனி நாடு ஆசை காட்டி எதிர்கால சந்ததியினர்க்கு பெரும் துரோகம் இழைக்கும் இந்த இகழ்ச்சியான சிந்தனையை உங்களுக்கு தந்தவர்கள் யார்?. விடாமல் மீண்டும் வேற்றுமையை தேற்றுவித்து பகைமையை உருவாக்கி தீராத போராட்டத்தையும் பேரிழப்பையும் எமக்கு ஏற்படுத்துவதுதான் உங்கள் திட்டமா?.

தேர்தலுக்கு வருவோம்...

முக்கியமானவற்றைப் மட்டும் இப்போது பார்ப்போம்.

1.தேர்தலில் நிற்பதற்கு ஆயிரம் பவுண்ஸ்கள்?!!

2.காவற்துறையின் நற்சான்றிதழ்?!!

3.அந்தந்த நாட்டில் வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!!

முதலாவது ஆயிரம் பவுண்ஸ்கள் யார் முடிவெடுத்தது. சரி ஆயிரம் பவுண்ஸ் கேட்ட நீங்கள் இளையோர்களை எப்படி எதிர்பார்ப்பீர்கள்?. ஒரு மனிதனின் சராசரி வருமானமே 800 முதல் 850 பவுண்ஸ்கள்தான். அப்படியிருக்க படித்துக்கொண்டு மிகுதிநேரத்தில் வேலைசெய்யும் ஒருவருடைய வருமானம் எவ்வளவாக இருக்கும் என நினைக்கினறீர்கள்? சரி படிக்காத இளையோர்களை எடுத்துக்கொண்டால் ஒருமாதத்திற்கு மேற்பட்ட வருமானத்தை உங்களுக்கு தந்தால் அவர்களின் அந்த மாத குடுப்பச் செலவை யார் அண்ணா ஏற்பார்? தமிழீழத்திற்காக உயிரையும் கூட கொடுப்பார்கள் ஆயிரம் பவுண்ஸ்களையா கொடுக்கமாட்டார்கள் என கேட்கின்றீர்களா?? அப்படிக் கேட்டாலே நீங்கள் யார் என்பதை மக்கள் இலகுவில் ஊகித்துக்கொள்வார்கள்.

ஆகவே நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியானால் எப்படித்தான் அரசு நடத்துவது என்கின்றீர்களா?. பிரித்தானியா ஏற்பாட்டாளர்களே கூறினார்களே இதுவரை நடந்த கூட்டங்களுக்கே 45ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் செலவாகியது என்று. சாதாரண விளக்க கூட்டமே 5ந்து நட்சத்திர விடுதியில்தானே பல பல ஆயிரம் பவுண்ஸ்கள் செலவழித்து நடந்தது அதுபோல நடத்த முடியாத?

நானே பல முறை நட்சத்திரக் கூட்டங்களுக்கு வர முயன்றும் முடியவில்லை அங்கு வருவதற்கும் பணம் தர வேண்டுமாமே பல நுறு!. அப்படியிருக்க சாதரண மக்கள் எப்படி உங்கள் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை பெற முடியும் என நினைத்தீர்கள்?. அனைவருக்கும் எப்படி உங்களுடன் கருத்துக்கள் பரிமாறியிருக்கமுடியும் அனேக நேரத்தில் உங்கள் பேச்சை ஒளிபரப்ப ஸ்கைப் கூட வேலை செய்வதில்லையாமே! அதைக்கூட முளுமையாக ஒழுங்கு செய்யத்தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி அண்ணா?

சரி பணத்திற்கு வருவோம். எனக்குத் தெரிந்து பிரித்தானியாவில் ஜநூறு பவுண்ஸ்களும் இந்தியாவில் 30 ஆயிரம் ரூபாக்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆவதற்கு தேர்தல் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் உங்களுக்கு தருவதற்காக தரவுகள் எடுக்கவில்லை எனக்கத் தெரிந்தவையே இவைகள் ஆனாலும் பொய்யில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஆயிரம் கேட்பதேன் நானே நேரிடையாக விசாரித்தேன் காரணம் கூரினார்கள் ஒன்று பலர் போட்டிக்கு வரக்கூடாது என்பது ஒன்று முக்கியமாக அவர்கள் கூறியது பலர் என்பதன் அர்த்தம் எதிரிகளையும் துரோகிகளையும் மகிழ்வாகவே இருந்தது எச்சரிக்கையாக இருக்கின்றர்களே என்று ஆனால் இன்று பல விடயங்களில் பலமாக இருப்பது எதிரியும் துரோகிகளும்தான் அவர்களுக்கு இந்த ஆயிரம் என்பது மிக சொற்பமான தொகையே.

எதிரிகளும் துரோகிகளும் இதற்குள் இறங்குவதென்று முடிவெடுத்து விட்டாலே அவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்குமா??. அடுத்தது அவர்கள் கூரியது இந்தப்பணம் அப்படியே தமிழீழ அரசுக்குச் செல்லும் அரசின் தேவைக்குப் பயன்படும் என்று. தேர்தலில் தோற்றால் கட்டுப்பணம் போய்விடும் வென்றால் திருப்பித் தருவீர்களா? மற்றது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் ஓட்டுப் பெற்றாலும் கட்டுப்பணம் திருப்பித்தரப்படும் என்று தெரிந்திருக்கின்றேன் தருவீர்களா?.

அரசுக்குச் இந்தப்பணம் செலவுக்கு உதவும் என்கின்றீர்கள் சரி அந்தக் செலவுக்கான கணக்குகளை கட்டுப்பணம் செலுத்தியவர்களிடமாவது காட்டுவீர்களா?. தேர்தலுக்காக அனைத்துவிடயங்களிலும் சட்டத்தை பின்பற்றும் நீங்கள் பண விடயத்தில் மட்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது எவ்விதத்தில் நியாயம்? சரி பண விடயத்தை இத்தோடு முடிப்போம். அடுத்து காவற்துறையின் சான்றிதழ். அதாவது எனக்கு எவ்விதமான வழக்கும் இல்லை நான் அப்பழுக்கற்றவன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நல்ல விடயம்தான் சான்றிதழ் கோட்பது தவறில்லைதான். ஆனால் யாரிடம் கோட்கின்றீர்கள் தெரியுமா? சென்ற வருடம் இதே மாதம் பல இலட்சம் மக்கள் கூடி போரை நிறுத்து எமது மக்களின் உயிரோடு விளையாடாதே என முழங்கிய பல இளையோர்களுக்கு இன்று வரை நீண்டுகொண்டே செல்கிறது பிரித்தானிய நீதிமன்றின் பிடியானை ஓ பரமேஸ்வரனுக்கு ஏதே கேஸ் இருக்குப் போல அதுதான மனுசன் இப்படிக்கத்துறான் என்பார்கள்.

எனக்கு பிரித்தானியாவில் ஒரு வழக்கு இருப்பதாக நிரூபித்தாலும் அவர்களுக்கு வாழ்நாழ் அடிமையாக இருப்போன். எனக்கு பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று சரி இதை விடுவோம். ஆகவே போராட்டத்தில் பங்கு பற்றி காவற்துறையோடு முரன்பட்டவர் முட்டிமோதியோர் நான் புலி என்னையும் பிடி சிறையெடு என கதறியோர் என பெரிய பட்டியலே அடங்கும் பிரித்தானியா பிரஜா உரிமை கேட்க போன இடத்திலும் இதைக்காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு.

இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது ஆனாலும் பெரும்பாலும் நீங்கள் அழைக்கும் இளையோர்களே. அப்படியிருக்க இவர்களுக்கு எப்படி நற்சான்றிதல் தருவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?ஆகவே தொலைநோக்குள்ள நீங்கள் எதிர்பார்ப்பது எவ்வித வீரியமான போராட்டங்களில் பங்கெடுக்காத தூர நின்று வேடிக்கை பார்தவர்களைத்தானே அன்றி போராட்டவாதிகளை அல்ல. நல்லது. ஆகவே இதிலும் குற்றச்செயல்கள் பட்டியலிட்டு தகுதி பெறும் பெறாதவை என வரையறுக்கப்படல் வேண்டும்.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் விடுதலைக்குப் போராடி தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் அப்படியா?. அடுத்தது வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!! நீங்கள் கூறும் காரணங்கள்.. வேறு நாடுகளில் கூட்டங்கள் நடக்கும்போது அவர்கள் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். ம்ம்ம் சரி இந்தியாவில் இருந்து ஜந்து பிரதிநிகளை தேர்ந்தெடுக்கப்போகின்றீர்களே அவர்களுக்கு இந்திய அரசாங்கமும் நீங்கள் கூட்டங்கள் நடத்தப்போகும் நாடுகளும் விசா தரும் என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?

பிரித்தானியாவில் அனேகமானேருக்கு பிரித்தானியாவில் வசிக்கலாம் எனவும் பல பேருக்கு விசா வழங்குவது இன்னும் நிழுவையில் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை. இதற்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?.அடுத்து இலங்கைப் புத்தகம் வைத்திருப்பவர்களும் ரவல் டொக்கிமெண்டு வைத்திருப்பவர்களும் நீங்கள் அழைக்கும் நாடுகளுக்கு வர முடியும் என்பதையாவது உங்களால் உறுதி செய்ய முடியுமா?

ஏனெனில் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ்சுக்கும் பிரான்ஸ்சில் இருந்து பிரிட்டனுக்கும் வரவே எவ்ளவே பேர் எனக்கு தெரிந்தே அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே அப்படி அவர்கள் வரமுடியாத பட்சத்தில் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்? இன்று தொழில் நுற்பம் வியப்புமிக்க வகையில் வளர்ந்திருக்கம் நிலையில் றூற்றுக்குமேற்பட்டவர்களை பல நாடு கடந்து ஒட்டுமொத்தமாக பல இலட்சம் பவுண்ஸ்களையும் ஈரோக்களையும் டொலர்களையும் செலவிட்டு நீங்கள் நடத்தப்போகும் கூட்டங்களுக்கு செலவழிப்பதைவிட இன்றைய தேவையுணர்ந்து பல தேவைகளுக்காக காத்திருக்கம் எமது தேச மக்களுக்காக செலவிடலாம்.

ஒரு பாரளுமன்றத்தையே கொண்டுசெல்வது எத்தகைய சிரமம் ஆனால் நீங்கள் நாடு நாடாக தமிழீழ பாரளுமன்றத்தை பல இலட்சங்கள் செலவில் கொண்டுதான் சென்றாகவேண்டுமா?. நாடுகடந்த அரசு தேவையா இல்லை என்பதல்ல எமது விவாதம். தமிழீழ அரசு நிச்சயம் தேவை அதில் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் சரிசெய்ய வேண்டும் என்பதே எமது அவா. ஏனெனில் எதிர்கால சந்ததியிடமும் போராட்டத்தை ஒப்படைத்து வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம் என்பதே எமது எண்ணம்.

அனைத்தையும் திறந்துவிட்டுவிட்டு என்னதான் செய்வது அப்படியெல்லாம் விடமுடியாது என்கின்றீர்களா? முடியும் நீங்கள் அறிவித்த விதிமுறைகளில் சிறப்பானது 100 கையொப்பம் மற்றும் விலாசம் பெற்றுவர வேண்டும் என்பது.100 கையொப்பத்தை 200 ஆக்குங்கள் மக்களுக்கு தெரிந்தவர்களும் வந்த மாதிரி இருக்கும். வீடுவீடாக ஏறி இறங்கி ஆதரவுகேட்டமாதிரியும் இருக்கும்.

இதுநாள்வரை வீடு வீடாக சென்றவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும். நாட்டுக்கு உழைப்பதென்றால் என்வென்றும் தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும்.

இதில் துரோகிகளே எதிரிகளோ வர வாய்ப்பே இருக்காது ஏனெனில் மக்கள் இப்போது அனைவரையும் அறிந்திருக்கின்றார்கள். என்னுடைய வரிகள் உங்கள் மனதை காயப்படுத்தியிருக்கும் ஆனாலும் தவிர்க்க இயலாதது. காயங்களை தாங்க இயலாவிட்டால் போராட்டத்தில் இருக்கமுடியாது என்பது நீங்கள் உணராதது இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றியுடன்

சு.பரமேஸ்வரன்

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதெல்லாத்தயும் பெரிசுபடுத்திக்கொண்டு....1000 பவுன்ஸ் தூக்கி முகத்தில எறிஞ்சிட்டு பெடியளிட்ட சொல்லுங்கோ....நிரந்தர பிரசா உரிமைய ரவர் ஸ்ராம் செய்து குத்திவிடுவாங்கள் கேசுகள பற்றிதான் கெட்லன்யாட்டு விட்டாலும் பேப்பர்காரர் விடுவாங்களோ தெரியா. பாங்கில காசிருந்தா தனிநாடு கிடைக்கும் எண்டு சொன்னமாதிரி ஒண்ட விட்டு ஒரு கலக்சன் செய்தாவது கேச வெல்லவேணும் உந்த பிரச்சனையும் தீந்திடும். :lol:

நாடுகடந்த அரசாங்கம் புலத்தில் உள்ள தமிழர்களின் பலம்..

ஒவ்வொரு நாட்டிலும் சிதறிவாழும் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க இதுதான் முதற்படி. தாய் நிலத்தில் இருந்து கொண்டு சிலவேலைகளை செய்யமுடியாது.

அனால் புலத்திலிருந்து செய்தால் சிங்களவனால் ஒன்றும் செய்ய முடியாது.

சிறு குழுக்களாக இல்லாமல் ஒரு பெரும் சக்தியாக நாம் உருவெடுக்கவேண்டும். முளியவாய்க்கால் முடிவல்ல அது ஒரு புதுத் தொடக்கம்.

வெற்றிபெறும்

வெற்றிபெற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.