Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகம் என்பதற்கான போதுமான வரலாற்று சான்றுகள் கிடையாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீகம் கிடையாது எனவும் அதற்கு போதுமான வரலாற்று சான்றுகள் இல்லை எனவும் முன்பு தமிழர்கள் விகாரைகளிலேயே வழிபாடு நடத்தினர் எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மரபுகள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் எனவே அவற்றை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐhதிக ஹெல உறுமியவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை புலிகள் ஆக்கிரமித்திருந்தனர். இக் காலப் பகுதியில் அப்பிரதேசங்களுக்கு இலங்கை அரசின் பிரதிநிதிகளாலோ அல்லது ஏனைய தரப்பினராலோ செல்ல முடியாமல் இருந்தது.

ஆனால், தற்போது உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு சுதந்திரமாக செல்லக் கூடிய சூழல் காணப்படுகின்றது. புலிகளின் ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் வட,கிழக்கில் அழிக்கப்பட்டவை ஏராளம்.

அவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டபோது பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.குறிப்பாக வடக்கில் மன்னார், அடம்பன் பூநகரி, பரந்தன், புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, நந்திக்கடல், துணுக்காய், அம்பகாமம் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களில் நாம் மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வுகள் மூலம் பௌத்த பாரம்பரியம் காணப்பட்டதற்கான பௌதீக தடயங்கள் கிடைத்துள்ளன.

பௌத்த விகாரைகளை புலிகள் அழித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.இலங்கையில் தமிழ் மன்னர்கள் காணப்பட்டனர். ஆனால், அவர்களுக்கென்று பூர்வீக நிலப்பரப்பு எதுவும் இலங்கையில் காணப்படவில்லை. பல்வேறு படையெடுப்புகள் மூலமான ஆக்கிரமிப்புகளே காணப் பட்டுள்ளன. புலிகளின் காலத்திலேயே இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகமாக உரிமை கோரப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் எமது ஆய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

http://www.pathivu.com

ஏன் புத்தசிலைகூட பூமிக்கடியில் கிடைக்கும்.

இந்தியாவின் பல பகுதியிலையும் ஏன் ஆப்கானிலையும் பௌத்த அடையாளங்கள் கிடைக்கிறதாம் தேரை கேள்விப்பட இல்லையோ....??? அதுவும் சிங்கள நாடுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

map.JPG

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

திவாகர நிகண்டு

நாவலந் தீவே இறலித் தீவே

குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே

சான்மலித் தீவே தெங்கின் தீவே

புட்கரத் தீவே எனத்தீ வேழே

ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்

என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.

ஆராய்ச்சி :

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.

இந்தியாவின் பல பகுதியிலையும் ஏன் ஆப்கானிலையும் பௌத்த அடையாளங்கள் கிடைக்கிறதாம் தேரை கேள்விப்பட இல்லையோ....??? அதுவும் சிங்கள நாடுதான்...

இல்லை பாமியன் சிலை சம்பந்தமாக கத்தினவர்கள் பின்னர் தலி.....ன்களின் நிலையால் அமைதியானார்கள்.

ஒரு மதக்கோட்பாட்டை வைத்து இயங்கும் பயங்கரவாத இயக்கம் இந்த ைலங்கை புத்த மதக்கோட்பாடு. இது மதமே அல்ல.

புரட்சிகர தமிழ்தேசியன், உங்கள் ஆய்வு தொடரட்டும். உங்கள் அறிவு வியப்பளிக்கிறது. உங்கள் தகவலுக்கு நன்றி. மிகவும் நல்ல தகவல்கள்.

Edited by Seyalalan

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

இது முற்றிலும் பிழையான தகவல். எங்கு பெற்றீர்கள்?

Edited by Aasaan

தாய் தமிழத்தில் கூட யாழ்ப்பாணம் என்ற பெயரில் ஓர் ஊர் கூட இல்லை.திருநெல்வேலி,வல்வெட்டித்துறை போன்ற பெயர்கள்,பார்ப்பனீய நச்சரவம் தீண்டா தனித்துவ பண்பாடு போன்ற சான்று உள்ளங்கை நெல்லிக்கனி போல ஈழம் தமிழர்களின் தாயகம் தான் :lol::D:huh:

சிங்களவனால் கூறப்படுவதின்படி கி.பி. 600 இலிருந்து புனையப்பட்ட (பொய்க்) கதையே "மகா வம்சம்".

இதை தமிழர் "மகா பொய்வம்சம்" என்றே அழைப்பர்.

சிங்களவன் கி.பி. 800 க்கு முன்னர் இலங்கையில் இருந்ததுக்கு உண்மையான ஆதாரங்கள் எதுவுமில்லை.

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

இது முற்றிலும் பிழையான தகவல். எங்கு பெற்றீர்கள்?

ஆம் தோழர் சிங்களவர்களது ஒப்புமையும் இருந்தால் நன்றாக இருக்குமே என இணையத்தில் தேடினேன்...அதில் தவறு இருக்கலாம்... ஆனால் தமிழர் இலக்கியத்தில் உள்ளது அனைத்தும் உண்மையே தோழர் ஆசான்....

நாட்டை பறிகொடுத்தாச்சு இனி அவர்கள் சொல்வது எல்லாத்துக்கும் கோவில் மாடு போல் தலையை அசைக்கவேண்டும் இல்லையேல் ....... :lol::D:huh:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை பறிகொடுத்தாச்சு இனி அவர்கள் சொல்வது எல்லாத்துக்கும் கோவில் மாடு போல் தலையை அசைக்கவேண்டும் இல்லையேல் ....... :lol::D:huh:

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....ரூம் போட்டு யோசிபாங்களொ.....

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....ரூம் போட்டு யோசிபாங்களொ.....

அதெல்லாம் எஜமானிகளின் வேலை..........

சொல்வதை திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளை வேலைதான் இப்ப லேட்டஸ்சா நடக்குது......

ஆம் தோழர் சிங்களவர்களது ஒப்புமையும் இருந்தால் நன்றாக இருக்குமே என இணையத்தில் தேடினேன்...அதில் தவறு இருக்கலாம்... ஆனால் தமிழர் இலக்கியத்தில் உள்ளது அனைத்தும் உண்மையே தோழர் ஆசான்....

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.