Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தப்பித்தான் தமிழ்நாட்டு தமிழன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தப்பித்தான் தமிழ்நாட்டு தமிழன்!

Indian-bank-Logo55.jpg

rupeepw9.png

"அடேய் சுரேந்திரா! வைத்தி!! விஷயம் தெரியுமா?"

கையில் செய்தித்தாளுடன் அறைக்குள் உற்சாகமிகுதியில் கூவியபடி நுழைந்தேன்.

"என்னடா ஆச்சு? ஸ்ரேயா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" வைத்தி நமுட்டுச்சிரிப்போடு கூறினான்.

"நமக்கு நல்ல காலம் பொறந்திருச்சிடா!" என்று உற்சாகமாகக் கூவினேன்.

"அப்படீன்னா, வேறே யாரையோ கல்யாணம் பண்ணிக்கப்போறாளா?" என்று நக்கலாகக் கேட்டான் சுரேந்திரன்.

"டேய் சுரேன்! என்னைக் கடுப்பேத்தினே, அடுத்த குருவாயூர் எக்ஸ்பிரஸிலே உன்னை ஏத்தி கொல்லத்துக்கே அனுப்பிடுவேன். தெரியுமா? எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்."

"அப்படியென்னடா தலைபோற விஷயம்?" என்று ஆர்வத்தோடு கேட்டான் சுரேந்திரன்.

"தலைபோற விஷயமில்லேடா! தலை தப்பிக்கிற விஷயம்!" என்றேன் நான்.

"புரியும்படியா பேசேண்டா! சே, இவனை விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குக் கூட்டிக்கிட்டு போனது பெரிய தப்பாப் போயிருச்சே!" என்று சலித்துக்கொண்டான் வைத்தி.

"அதுக்கு முன்னாலே நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க! நீங்க யாரு?"

வைத்தியும் சுரேனும் ஒருவரையொருவர் ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு, என்னை ஏற இறங்கப் பார்த்தனர்.

"டேய்! ஸ்மெல் கூட வரலியே? என்ன சாப்பிட்டே? ஜின்னா?" சுரேன் துணிவை வரவழைத்தபடி கேட்டான்.

"கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு! நீங்க யாரு? சரி, புரியும்படியாவே கேட்கிறேன். நான் தமிழன். நீங்க யாரு?" என்று அடுத்த கொக்கியைப் போட்டேன்.

"நான் இந்தியன்," என்றான் வைத்தி.

உடனே நான் என் கையிலிருந்த செய்தித்தாளைப் பிரித்துப்படித்தேன். பிறகு வைத்தியைப் பார்த்து சிரித்தேன்.

"அப்படீன்னா உன் தலையிலே 34,231 ரூபாய்!" என்றேன். "சுரேன், நீ சொல்லுடா. நீ யாரு?"

"நான் மலையாளி!" என்றான் சுரேன்.

"இரு, பார்த்திட்டு சொல்றேன்," என்று மீண்டும் செய்தித்தாளைப் பார்த்தேன். "ஐயோ சுரேன்! உன் தலையிலே 23,991 ரூபாய்!"

"என்னடா பேத்தறே? ஒண்ணுமே புரியலியே!" என்று பொறுமையிழந்தான் வைத்தி.

"சொல்றேன் கேளு! இன்னிக்கு நம்ம நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையிலே ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறாரு. அதன் படி ஒவ்வொரு இந்தியனோட தலையிலேயும் 34,231 ரூபாய் கடனிருக்கு! ஒவ்வொரு கேரளாவாசியோட தலையிலேயும் 23,991 ரூபாய் கடனிருக்கு! அதாவது வைத்தியோட கடன் 34,231 ரூபாய்! சுரேனோட கடன் 23,991 ரூபாய்!"

"சரி, அதுலே உனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்?" என்று குழம்பினான் சுரேந்திரன்.

"இந்தியாவிலேயே தமிழன் ஒருத்தனுக்குத் தான் கடன் குறைச்சல்! ஒவ்வொரு தமிழன் தலையிலேயும் தலா 14,353 ரூபாய் கடன் தானிருக்கு! புரிஞ்சுதா, என்னை விட உங்க ரெண்டு பேருக்கும் தான் கடன் அதிகம்?"

"டேய் என்னையும் தமிழனா சேர்த்துக்கோடா!" என்று தாவாங்கட்டையைப் பிடித்துக் கெஞ்சாதகுறையாகக் கேட்டான் சுரேன். "என் வண்டி தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன். நான் சென்னைவாசிகளை விடவும் நல்லா தமிழ் பேசுவேன்; படிப்பேன். கொஞ்சம் எழுதவும் செய்வேன். உங்க கூட சேர்ந்து சேர்ந்து தமிழ் சினிமா தாண்டா பார்க்கிறேன். பாவி, "பழசிராஜாவு"க்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு "கந்தசாமி"க்குக் கூட்டிக்கிட்டுப் போனியே? இந்த நிமிஷம் வரைக்கும் ஏதாவது சொல்லியிருப்பேனா? நான் உங்களுக்காகக் குழல்புட்டு சாப்பிடறதையே நிறுத்திட்டேன் தெரியுமா? டேய் டேய் ப்ளீஸ்! என்னையும் தமிழனிலே சேர்த்துக்கோடா," என்று தெருவில் கிரிக்கெட் ஆடுகிற பொடுசுகளிடம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளக் கெஞ்சுகிற பெரிசு போல கெஞ்சினான் சுரேன்.

ஓ.கே! ஓ.கே!" என்று பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்ட நான் வைத்தியைப் பார்த்து,"என்னடா, இப்பவும் நீ இந்தியன் தானா? அல்லது தமிழன் மட்டுமா?" என்று கேட்டேன்.

"ஹி..ஹி! நான் சும்மா லுல்லுலாயிக்காக இந்தியன்னு சொன்னேண்டா! நான் மறத்தமிழன்னு உனக்கே தெரியாதா? எத்தனை படத்தை முதல்நாள், முதல் ஷோ பார்க்கப்போயி சட்டை கிழிஞ்சு வந்திருக்கேன்? ரூமுலே இருந்தா ஒரு சீரியல் விடாமப் பார்க்கிறேன். ஈ.வி.சரோஜாவிலேருந்து இலியானா வரைக்கும் இருக்கிற எல்லா நடிகைகள் பத்தின கிசுகிசுவும் எனக்கு அத்துப்படி! எந்த நடிகை யாரை எந்த வருஷம் கல்யாணம் பண்ணினாங்க, எப்போ டைவோர்ஸ் பண்ணினாங்க, இப்போ யாரு யாரை லவ் பண்ணிட்டிருக்காங்கன்னு மொத்த விபரத்தையும் மனப்பாடமா வச்சிருக்கேன். எல்லாப் பாராட்டு விழாவையும் டிவியிலே பார்க்கிறேன். இதுக்கு மேலே நான் தமிழன்னு நிரூபிக்கணுமா என்ன?" என்று ஆதாரபூர்வமாக தான் தமிழன் என்பதற்கான அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போனான் வைத்தி.

"குட்! இப்போ நாம மூணு பேருமே தமிழனுங்க! நம்ம மூணு பேருக்கும் தலா 14,353 ரூபாய் கடனிருக்கு! சரியா?"

"என்ன பண்ணலாம்கிறே? தமிழன் படத்துலே விஜய் பண்ணுறா மாதிரி நம்ம பங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிடலாம்கிறியா?" என்று மீண்டும் சிரித்தான் வைத்தி.

"டேய், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே.....," என்று திருக்குறள் சொல்லத்தொடங்கியவன் மறந்து போய் பாதியிலேயே நிறுத்த, "நிற்க அதற்குத் தக," என்று முடித்தான் சுரேன்.

"டேய், என்னதான் தமிழன்னாலும் டி.வி.க்காரங்க மாதிரி தமிழைக் கொலைபண்ணக்கூடாது. விஷயத்தைச் சொல்லு!" என்று சீரியசானான் வைத்தி.

"சொல்றேன் கேளு!" என்ற நான் என் கையிலிருந்த ஒரு கவரை வைத்தியிடம் நீட்டினேன். "இந்தா வைத்தி! ஒரு நண்பன் என்ற முறையிலே உன் கடனைத் தீர்க்க வேண்டியது என்னோட கடமை! வச்சுக்கோ!"

"என்னடா கூத்து இது?" என்று திருதிருவென்று விழித்தான் வைத்தி.

"இதுலே 14,353 ரூபாய்க்கு செக் இருக்கு! இதை வச்சு உன்னோட கடனை அடைச்சுக்கோ!" என்றேன் நான்.

"எப்படி? யாருக்குக் கொடுக்கணும்?" என்று கேட்டான் வைத்தி.

"இதோ சுரேன்! அவனுக்குக் கொடுத்திரு! உன் கடனும் முடிஞ்சது; அவனும் அவன் கடனை அடைச்சுக்குவான்!" என்றேன் நான்.

வைத்தியிடமிருந்து கவரை வாங்கிய சுரேன், முட்டைக்கோசை முழுசாக விழுங்கியவனைப் போல மலங்க மலங்க விழித்தான்.

"இதை நான் யாரு கிட்டேடா கொடுக்கணும்?" என்று பரிதாபமாகக் கேட்டான்.

"என் கிட்டே கொடுத்திடு!" என்று சிரித்தேன் நான். "அவ்வளவு தான்! நம்ம மூணு பேரும் இனிமேல் கடனாளி இல்லை! தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை செஞ்சாச்சு!"

"ஒரு நிமிஷம்! நான் வண்டி வாங்குறதுக்காக லோன் வாங்கியிருந்தேனே, அதை இனிமே கட்ட வேண்டாமா?" என்று கேட்டான் சுரேந்திரன்.

"எவ்வளவு லோன் இன்னும் பாக்கியிருக்கு?"

"இன்னும் இருபதாயிரம் பாக்கியிருக்கு!"

"எந்த பாங்குலே வாங்குனே?"

"இந்தியன் பாங்குலே!"

"அப்படீன்னா நாளைக்கே பாங்குக்குப் போயி பாங்க் மேனேஜர் கிட்டேயிருந்து மீதி பதினாலாயிரம் சொச்சம் ரூபாயை வசூல் பண்ணிட்டு வந்திடு!" என்றேன் நான்.

"என்னது? ஏன்?? ஒண்ணும் புரியலியே!" சுரேந்திரன் குழம்பினான்.

"அடேய்! அது இந்தியன் பேங்க்! அதுனாலே அவங்க இந்தியாவுக்குப் பட்டிருக்கிற கடன் 34,231 ரூபாய்! நீ கட்ட வேண்டியது இருபதாயிரம் லோன்! மீதி பதினாலாயிரம் ரூபாயை உனக்கு அவங்கத் திருப்பித் தரணுமா வேண்டாமா?"

"அட ஆமாண்டா!"

எங்கள் மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. இன்றோடு கடனாளியென்ற பழியிலிருந்து தப்பித்ததோடு நாளைக்கு பதினாலாயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சி வேறு!

நன்றி: தோழர் சேட்டைகாரன்

அப்ப இனி இந்தியர்கள் எல்லாம் தமிழர் ஆகிறதுதான் நல்லதா...? ? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இந்தியர்கள் எல்லாம் தமிழர் ஆகிறதுதான் நல்லதா...? ? :(

:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.