Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகள் வேண்டுமென்று இழுத்தடிப்பு

Featured Replies

பிரித்தானியாவில் நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகள் வேண்டுமென்று இழுத்தடிப்பு

திகதி: 13.05.2010 // தமிழீழம்

பிரித்தானியாவில நடைபெற்ற நாடு கடந்த அரசாங்க தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் திட்டமிட்டு வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்த காரணத்தினால், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நால்வர் அதிலிருந்து விலகியுள்ளனர்.

பிரித்தானியாவில் வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, லண்டனிற்கு வெளியே என 20 பேரைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில், தென்மேற்கு முடிவுகள் வேண்டுமென்று தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதால், தென்மேற்கில் வெற்றி பெற்றுள்ள ஐந்து பேரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் உட்பட நால்வர் இந்தத் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.

பிரித்தானியப் பொதுத்தேர்தல் கடந்த 6ஆம் நாள் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்னதாக மிக அவசர அவசரமாக கடந்த 2ஆம் நாள் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், முடிவுகள் வெளியிடப்படவில்லை. லண்டனிற்கு வெளியே நடைபெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, மீள் தேர்தல் நடத்தப்படும் எனக்கூறப்பட்ட போதிலும், தென்மேற்கு முடிவுகளை வெளியிடாது தேர்தல் ஆணையகம் வேண்டுமென்ற கால தாமதத்தை மேற்கொண்டு வந்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், முதல் இடத்தை பெற்ற டேவிட் பரராஜசிங்கம், இரண்டாம் இடத்தைப் பெற்ற மருத்துவர் என்.எஸ்.மூர்த்தி மற்றும் இவர்களுடன் இணைந்து போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவரான ஏ.வைரவமூர்த்தி ஆகியோர் தாம் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது பற்றி மருத்துவர் மூர்த்தியிடம் சங்கதி சார்பில் கேட்டபோது, தமது இந்த முடிவு மனதிற்குக் கஸ்டமாக இருந்தாலும், தேர்தல் ஆணையகத்தின் நடவடிக்கை தம்மை இந்த முடிவுக்குத் தள்ளியிருப்பதாகவும், தமக்கு வாக்களித்த மக்களிற்கு நன்றி கூறும் அதேவேளை, தாயகத்திற்கான தமது பணி தொடரும் எனவும் கூறினார்.

நாடு கடந்த அரசுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள விலகிய இந்த மூன்று வேட்பாளர்களும், மீள்தேர்தல் நடத்தப்பட்டால் அது வீணாண செலவு எனவும், முள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் காலத்தில் தேர்தலில் பங்கு கொள்வதில் மக்களின் ஆர்வம் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசு, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை கறுப்புப் பட்டியலில் இட்டிருப்பதாலா நீங்கள் விலகுகின்றீர்கள் என மருத்துவர் மூர்த்தியிடம் மீண்டும் சங்கதி சார்பில் கேட்டபோது, தமிழீழம் நோக்கிய கடந்தகால தமது பணிகள் காரணமாக தமது பெயர் ஏற்கனவே சிறீலங்கா அரசின் கறுப்பப் பட்டியலில் இருப்பதாகவும், சிறீலங்கா அரசின் செயற்பாடுகளை ஒரு பொருட்டாக எடுத்து அவற்றுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் கூறினார்.

தென்மெற்கு லண்டனில் இணைந்து போட்டியிட்ட ஐவரில் மூவர் விலகியுள்ள போதிலும், ஏனைய இருவரான வாசுகி சோமஸ்கந்தா, மற்றும் பரமசிவன் கார்த்திகேசன் ஆகியோரின் நிலைப்பாடு பற்றி தெரியவரவில்லை.

இதேவேளை, ஒன்பது வேட்பாளர்களில் ஏனையவர்களான வடிவேல் சுரேன், ஜெயசங்கர் முருகையா, உருத்திராபதி சேகர், தணிகாசலம் தயாபரன் ஆகியோரில் வடிவேல் சுரேனும் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8863&cntnt01origid=53&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.?

Edited by Thavaa

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.?

எல்லாம் உந்த நோர்வே பக்கம் இருக்கிற தேவனின் அருளாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் உந்த நோர்வே பக்கம் இருக்கிற தேவனின் அருளாம்.

ஏன் தேர்த்தல் ஆணையகத்தையும் அவரோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்? தேர்த்தலில் போட்டியிட்டவர்களை எப்படி அதுவும் வேறொரு நாட்டில் இருந்து கட்டுப்படுத்த முடியும்?

  • தொடங்கியவர்

ஏன் தேர்த்தல் ஆணையகத்தையும் அவரோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்? தேர்த்தலில் போட்டியிட்டவர்களை எப்படி அதுவும் வேறொரு நாட்டில் இருந்து கட்டுப்படுத்த முடியும்?

இதுக்கு உண்மையான பதில் எனக்கு தெரியும்... ஆனால் தேவை இல்லாமல் இணையவன் தூக்க ஏன் விடுவான் எண்டு பாக்கிறன்...

ஆனா சுருக்கமாய் ஒண்டை சொல்லுறன்... உருத்திரகுமார் அண்ணையாலையும் கட்டுப்படுத்த முடியாத சில சக்திகள் வேற இடத்திலை இருந்து இயக்குகின்றன...

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு உண்மையான பதில் எனக்கு தெரியும்... ஆனால் தேவை இல்லாமல் இணையவன் தூக்க ஏன் விடுவான் எண்டு பாக்கிறன்...

ஆனா சுருக்கமாய் ஒண்டை சொல்லுறன்... உருத்திரகுமார் அண்ணையாலையும் கட்டுப்படுத்த முடியாத சில சக்திகள் வேற இடத்திலை இருந்து இயக்குகின்றன...

தயா அண்ணா உண்மைகள் தெரியாதவரை மக்கள் அப்பாவிகளாக இருப்பது உங்களுக்கு விருப்பமா?

அதற்கு கனடாவில் தேர்த்தல் மாவட்டம்2 முடிவுகளே சாட்சி.

  • தொடங்கியவர்

தயா அண்ணா உண்மைகள் தெரியாதவரை மக்கள் அப்பாவிகளாக இருப்பது உங்களுக்கு விருப்பமா?

அதற்கு கனடாவில் தேர்த்தல் மாவட்டம்2 முடிவுகளே சாட்சி.

சொன்னால் யாழிலை வெளியிலை தெரியாமல் வெட்டு நடக்குது...! எனக்கேன் தேவை இல்லாத வேலை...??

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் யாழிலை வெளியிலை தெரியாமல் வெட்டு நடக்குது...! எனக்கேன் தேவை இல்லாத வேலை...??

தனி மடலிலாவது சொல்லுங்கோ தயா அண்ணா. என்ன தளம் ஐயா ஒரு தனி மனிதன் தனது கருத்தை சொல்ல முடியாத அளவுக்கு. இரவு பகலாய் தமிழ் மக்களுக்கு எதிராக வசை பாடும் பினாத்திகளை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை.ஆனால் யாரும் உண்மை சொன்னால் வெட்டி கொத்த ஒரு குழு அலைவது பொறுக்க முடியவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை எழுதுவதற்கு யாரும் தயங்க வேண்டியதில்லை.வெட்டுவது மக்களுக்குச் செய்தி சென்று சேராமல் தடுக்கும் குற்றமாகும்.எது உண்மை எது பொய் என்பதை மக்கள் வேறுபடுத்தி அறிந்து கொள்வார்கள்.வாசகர்கள் குழம்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் வெட்டுவது.வாசகர்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிடும் செயலாகும்.அவர்களின் தகுதியை குறைத்து மதிப்பிட யாருக்கும் உரிமையில்லை.தகுதியற்ற வாசகர்களைக் கொண்ட தளமா யாழ் இணையம்?ஆகவே தயா உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை எழுதுங்கள் எது பொய் எது உண்மை என்பதை வாசகர்கள் வேறுபடத்தி அறிந்து கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முறைகேடு எண்டு சொல்லிச்சினம், திரும்ப லெக்சன் நடந்த சிலமனையும் கானேல்ல, 18 ம் திகதி அமெரிக்காவில ஒன்றுகூடலாம்.... எல்லாமே புதுமையா கிடக்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.