Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறம் மாறும் பஞ்சோந்திகளும் புகலிடத் தமிழர் விசுவாசகமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு செய்யப்பட்டுள்ள தொழில்கட்சி வேட்பாளர் சுமார் 3500 வாக்குகள் வரை பெற்று மொத்த தமிழ் கவுன்சிலர்களோடும் ஒப்பிடும் போது வாக்கு அடிப்படையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளாராம்.

இது எப்படி என்றாலாம்.. அவர் "புலித் தேசியத்தை" (தமிழ் தேசியம் என்பது தேசத்தில் உள்ளவர்களிற்கு எப்போதும் புலித் தேசியமாகவே தெரிகிறது.) ஆதரித்தவர்களைக் காட்டிலும் பல நூறு வாக்குகள் அதிகமாம். அது வேறு யாரையும் அல்ல.. தயா இடைக்காடார் போன்றவர்களை குறிவைத்து ஒப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

போல் சத்தியநேசன் கோவில் மேடைகளில் பேசும் போது தமிழ் தேசியத்துக்கும் தாயகப் போராட்டத்திற்கும் ஆதரவாளர் போல் பேசிக் கொண்டு வாக்களிக்கும் இடங்களில் தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்கக் கெஞ்சிக்கொண்டு.. வாக்களிப்பு முடிந்து தெரிவு செய்யப்பட்டவுடன்... தேசம் போன்ற இனப்பற்றற்ற தேசபிமானமற்றவர்களின் பின் மக்களின் விருப்புக்கு எதிராக நிற்பது சரியா...??! இப்படியான இழி சனநாயக அரசியல் செய்ய போல் சத்தியநேசன் தொடர்ந்து செயற்படுவாராக இருந்தால் அவர் தமிழ் மக்களிடம் செல்வாக்கிழக்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

மேலும்.. அந்த லண்டன் குரல் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டி இட்டவர்களை ஒரு வாங்கு வாங்கி இருப்பதுடன் அந்தத் தேர்தல் ஒரு தேர்தலே அல்ல குழந்தைத்தனம் என்று தனது வெறுப்பை வாரி இறைத்துள்ளது. இதுதான் லண்டனில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள சில பிரித்தானிய தொழில்கட்சி கவுன்சிலர்களின் நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தல் குறித்த நிலைப்பாடு போன்ற ஒரு மயக்கக் கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயகம்.. மாற்றுக் கருத்து என்றெல்லாம் பேசும் பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் பற்றி சார்ப்பு நிலை பேசுவது பயங்கரவாதமாகக் கருதப்படும் நிலையில்.. அப்படியொரு தடையின் மத்தியில் தேசம் போன்ற நாதியற்ற பிழைப்புவாத அரசியல் செய்வோரின் பத்திரிகைகள் காட்டி வரும் இந்த பச்சோந்தி அரசியலை புலம்பெயர் தமிழ் மக்கள் எனியும் எனியும் அங்கீகரிக்கவா போகின்றனர்...??! இவர்களிற்கு வால்பிடிக்கும் அரசியல்வாதிகள் என்போரை எனியும் விசுவாசிக்கத்தான் வேண்டுமா..???!

போல் சத்தியநேசன்.. லண்டன் குரலில் எழுதப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவரின் மீது அபிமானம் கொண்டுள்ள வாக்காளர்களுக்கு விளக்குவது அவசியம். ஏனெனில் ஒரு தமிழன் வர வேண்டும் என்று அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களே அதிகம். அவர் ஒரு புலி தேசிய எதிர்ப்புவாதி அல்லது தமிழ் தேசிய எதிர்ப்புவாதி என்ற முத்திரையோடு தமிழ் மக்களின் முன் வந்திருந்தால் நிச்சயம் அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை கிடைத்த மொத்த வாக்குகளிலும் பாதியிலும் குறைவாகவே கிடைத்திருக்கும். அதுமட்டுமன்றி நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலை எள்ளி நகையாடி அதில் சில உறுப்பினர்கள் போல் சத்தியநேசனை விட இரு மடங்குக்கும் அதிகம் மக்களின் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதை மட்டம் தட்டி லண்டன் குரல் செய்தி வெளியிட்டுள்ளது. போல் சத்தியநேசன் லண்டனில் தமிழ் மக்களின் பெருந்தலைவர் என்பது போல் ஒரு பொய் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இதை போல் சத்தியநேசன் ஏற்றுக் கொள்கிறாரா...??!

இவை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ் தேசியத்தை போல் சத்தியநேசன் ஆதரிக்கிறாரா இல்லையா என்ற அவரின் தெளிவான நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். புலிகளை ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை அல்ல இதன் மூலம் மக்கள் வினவுகின்றனர். தேசம் அதாவது லண்டன் குரல் தமிழ் தேசியத்திற்கு வழங்கும் புலித் தேசிய அடைமொழியை போல் சத்தியநேசன் ஏற்கிறாரா இல்லையா என்பதை இட்டு சரியான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க முன் வர வேண்டும். அப்படி வராத பட்சத்தில் அடுத்தடுத்த தேர்தல்களில் போல் தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்களுக்கு சொல்ல முன்வராத பட்சத்தில் அவருக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக் கொள்வதையே செய்ய முற்படுவர்.

இவர்கள் கவுன்சிலர்களாகி தமிழ் மக்களுக்கு ஒன்றும் பெரிதாக வெட்டி விழுத்திவிடவில்லை. தமிழ் மக்கள் தங்களின் இனத்தவரை கவுன்சிலர்களாக அனுப்ப வேண்டும் அதன் மூலம் தங்களின் உண்மையான எண்ணக்கருக்கள் பிரித்தானிய பிரதான கட்சிகளை போய் சேர வேண்டும் என்று வாக்களிப்பதை தேசம் போன்ற லண்டனின் போலிக் குரல்கள் போலித் தோற்றம் காட்டி தமிழ் தேசிய எதிர்ப்புணர்வு லண்டனில் பெருகி வருவது போன்ற ஒரு கருத்தை சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசிற்கு சார்ப்பான பிரச்சாரங்களை தொழில்கட்சியின் பெயரால் முன்னெடுப்பதை வெறுமனவே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போவதும் இல்லை..!

இதற்கான பலாபலனை போல் சத்தியநேசன் போன்றவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் சந்திக்க நேரலாம். எனவே அவர்கள் தேவையற்று மக்கள் விரோத சக்திகளோடு சேர்ந்தியங்குவதை தவிர்த்து நடுநிலையோடு இயங்க முன்வருவதோடு மக்களின் நலன் வேண்டி செயற்படவும் வேண்டும். அதுவே இவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தொடர்ந்து விளங்க உதவும் என்று நினைக்கின்றோம்.

Edited by nedukkalapoovan

Eastham போண்ற (Newham கவுன்சிலில் ) இடங்களை எடுத்துக்கொண்டீர்களானால் அது வெள்ளை இனத்தவர் அதிகமான இடம் அண்று... பாக்கிஸ்தானியர்கள், இந்தியர்கள், தமிழர்கள் , ஆபிரிக்கர்கள் என்பவர்கள் தான் அதிகம் Newham கவுன்சிலில் கவுன்சிலராக இருப்பவர்களில் பெரும் பான்மையானவர்கள் அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான்... அதோடு அங்கு முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக அதிகம்.. அதாலால் அங்கு தொழில் கட்ச்சியை தவிர வேறு கட்ச்சியினர் வெல்வது மிகவும் கடினம்... தொழில் கட்ச்சியின் லண்டன் முழுவதுக்குமான வெற்றியில் இருக்கும் இரகசியமே இந்த வெளிநாட்டு காறர்கள் தான்..

அதுவும் Eastham மில் இருக்கும் வெளிநாட்டுக்காறரின் 50 % க்கும் மேலானவர்கள் அரசாங்கம் கொடுக்கும் பிச்சைக்காசில் வாழ்பவர்கள்... வேறு கட்சியினர் அங்கு அதிகாரத்துக்கு வருவதையும் பிச்சைக்காசுக்கு கெடுபிடிகள் விதிப்பதையும், வேலைக்கு போகாமல் உழைக்கும் மக்களின் வரியில் இருந்து அரசாங்கம் எடுத்து கொடுக்கும் இலகுவான காசு வாங்குபவர்கள் எப்போதும் விரும்ப மாட்டார்கள்..

அதிலும் மிக முக்கியமாக கவுன்சில்களில் இந்த இலவச வாய்ப்பை வேறு கட்ச்சியை ஆச்சிக்கு கொண்டு வந்து கெடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்... அப்படியான ஒரு கவுன்சிலில் தொழில் கட்ச்சி சார்ப்பாக ஒரு கல்லு போட்டி இட்டாலும் வெல்வது ஒண்றும் ஆச்சரியம் இல்லை...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.