Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gifஇன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடாக கனக்கின்ற துயரங்களின் பாரம் உங்களின் சிந்தனைக்காக….

இணைப்புக்கு நன்றி சாந்தி அக்கா. எதையாவது எழுதி ஆக்களுக்கு கடுப்பு ஏத்தாமல் இருப்பதற்காக ***சுயதணிக்கை***

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் சரி போராளிகளும் சரி அவர்களோடு வாழ்ந்த மக்களும் சரி போராட்டம் இவ்வாறான ஒரு இக்கட்டுக்குள் செல்லும் என்பதை அவ்வளவு எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி எதிர்பார்த்திருப்பின் இவ்வாறான பிரச்சனைகளைக் கையாள்வது குறித்தும் சிந்தித்திருப்பார்கள்..! இருந்தாலும் இன்று மக்கள் சிந்தித்து இவர்களின் மீட்சிக்காக செயற்திட்டங்களை தீட்டிச் செயற்பட வேண்டும்.

போராளிகள் திருமணம் செய்வதை தலைவர் ஆரம்ப காலங்களில் அவ்வளவு ஊக்கிவிக்கவில்லை. காரணம்.. அவர்களின் எதிர்காலமென்பது நிச்சயமற்றதாக இருந்ததால். போராட்டம் வலுப்பெற்ற போதே தலைவர் திருமணங்களை அனுமதித்தார். திருமணங்கள் இன்று பல போராளிகளின் உயிர்களை காத்திருக்கிறது என்பதும் உண்மை. திருமணமான போராளிகள் பலரை விடுவிக்க எதிரியானவன் கூட முன்வந்திருக்கிறான்.

இவ்வாறான திருமணமானவர்களுக்கு அவர்களின் மனைவிமார் பிள்ளைகள் குரல்கொடுக்க முடிகிறது. திருமணம் செய்யாத பெற்றோர் தொடர்பின்றிய எத்தனையோ போராளிகள் மரணப்படுகுழிகளுக்குள்ளும் சித்திரவதை முகாம்களிலும் கிடக்கின்றனர். அவர்களின் மீட்சி பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

சொந்த மக்களின் வாக்கில் தெரிவானதாக சொல்லும் டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்கள்.. இந்தியா வரைக்கும் போய் சிங்களத்திற்கு வக்காளத்து வாங்கி வரும் நிலையில் இருக்கிறார்களே அன்றி தனது மக்களின் பிள்ளைகள் சிறைகளில் இருந்து சீரழிவது பற்றி சிந்திக்கவில்லை. இதனால் தான் இவர்களை நோக்கியும் கடந்த காலங்களில் துப்பாகிகள் நீண்டன என்பதையும் இவர்கள் ஏற்று மாற்று வழிகளில் சிந்திக்க முன்வர வேண்டும். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டிருப்பவர்களை அரசியல் செய்ய அனுமதிப்பதும்.. மக்களைப் பொறுத்தவரை பாதுகாப்பானதல்ல..!

எமது போராளிகளின் ஒட்டுமொத்த விடுதலையும் அவர்களின் வளமான வாழ்வுமே இந்த குரல்களுக்கு எல்லாம் முடிவு கட்ட முடியும். அதை நோக்கி இளைய சமூகம் (அது தாயகத்தில் இருந்தாலும் சரி புகலிடத்தில் இருந்தாலும் சரி ஒருங்கிணைந்து ) எவ்வாறு செயற்படுவது அதற்கான திட்டங்களை எவ்வாறு வகுப்பது செயற்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் கவனத்திற்கு இவர்களின் அவலங்களை கொண்டு வர வேண்டும். வெறுமனவே எமக்குள் இவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம்.. தற்காலிக உதவிகளைச் செய்யலாம்... அல்லது.. அரசியல் செய்யலாம்.. தவறுகளை விட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தூண்டலாம். ஆனால் இவர்களின் துயருக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன..??! :):lol::unsure:

Edited by nedukkalapoovan

புனர்வாழ்வு முகாம்களில் பயற்சி பெற்று வரும் முன்னாள் 53 விடுதலைப்புலி ஜோடிகளுக்கு நாளை தினம் சட்டரீதியாக திருமணம் :

12 June 10 01:38 am (BST)

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் நாளை தினம் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த திருமண வைபவம் வவுனியா பம்பைமடு புனர்வாழ்சு முகாமில் நடைபெறவுள்ளது.

திருமணம் செய்து வைக்கப்படவுள்ள இந்த இளம் ஜோடிகள் அவர்களுகென அமைக்கப்பட்டுள்ள விசேட கிராம் ஒன்றில் குடியேற்றப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளர். ஒரே தினத்தில் ஒரே இடத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறையாகும் எனவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

- உலக தமிழ்ச் செய்திகள் (ஜிரிஎன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.