Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி

சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன்ஈ தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்ற எடுத்திருக்கும் முடிவை தான் வரவேற்பதாகக் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் வாக்ககளின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயலாற்றுவத பற்றியோ, எந்த அடிப்படையில் என்ன விதமாகப் பணியாற்றுகின்றோம் என்பது பற்றியோ, தம்மை தெரிவு செய்த மக்களிற்கு இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.

பத்மநாதன் கூறியது போன்று அரசுடன் இணைந்து பணியாற்றினால் அது பற்றி மக்களிற்குத் தெளிவுபடுத்தும் கடமையும், கட்டாயமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இல்லையெனில் பத்மநாதனின் கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டிய கடப்பாடும் உண்டு.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற யப்பானின் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் யசூசி அகாசி, பசில் ராஜபக்ச, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டிருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் இதனை இருட்டடிப்புச் செய்திருந்ததை பதிவு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சமகால நடவடிக்கை, எதிர்கால செயற்பாடுகள் பற்றி மக்களிற்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அச்சம் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 70 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கதாகும்.

http://www.pathivu.com

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

யார் அவரை முன்னாள் உறுப்பினர் ஆக்கியது? :(

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி

...

ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சமகால நடவடிக்கை, எதிர்கால செயற்பாடுகள் பற்றி மக்களிற்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அச்சம் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 70 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கதாகும்.

http://www.pathivu.com

ஏன் இந்தப் போராட்டம் ... இப்படி அழிந்தது .. தேடிக் கொண்டிருக்கிறேன்! ... இன்று ஒரு பதில் கிடைத்திருக்கு!!!

.... அடிப்படை அறிவற்ற இந்த காஸ்ரோக்கள் எம்மத்தியில் ..... இருக்கும் மட்டும் ... அவன் சிங்களவன் போட இதுகள் குழம்பி எல்லோரையும் குழப்புங்கள்!!

... நாலை கேபியுடன் கூட்டமைப்பு சந்திப்பு, சேர்ந்து செயற்பட இனக்கம் என்று கூட விடுவான் நாலு சிங்களவன்! ... அது எங்கடை காஸ்ரொக்களுக்கு துரோகிகள் பட்டமளிப்பதற்கு இன்னொரு குளு கிடைத்த மாதிரியாக இருக்கும்!

புலம்பெயர் தமிழர்கள் பார்வையில் கே.பி. ஒரு துரோகி- செல்வம் அடைக்கலநாதன்!

வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள்இ புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதனை (கே.பி) ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கூறினார். இதேவேளை, போருக்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கே.பி முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இருப்பினும் அவரது இந்த நடவடிக்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காடினார். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக செய்தியொன்று வெளியானது.

இந்த செய்தி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து கூறிய எம்.பி, பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவ்வாறே தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை.

இந்நிலையில், அவர்களே அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் சொன்னார்.

கே.பி.யைப் பொறுத்த வரையில் வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழர்கள்இ அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அவரது கூற்றுக்கு அங்குள்ள மக்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று அடைக்கலநாதன் எம்.பி மேலும் சுட்டிக்காடினார்.

புலம்பெயர் தமிழர்கள் பார்வையில் கே.பி. ஒரு துரோகி- செல்வம் அடைக்கலநாதன்!

வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள்இ புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதனை (கே.பி) ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கூறினார். இதேவேளை, போருக்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கே.பி முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இருப்பினும் அவரது இந்த நடவடிக்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காடினார். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக செய்தியொன்று வெளியானது.

இந்த செய்தி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து கூறிய எம்.பி, பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவ்வாறே தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை.

இந்நிலையில், அவர்களே அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் சொன்னார்.

கே.பி.யைப் பொறுத்த வரையில் வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழர்கள்இ அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அவரது கூற்றுக்கு அங்குள்ள மக்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று அடைக்கலநாதன் எம்.பி மேலும் சுட்டிக்காடினார்.

ஆக அரசாங்கத்தோடை சேர்ந்து இயங்கினால் புத்திசீவியள், புலி எண்டு தனித்து இயங்கினால் காசு புடுங்கிறவர்ன்கள் கஸ்ரோ குரூப்..... சரி தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.