Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு என்ற பெயரில் காடு அழிப்பில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் போராளிகள்!

Featured Replies

புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னாள் போராளிகள் பலர் படையினரால் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். இந்நாட்டில் மாறிமாறி வந்த அரசு கள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவே சம்தான் இந்த நாட்டில் போராட்டம் ஒன்றுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப் பேற்று அவர் கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டா வது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவ ர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யுத்தம் முடிந்து சுமார் 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. இதில் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை யினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அண்மைய போரினால் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ள வடக்கு, கிழக்குப் பிரதேசத் துக்கான அபிவிருத்திக்கும், உட்கட்டுமானத்துக்கும் நன்கு செழிப்புற்றுள்ள தென்பகுதிக்கு ஒதுக்கியுள்ளதைவிடவும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அரசு வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டிய தேவையில்லை என்பதை நன்கு வெளிப்படுத்தி உள்ளது.

அமைச்சரின் அனுமதியுடன் கால்நடை கடத்தல்

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற் குப் பதிலாக எமது மக்களிடம் எஞ்சி இருக் கின்ற கால்நடைகளைக்கூட அபகரித்துச் செல்கின்றனர். அண்மையில் வவுனியா விலும், மன்னாரிலும் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்திலும் நான் இதனைத் தெரிவித்திருந்தேன். கால்நடை களை அபகரித்துச்சென்ற ஒரு வாகனத்தை நெடுங்கேணியில் வைத்து பொலிஸார் வழிமறித்தனர். கடத்திச் சென்றவர்கள் மீள்குடியேற்ற அமைச்சருடன் தொடர்பு கொண்டு அவரின் அனுமதியுடன் தமது செயலைத் தொடர்ந்தனர். இதுபோன்ற இன்னும் ஏராளமான சம்பவங்கள் நடை பெறுவதாகத் தகவல்கள் வருகின்றன.

சொந்த மக்களின்மீது மூர்க்கத்தனமான போரைத் தொடுத்து, லட்சக்கணக்கில் அவர்களை வலுக்கட்டாயமாக இடம் பெயர வைத்து, அந்த இடப்பெயர்வு நேரத் திலும் ஏராளமான உயிர்களைப் பலியெடுத்து, முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் அவர் களை ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைத்து, இப்பொழுது மீள்குடியேற்றம் என்ற பெயரில் வனாந்தரத்தில் விட்டு விட்டு அவர்களிடம் நீங்களும் இலங்கை யர்கள்தான் என்று வீரவசனம் பேசி அவர் களைக் காட்டி வெளிநாடுகளின் உதவி யைப் பெறத்துடிக்கும் இந்த அரசு அவர் களில் 25 ஆயிரம் பேருக்கு 750 கோடி ரூபாவை மட்டும் ஒதுக்கியுள்ளது. இத் தொகை எதற்குப் பயன்படப்போகின்றது? எஞ்சியுள்ளவர்களின் கதி என்ன? இதுவா புனர்வாழ்வு??

வெலிக்கந்தை, கந்தக்காடு பகுதியில் முன்னாள் போராளிகள் என்று இனங் காணப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது என்ற பெயரில் அவர்களைக் காடுகள் அழிக்கும் தொழிலில் பாதுகாப் புத்துறையினர் ஈடுபடுத்துகின்றனர். இவர் களிடமிருந்து கடினமான உழைப்பைக் கசக்கிப் பிழிந்து வாங்குகின்றனர். இது என்ன புனர்வாழ்வு என்பதை சம்பந்தப் பட்டவர்கள் இச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

அவர்களுக்குச் சுகாதாரமான குடிதண் ணீர், சத்தான உணவு, சுகாதார வசதி என் பவை மறுக்கப்படுகின்றன.

அங்குள்ள ஆற்றுநீர் ஒருவித மஞ்சள்நிறத்துடன் உள்ளது. முன்னர் அந்த நீரைக் காய்ச்சிக் கொடுத்தனர். இப்பொழுது அப்படியே குடிக் கச் சொல்கின்றனர்.

முன்பு தங்களுடைய உணவைத் தாங்களே சமைத்துக்கொண்ட னர். இப்பொழுது பாதுகாப்புப் படையினர் சமைத்துக்கொடுக்கின்றனர். அதில் எது இருந்தாலும் அப்படியே உண்ணவேண் டும் என்று கட்டளையிடுகின்றனர்.

இங்குள்ளவர்களுக்கு தலையிடி, காய்ச் சல் என்றால்கூட அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மருத்துவம் செய்வ தில்லை. இயலாதபட்சத்தில் படுக்கையில் கிடக்கும்போது மட்டுமே அவர்கள் வைத் தியசாலைக்குக் கொண்டு செல்லப்படு கின்றனர். ஓராண்டுக்குள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று அறிவிக்கப் பட்ட போதிலும் இன்றுவரை அவ்வாறு நடைபெறவில்லை.

வன்னியில் பிடிபட்டவர்கள் கிரிமினல்கள் அல்லர்

வன்னியில் பிடிபட்டவர்கள் ஒன்றும் கிரிமினல் குற்றவாளிகள் அல்லர். இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழி னத்தின் மீது ஏற்படுத்திய துவேசம்தான் இந்நிலையைத் தோற்றுவித்தது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப்பேற்று அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர் களுக்கு ஆதரவு வழங்கினர் என்ற குற் றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் எத்தகைய வழக்கும் இன்றி, விசாரணை யும் இன்றி பல ஆண்டுகளாக இந்நாட்டின் சிறைகளில் சிறைவாசம் அனுபவிக்கின் றனர். இவர்கள் அனைவருமே விடுவிக் கப்படவேண்டும்.

இலட்சக்கணக்கான வீடுகள் சிøத்து அழிப்பு

லட்சக்கணக்கான வீடுகள் அடையா ளம் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து மக்களுமே மன உளைச்சலு டன் தமது வாழ்க்கையைத் தொடர்கின் றனர்.

வன்னிப் பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளைப் பாதுகாப்புத்துறையினர் தங்களது தேவைக்காக எடுத்துக்கொள்ளப் போகின்றனர் என்று ஜனாதிபதி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப் பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரிடமும் மக்கள் முறைப்பாடு செய் துள்ளனர்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத் தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட் பட்ட திருமுறிகண்டி, இந்துபுரம், கிளி நொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியான சாந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக் கள் தற்போது செட்டிகுளம் முகாமிலும், முறிகண்டி, கிளிநொச்சி பாடசாலைகளி லும் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்களது சொந்த இடங்களுக் குப் போகமுடியாதுள்ளதையிட்டு மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். இவர்களுக் குத் தங்களது சொந்த இடத்துக்குச் செல் வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்குத் தங்களது சொந்த இடத் தில் குடியமர்வதற்கு அனுமதி அளிக்கப் படவேண்டும். இதுகுறித்து ஜனாதிபதி யுடன் நடந்த சந்திப்பிலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலும் நாங்கள் பேசியும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

வவுனியா சேமமடு பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக அரச அதிபர் அறிவித்துள்ள போதிலும், இன்று வரை மக்கள் அங்கு மீள்குடியேற்றப்பட வில்லை என்பதுடன், தங்களது பகுதி யைப் பார்வையிடக்கூட அனுமதிக்கப்பட வில்லை. அவர்கள் மீள்குடியேற்றப்படும் போதே அவர்களது காணிகளைத் துப்புர வாக்கிக் கொடுக்கும் பணியும் முடிக்கப் பட்டிருக்கவேண்டும். அந்தப் பகுதியில் விரைவாக மீள்குடியேற்றம் செய்தால்தான் பெரும்போக விவசாயத்தை அந்த மக்கள் மேற்கொள்ள முடியும்.

நட்டஈடு வழங்கவேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப் பட்ட அனைத்துத் தமிழ்மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்படவேண்டும். யுத்தத் தில் உடல் உறுப்புகளை இழந்த அனை வருக்கும் நட்டஈடு வழங்கப்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரத்துக்கான உத்தர வாதத்தையும் வழங்கவேண்டும். இன் னும் யாருடன் யுத்தம் புரிவதற்காகப் பாது காப்புத்துறைக்கு 20 ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு?

வன்னியில் போர் நடந்த பகுதிகளில் இன்னும் வீதிகள் சரியாகப் புனரமைக்கப் படவில்லை. மக்கள் குடியேற்றப்பட்ட கிராமங்களின் உள்வீதிகள் சரியாக சீர் செய்யப்படவில்லை. வன்னி பிரதேசத் தின் அனைத்துக் கிராமங்களையும் போக் குவரத்தின் ஊடாக இணைப்பதற்குத் தேவையான பஸ் சேவைகளை மக்களின் நலன்கருதி உடனடியாகவும், இடைவிடா தும் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதற்குத் தேவையான பஸ்களை ஒதுக்கவேண்டும். மீள்குடியேறிய தனது சொந்தக் கிராமத்திலிருந்து அருகிலுள்ள நகரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு அந்த மக்களுக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக் கப்படுகின்றது. இந்த பஸ்ஸில் அவர்கள் காலையில் சென்றால் மாலையில் மட் டுமே வீடு திரும்ப முடியும். இதற்கிடை யில் அந்த மக்களுக்கு ஏதேனும் வருத்தம், துன்பம் ஏற்பட்டாலோ அல்லது வேறு எதுவும் அவசியப் பணிகள் ஏற்பட்டாலோ அவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையி லேயே உள்ளனர்.

மொத்தத்தில் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டமானது ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், ஒரு கண்ணில் வெண் ணெயையும் கொண்டதாகவே அமைந் துள்ளது. பாதிக்கப்பட்ட சீரழிந்த தமிழ் மக்களின் கைகளில் திருவோட்டையும், செழிப்புடன் இருக்கும் இந்நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் தொகுதி களுக்கு மட்டும் அபிவிருத்தியையும் கொடுக்கக்கூடியதாகவே தயாரிக்கப்பட் டுள்ளது.

இப்படி அவர் கூறினார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3489&Uthayan1278161293

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சிறிலங்கா நாடாளுமன்றிலை போய் தமிழரது பிரச்சினைக்குத் தீர்வு கேட்பதால் ஏதும் பயனுண்டா?

தமிழ் நாடாளுமன்றஉறுப்பினர்கள் புறப்பட்டு உலகின் நியாயாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய அமைப்புகளோடு பேசுவதூடாக மட்டுமே மகிந்த அரசை ஓரளவாவது கட்டுப்படுத்தலாம். வடவரின் கொல்லைக்குள் சுற்றுவதால் மட்டும் பயனேதும் விளையப்போவதில்லை. கடந்த கால்நூற்றாண்டில், நாம் சற்று நிமிரும்போதெல்லாம் எம்மை நயவஞ்சகமாக அழித்தொழிப்பதில் முனைப்போடு செயற்பட்டதில் சிறிலங்காவைவிட, இந்த வடவர்களே முன்னிலை வகிக்கிறார்கள். வடவரிடம் போவதைவிட பாக்கிஸ்தான் - சீனா என்றோ, அமெரிக்கா - ஐரோப்பா என்றோ செல்வதே பயனுடையது. அதே வேளை முதலில் நாடாளுமன்றில் யேர்மனியில் உள்ளது போன்றதொரு அரசியலமைப்பு வரைபொன்றினை முன்வைப்பதும் அவசியமானது. ஏனெனில் நாளை உங்களது திட்டமென்ன என்று இவர்கள் கேட்டால் பதிலளிக்க இலகுவாயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.