Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை

விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அதிகாரபூர்வமான அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இராணுவ உயர்மட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகள் நகர்த்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக த ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக ஏ9 வீதியில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே சுகந்திபுரத்தில் 68 ஆவது பிரிவுத் தலைமையகத்தை இராணுவம்அமைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்தப் புதிய தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய சிரேஷ்ட அதிகாரிகளையும் அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்கும் படையினரையும் சந்தித்துள்ளார்.

நிரந்தர தளங்கள் அவசியமெனவும் பாதுகாப்புப் படையினர் தனியார் மற்றும் பொது இடங்களிலிருந்தும் நகர்வதற்கு நிரந்தரமான தளங்கள் அவசியமென்றும் இச்சந்திப்பின்போது இராணுவத் தளபதி கூறியுள்ளார். 2006 ஆகஸ்டில் 4 ஆவது ஈழப்போர் ஆரம்பமாவதற்கு முன்னரேயே பெரும் எண்ணிக்கையான படையினர் யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டிருந்தனர். இப்போது வன்னிக்கு பாரியளவு படையணி நகர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மீள்நகர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சீனாவிடமிருந்து கிடைத்த உதவியை இராணுவத் தளபதி பாராட்டியுள்ளார். சீனாவிலிருந்து கிடைத்த தொழில்நுட்பம் காரணமாக இந்த மாதிரியான நிரந்தரக் கட்டிடங்களை அமைப்பது சாத்தியமாகவுள்ளது. சகல கட்டிடங்களிலிருந்தும் நாங்கள் வெளியேற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. சிவில் பிரிவினர் மற்றும் இந்தக் கட்டிடங்களின் உரிமையாளர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு உரிமை கோர முடியும். இதன் மூலம் பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்த உதவ முடியும். பகுதிகளில் சிவில் வாழ்வு மீள ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலுள்ளவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இருந்தவாறு பகுதிகளில் சேவையாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபயமடவெல கூறுகையில்;

ஏ9 வீதிக்கு கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் நிரந்தரத் தளங்கள் அமைக்கப்படுமென்று தெரிவித்திருக்கிறார். துணுக்காயில் சில புதிய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் இந்தப் புதிய தளங்கள் அரசாங்க காணிகளிலேயே அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான சகாப்தத்தின் காலகட்டத்தில் 53 ஆவது படையணியின் ஒரு பிரிவினர் தெற்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன், அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/7915/57//d,article_full.aspx

அரச உடைமையாகும் வன்னி நிலப்பரப்பு

வன்னியில் நடந்த யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் ஆமை வேகத்தில் நடந்தேறுகின்றது. வன்னியில் மீள்குடியேற்றம் என்பது சொந்த காணியில் குடியமர்த்துதல் என்று பொருள் கொள்வது தவறு. படையினர் விரும்புகின்ற-அவர்கள் சிபார்சு செய்கின்ற இடங்களில் கொட்டில் அமைத்து பக லில் வெயில் இரவில் நுளம்புத் தொல்லை என்ற வதைக்குள் வாழ்வது தான் மீள்குடியமர்வு என வகை கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது. இது தொடர்பில் எவரும் எதுவும் செய்ய முடியா தென்பதில் உண்மைகள் இருக்கவே செய்கின்றன. இருந்தும் நாடாளுமன்றத்தில் இது பற்றி தாராளமாக பிரஸ்தாபிக்கலாம். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் நேரத்தை செலவிட எங்கள் எம்.பிக்களிடம் நேர ஒழுங்கமைப்பு போதாமல் உள்ளது.

தங்களின் வண்டவாளங்களை கொட்டித் தள்ளி சிங்கள மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரிப்புக்குரியவர்களாக இருப்பதுதான் இவர்களின் தற்போதைய வகிபங்காகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் எழுந்து பேசுகிறார் எனில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர வேண்டும்.

மறுத்துக்கருத்துரை வழங்க முடியாமல் திணற வேண்டும். இப்படித்தான் எங்கள் முன்னைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியானவர்கள் கிடையாது.

தமிழ் எம்.பிக்கள் ஆளுமை நிறைந்தவர்களாக தமிழ் மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக இருந்திருந்தால், கைதடி சரவணை தர்சிகா குடும்பம் இத்துணை துன்பப்பட்டிருக்க வேண்டி வந்திராது.அட! ஒரு ஆறுதலுக்கேனும் அறிக்கை எழுத மறந்து போன எங்கள் எம்.பிக்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு கூப்பிய கரத்துடன் வருவார்கள்.

இவர்களுக்குப் பாடம் புகட்ட தமிழ் மக்கள் துணியாதவரை எங்கள் எதிர்காலம் இருள் மயமானதாக இருக்கும். இது பற்றி இவ்விடத்தில் அடிக்கடி கூறிவருகின்றோம்.எதுவாயினும் வன்னி நிலைப்பரப்பின் பெரும் பகுதியை அரசு தனது உடைமையாக்கிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க, நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இது விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரிசனை கொள்ள வேண்டும். நடக்குமா? அல்லது இம்மியும் சிரிக்காத கலைஞர் கருணாநிதியுடன் சிரித்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் அறியாமைத்தனம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

[ வலம்புரி ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.