Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாற்று தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி ..

Featured Replies

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்

புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும்

அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி

வந்தனர்.

இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில்

இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது.

மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும்.

ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது. இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.http://uyirambukal.blogspot.com/2010/07/blog-post_4909.html

Edited by Rudran

சில வாரங்களின் முன்னரே மணலாற்று தாக்குதல் பொய் என கூறினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ அப்பிடி இருக்காது அது புலிகளது புது அதிரடிப்பிரிவுதான் செய்திருக்கும். நீங்கள் இப்பிடி எழுதி கிட்டடியில இங்க வந்து அசைலம் அடித்த எனது மருமகன்ர அக்கா மகனின்ர ஆண்ஸரில கைவைக்கப்பாக்கிறியள். நாங்கள் எத்தனைதரம் வெய்யிலிலையும் குளிரிலையும் நிண்டிருப்பம். இவையள் விடக்கூடாது, யாரையாவது பெடியளைச் சேர்த்து சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணும். என்னதான் இருந்தாலும் நேற்று ஒரு பிறந்தநாள் பாட்டியில ஒரு தம்பி அருமையாக ஒரு கருத்தைச் சொல்லிச்சு, என்னவெண்டால் இருந்துபாருங்கோண்ணை கூடிய சீக்கிரம் இந்திய ஒரு பலம்வாய்ந்த குறூப்பை அனுப்பி........ , இதுகள் எல்லாம் அசைலம்போட் என்ர மருகன்ர அக்காமகன கேஸ் இன்குவாறிக்கு கூப்பிடமுதல் நடந்தா.........

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் வெறி இன்னும் அடங்கவில்லை

அந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்

எதுவுமே செய்யமுடியாத எம்மை நம்பினீர்களே

அதுவே தாங்கள் செய்த பிழை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் வெறி இன்னும் அடங்கவில்லை

அந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்

எதுவுமே செய்யமுடியாத எம்மை நம்பினீர்களே

அதுவே தாங்கள் செய்த பிழை

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா ஆதரவு இராணுவத்தினரை கொல்ல சதி? மோதலில் 40 பேர் காயம்

கொழும்பு , செவ்வாய், 27 ஜூலை 2010( 18:34 IST )

முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை இராணுவத்தினர் சிலரை கொல்ல மேற்கொண்ட முயற்சியின்போது, இராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விமானத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறும் மணலாறு என்ற இடத்தில் இருந்து காயப்பட்ட இராணுவத்தினர் பலர் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

அதேவேளை, பலர் இறந்திருக்கக் கூடும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.அதாவது சரத் பொன்சேகாவுக்கு ஆதராவகச் செயல்பட்ட இராணுவத்தினர் சிலரை, மணலாறு காட்டுப்பகுதியில் வைத்து இலங்கை அரசு தீர்த்துக்கட்டி இருக்காலம் என்று கூறப்படுகிறது.

காடுகளுக்குள் புலிகள் இருப்பதாகக் கூறி தேடுதல் நடவடிக்கைக்கு என சில இராணுவத்தினரை அனுப்பி, அவர்களை கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைக்கு ஏற்ப, மற்றொரு இராணுவக் குழு சுட்டு பழிவாங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் சுதாரித்துக்கொண்ட சில இராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலிலேயே, கோத்தபாயவின் இராணுவத்தினர் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது காயமடைந்த இராணுவத்தினரை ஆதாரம் காட்டி, புலிகளின் முன்னாள் தளபதிகளான, ராம் அல்லது நகுலன் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க இருப்பதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது.

இதன் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம், ராம் மற்றும் நகுலன் போன்றோரின் செல்வாக்கை அதிகரிக்கவும், இன்னும் புலிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்கவேண்டும் எனக் கூறுவதற்காகவும், மற்றும் உயர்பாதுகாப்பு வலையத்தை தக்கவைப்பதோடு, இராணுவத்தின் கெடுபிடிகளை அதிகரிக்கவும் இது உதவியாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இராணுவத்தினர் காடுகளுக்குள் சென்ற வேளை கிபீர் விமான தாக்குதல் நடைபெற்றதால், விமானிகள் இராணுவத்தினர் மீதே மாறி தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருப்பதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

எது எவ்வாறு இருந்தாலும் விடுதலைப் புலிகள் தற்போது வலிமையான தாக்குதல் எதையும் நடத்தமாட்டார்கள் என கூறப்படுகிறது.

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணம் எதுவும் ஏற்பட்டாலே அவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பார்கள் என்றும் விடயம் அறிந்தவட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இராணுவத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1007/27/1100727063_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.