Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்னோலை எனப்படும் காதணிகள்

Featured Replies

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் இருந்து வந்தது என்பதை நாம் ஜனவரி மாதக் கலைக்கேசரியில் உங்களுக்கு தந்திருந்தோம்.

காலங்கள் செல்லச் செல்ல பொன்னால் உருவாக்கப்பட்ட காதணிகளை நம் முன்னோர்கள் அணியத் தொடங்கினார்கள். ஆனாலும் அவர்கள் அதை 'பொன்னோலை' என்று சிறப்பித்துக் கூறினார்கள். 'தோடு' என்பது இன்றைய கால காதணியாகும். இதற்கு 'இதழ்' எனப்பொருள் கொள்ள முடியும். முன்னைய காலங்களில் பெண்கள் தமது காதுகளில் மலர்களை அணிந்து தம்மை அழகு படுத்தினார்கள். ரவிவர்மாவின் சித்திரத்தில் சகுந்தலையின் காதுகளில் மலர்கள் அணியப்பட்டிருப்பதை காணமுடிகிறது. அழகிய பெண்ணான சகுந்தலை கூந்தலில் மாத்திரம் மலர் சூடாமல் காதுகளிலும் மலர்கள் அணிந்திருப்பதில் இருந்து பெண்கள் தமது காதணிகளாக மலர்களை பயன்படுத்தினார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைக்கிறது. மேலும் முற்காலத்தில் காதணிகளுக்கு 'குழை' என்ற சொல்லும் வழக்கில் இருந்துள்ளது.

[post='http://www.yarlmann.lk/head_view.asp?key_c=314']more news

  • தொடங்கியவர்

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் இருந்து வந்தது என்பதை நாம் ஜனவரி மாதக் கலைக்கேசரியில் உங்களுக்கு தந்திருந்தோம்.

காலங்கள் செல்லச் செல்ல பொன்னால் உருவாக்கப்பட்ட காதணிகளை நம் முன்னோர்கள் அணியத் தொடங்கினார்கள். ஆனாலும் அவர்கள் அதை 'பொன்னோலை' என்று சிறப்பித்துக் கூறினார்கள். 'தோடு' என்பது இன்றைய கால காதணியாகும். இதற்கு 'இதழ்' எனப்பொருள் கொள்ள முடியும். முன்னைய காலங்களில் பெண்கள் தமது காதுகளில் மலர்களை அணிந்து தம்மை அழகு படுத்தினார்கள். ரவிவர்மாவின் சித்திரத்தில் சகுந்தலையின் காதுகளில் மலர்கள் அணியப்பட்டிருப்பதை காணமுடிகிறது. அழகிய பெண்ணான சகுந்தலை கூந்தலில் மாத்திரம் மலர் சூடாமல் காதுகளிலும் மலர்கள் அணிந்திருப்பதில் இருந்து பெண்கள் தமது காதணிகளாக மலர்களை பயன்படுத்தினார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைக்கிறது. மேலும் முற்காலத்தில் காதணிகளுக்கு 'குழை' என்ற சொல்லும் வழக்கில் இருந்துள்ளது.

[[post='http://www.yarlmann.lk/head_view.asp?key_c=314']

  • 4 weeks later...

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மேலும் பழங்காலத்து தமிழர் அணிகலன்களைப் பற்றிய விபரங்களையும் இணைப்பீர்கள் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.