Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' "கொழும்பின் வழிநடத்தல்" பயணமாக இந்திய விசேட பிரதிநிதியின் விஜயம் அமையக்கூடாது'

Featured Replies

இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் கொழும்பின் வழிநடத்தலில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வட,கிழக்குப் பயணத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமே கையாள வேண்டுமெனவும் கேட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளது உண்மைநிலையைக் கண்டறிய இதுவே சரியான வழியெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி இலங்கை வரவிருப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது;

இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி வருவதை நாம் வரவேற்கின்றோம்.அவரது வருகை பலனளிக்கக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். அவர் உரிய பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலைமைகளைக் கண்டறிய வேண்டும். அவரது வருகையின் மூலம் அந்த மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும். மீள்குடியேற்றம்,வடக்கு,கிழக்கு அபிவிருத்திச் செயற்பாடுகள் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இங்கு நாம் மிக முக்கியமானதொரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்திய விசேட பிரதிநிதி வடக்கு,கிழக்கு விஜயத்துக்கு இலங்கை அரசின் வழிகாட்டல் இடம்பெறக்கூடாது. ஏனெனில் அரசின் வழி நடத்தல் அந்த மக்களின் பிரதேசத்தின் உண்மை நிலைமைகளை மூடிமறைப்பதாகவே இடம்பெறலாம் என நாம் அஞ்சுகின்றோம். அரசு இந்த விடயத்தில் நம்பகத்தன்மையுடன் நேர்மையாகச் செயற்படும் என்பதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை கிடையாது.

எனவே, இலங்கை அரசு அவரை வழிநடத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரது வடக்கு,கிழக்குக்கான விஜயத்துக்கான சகலவழி நடத்தல்களையும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமே முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் வட,கிழக்கினதும் அங்கு மக்களினதும் உண்மையான நிலைமைகளை இந்தியாவால் நேரில் கண்டறிந்துகொள்ள முடியும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசுவேறு! கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகாலயம் வேறா?

  • கருத்துக்கள உறவுகள்

Hyderabadi_20Biryani.jpg

radico_whisky_royale-250x250.jpg

:lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.