Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில்

மகோற்சவத்தின் சம்பிரதாய மாற்றங்கள்

கொடித்தம்பம் உள்ள எந்த ஒரு கோயிலிலும் மகோற்சவ காலத்தில் பரிவார

மூர்த்திகள் எல்லாவற்றிற்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் .இது ஒரு ஆகமவிதி .இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் ஈலிங் கனக துர்க்கை அம்மன்ஆலயத்தின் 2010 மகோற்சவத்தில் கொடித்தம்ப பிள்னளயாருக்கும், பிள்னளயாருக்கும்,அம்பாளுக்கும்,வைரவர்;க்கும் மட்டும் காப்புக்கட்டி மற்றய முர்த்திகளுக்கு காப்புக் கட்டாமல் மகோற்சவம் நடைபெற்றது.ஆனால் இதற்கு முன்னைய ஆண்டுகளிலெல்லாம் எல்லா முர்த்திகளுக்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெற்றது.அதேபோல் கொடியிறக்கத்தின் போது காப்பு அவிழ்க்கப்பட்டது. ஆனால் 2010 மகோற்சவத்தில் மூலஸ்தான அம்பாளுக்கும்,பெரியபிள்னளயாருக்கும் மட்டும் கட்டப்பட்ட காப்பு கொடியிறக்கியும் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. ஆனால கொடியிறக்கத்தின் போது; அவிழ்க்கப்பட வேண்டும் இதுதான் ஆகமவிதி.

சர்வேஸ்வரக்குருக்களின் சதியா? அல்லது அறங்காவலர்சபையின் விதியா? அல்லது நிர்வாகசபையின் விதியா? புரியவில்லை. காப்புக்கட்டாதது தவறு என்று தெரிந்தும் பிரதான நித்திய குருக்கள்

அதை மறைத்திருக்கின்றார். காரணம் தெரியவில்லை,சில வேளைகளில் அறங்காவலர்சபைக்கோ அல்லது நிர்வாகசபைகோஅல்லது

சர்வேஸ்வரக்குருக்களுக்கு பயந்து கடமை தவறியிருக்கலாம் அல்லது ஒதுங்கியிருக்கலாம். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு தவறும்பிராமணர்களை ஏன் இந்த ஆலயத்தில் வைத்திருக்கவேண்டும். மெய்யடியார்களே மெய் திறவுங்கள். அற்ப ஆசைக்கு அந்தணர்களிடம் கையேந்தி நிற்க்காதீர்கள்.

03.08.10 செவ்வாய்கிழமையும் 10.08.10 செவ்வாய்கிழமையும் 1008 சங்காபிசேகம் நடைபெற்றது அன்று பிரதானகுருக்கள் தான் பூசை செய்யவேண்டும்.ஆனால் அன்று நான்கு மூலைகளில் ஒவ்வொரு பிராமணர்கள் இருந்து பூக்கள் போடுகின்றர்கள்.இதுசரியா? இதுமுறையா? தெரியவில்லை? மேலும் தேர்த்திரு விழா அன்று மூலஸ்தானத்திற்கு திரைபோட்டிருக்கும் போது கொடிமரத்திற்கு எப்படி தம்ப பூசை செய்யலாம். அடியார்களுக்கு விளங்கவேயில்லை.

சுவாமி திருவீதியுலா வரும்போது வழமையாக வழிநடத்தும் அடியார்கள் தங்களுக்கு பிடித்தவர்கள், தங்கள் இனத்தவர்கள் தங்களுக்கு தேவையானவர்களைக் கூப்பிட்டு சுவாமி காவ விடுகின்றர்கள்.காரணம் இலங்கையில் தமிழர்களுக்குள் பாக்கும் பாகுபாடு இங்கிலாந்திலும் பாராபட்சம்மாக பார்க்கப்படுகின்றது. மெய்யடியார்களே விழித்திருங்கள் உங்கள் விழிக்குள் உளி வைக்கின்றார்கள்.

சர்வேஸ்வர குருக்கள் என்பவர் மகோற்சவகாலத்தில் தனது பொறுப்புள்ள பணியிலிருந்து விலகி பொறுப்பற்ற முறையில் செயல்பட,அதனை அறிந்த அடியார்கள் இவருடை ஒழுக்க சீர் கேடுகளை அறங்காவலர் சபையிடமோ அல்லது நிர்வாகசபையிடமோ ஒரு பொதுமகன் கேட்கப்போனால் அவ்விடயத்தை அசட்டை செய்து சிரித்து சமாளித்து விடுவார்கள்.முக்கிய தினங்களில் ஒலிவாங்கியில் அறங்காவலர்சபையினரும்,நிர்வாகசபையினரும் உரக்க ஊளையிடுவார்கள் இது உங்கள் கோயில்,உங்கள் பணத்தில் வளர்ந்த கோயில்,இக்கோயிலை நீங்கள்தான் வளர்க்க வேண்டும் என்று. பொய் உரையை மெய் உரையாகத்தருவார்கள்.ஆனால் கோயிலில் தவறு நடந்தால் அதை தட்டிகேட்க பொதுமக்களுக்கு உரிமையில்லை. காரணம் அறங்காவலர்சபையினரதும்,நிர்வாகசபையினரதும் சொந்தகோயில். பிச்சை எடுக்கும் போது பொதுகோயில். பிச்சை எடுத்தபின் சொந்தகோயிலா?

மகோற்சவம் செய்யும் திருவிழா உபயகாரர்கள் எவ்வளவு பணத்தைக் கொடுத்து செய்தாலும். ஆகமவிதியை மீறிச்செய்தால் எந்த பலனும் இல்லை. இது இவர்களுக்கு தெரியாது,புரியாது.இதை மகோற்சவம் செய்யும் அடியார்கள் விளங்கிக் கொள்ள வேண்டும.; மற்றும் ஒரு கவலைக்குரிய விடயம் இவ்வளவு சீர்கேடெல்லாம் நடந்தும் அறங்காவலர்சபையும்,நிர்வாகசபையும் சேர்ந்து 2011ம் ஆண்டு நடைபெறும்ஆலய மா கும்பாபிசேகத்திற்கு

சர்வேஸ்வர குருக்களை நியமித்திருப்பது,ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான

செயல்.எமது சமயத்தை புண்படுத்துவதற்கு எழுதப்படவில்லை. எமது சமயத்தை பண்படுத்துவதற்கு எழுதப்பட்டது.

சம்பிரதாய சர்ச்சைகளில் திருத்தங்கள் வரவில்லைஎன்றால்

எழுத்துக்களின் சமர்ப்பணங்கள் தொடரும்,படரும்,வளரும்.

இப்படிக்கு

அடியார் திருக்கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்
:D:icon_idea: :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இது பற்றி நிர்வாகத்திடமோ அல்லது கோயில் குருக்களிடமோ கேட்டி இருக்கலாமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல்க்காலத்திலை மனிசனுக்கு ஏற்றமாதிரித்தான் சமயசம்பிரதாயங்களும் மாறும்....... மாறோணும்.

அங்கை திதியளை கணிச்சுத்தான் திருவிழாக்கள் அதுதான் கொடியேற்றம்,தேர்,தீர்த்தம் எண்டு வரும்

இஞ்சை சனி,ஞாயிறு இல்லாட்டி பள்ளிக்கூட லீவுவளை கணக்கிலை வைச்சுத்தான் தேர்த்திருவிழா வரும்...... வரோணும்.... இல்லாட்டி சனம் வராது

இஞ்சையிருக்கிற பூசாரியளிட்டை கலியாண வீட்டுக்கு நல்லநாள் எடுத்துதாருங்கோ எண்டு கேட்டால் மரணயோகத்திலையும் கொம்பியூட்டரிலை கணக்காய்கணக்குபண்ணி நல்லநாள் குறிச்சு தருவினம்

ஆகமவிதி படிக்கிறதுக்கு மட்டும்ந்தான் பாவனைக்கு இல்லை

காசுக்கு பின்னால் அலையும் குருக்கள்மாருக்கு ஆகம விதிகள் மறந்திருக்கும்.

ரதி அக்கா சொன்னது போல நீங்கள் அவர்களிடம் நேரடியாக கேட்கலாம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.