Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா உலகத்தமிழர் இயக்க “ஊழியர்களால்” தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உலகத்தமிழர் இயக்க “ஊழியர்களால்” தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

திகதி: 16.09.2010,

அன்பான உறவுகளே!

எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் சங்கதி இணையத்தளமானது பெரும் சவால்களுக்கும்;, சதிகளுக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது. இதனை பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இருப்பினும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கனடா உலகத்தமிழர் ஊழியர்கள் சிலரால் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. இதை நாம் இனியும் கண்டும் காணாது இருக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றை வெளிக் கொணர்வதின் மூலம் தமிழீழத் தேசியத் தலைவரினால் கட்டியெழுப்பப்பட்ட உலகத்தமிழர் இயக்கத்தினுள் கடந்த பல வருடமாக பெருந்தொகைப் பணத்தினை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு செயற்பட்டுவரும் ஒரு சிலரின் தவறான போக்கை மக்கள் முன் கொண்டுவருவது எமது தலையாய கடமையாகவுள்ளது.

கனடா உலகத்தமிழர் இயக்கம் என்பது ஒரு தேசிய இயக்கத்தின் கிளை. இந்த இயக்கத்தை குறை கூறுவதோ அல்லது சேறு பூசுவதோ எமது நோக்கமல்ல. இந்த இயக்கம் தொடர்ந்தும் எமது கனடிய மக்களை வழிநடத்தப்போகும் இயக்கம். இந்த இயக்கத்தைத் தவிர வேறு யாரும் கனடிய மக்களை வழி நடாத்துவதற்கு தகுதியானர்வர்கள் அல்ல. அதற்கு நாம் அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதில் எமக்குள் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த புனிதமான இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி பலர் எமது மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது.

இப்படியான சிலரை அடையாளப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் போது கனடா உலகத்தமிழர் இயக்கம்; என்கிற அமைப்பை நாம் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இனிமேல் விடயத்துக்கு வருவோம்.

காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும்

முதலாவது காட்டிக் கொடுப்பு: 2004ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வான பொங்குதமிழ் நிகழ்வு இலங்கை அரசை மட்டுமல்ல உலக அரசுகளையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு. பல லட்சம் மக்களை ஒரே திடலில் ஒன்று கூட வைத்து உலகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பிய நிகழ்வு. அந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தியவர் சதா என்கிற இளைஞன். பல நூற்க்கணக்கணக்கான கல்லூரி மாணவர்களை தன்னோடு இணைத்து திறமையான ஆளுமையோடு செயற்பட்ட இந்த இளைஞன் தான் இவர்களின் காட்டிக் கொடுப்புக்கு இலக்கான முதலாவது இளைஞன்.

pic324.jpg

2004ம் ஆண்டு காலப் பகுதியில் உலகத் தமிழருக்கு பொறுப்பாக இருந்த மரியதாஸ் அவர்களின் காலப்பகுதியில் தான் கனடாவில் பொங்கு தமிழ் எனும் சரித்திர நிகழ்வு பதிவானது. இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இளையோர் ஆகிய சதா மற்றும் அவரது நண்பர்களிடம் மரியதாஸ் அவர்கள் இப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். இந் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறிய சில மாதங்களின் பின் தனது குடும்பச்சுமை காரணமாக மரியதாஸ் அவர்கள் தாமாகவே உலகத்தமிழர் பொறுப்பாளர் பதவியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் என்கிற கிராஞ்சி பொறுப்பாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் தான் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் ஆரம்பமாகின. தமிழ் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த சில மாதங்களின் பின் மதன் என்கிற இலங்கை அரசின் உளவாளி உலகத்தமிழருக்குள் உள்நுழைந்தான். தான் தேசியத் தலைவரின் நேரடி செயற்பாட்டில் இயங்குவதாக கூறிக்கொண்டு உள் நுழைந்த இவனை வன்னியுடன் உடனுக்குடன் தொடர்கொள்ளக்கூடிய வசதிகள் இருந்தும் இவர்கள் இதுபற்றி வன்னித் தலைமைக்கு தெரிவிக்கவில்லை.

அவன் சுமார் 3 மாதங்கள் உலகத்தமிழர் அலுவலகத்துக்குள்ளேயே இருந்து கொண்டு அனைத்து செயற்பாடுகளின் விபரங்களையும் பெற்று இலங்கை அரசுக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இந் நிலையில் தான் இவன் இலங்கை அரசின் உளவாளி என்பதை கண்டு பிடித்தவர்தான் சதா. இப் பாரிய தவறினால் தமக்கு தலைமையிடமிருந்து சிக்கல்கள் வரப்போகின்றதென்பதை அறிந்த, தமிழ், கமல், அருமை மற்றும் கண்ணன் (யு1) ஆகியோர் சதாவை துரோகிப்பட்டம் சுமத்தி வெளியே விட்டார்கள். ஆனால் பொங்கு தமிழ் நிகழ்வின் ஏற்;பட்ட எழுச்சிக்குக் காரணமாக இருந்த சதாவை சிறிலங்கா உளவுத்துறை எப்படியாவது செயற்பாட்டிலிருந்து முடக்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தது.

pic325.jpg

கனடிய இறையாண்மைக்கு எதிராக செயற்படாத சதாவை எந்தக்குற்றச் சாட்டிலும் கைது செய்ய முடியாது என்பதை அறிந்த சிறிலங்கா அரசு அவரை கனடாவிற்கு வெளியே வரும் போது கைது செய்யவேண்டுமென்று காத்திருந்தது. சதாவினால் தமக்கு பிற்காலத்தில் பிரச்சனை வரும்; என்பதற்காக அவரை எப்படியாவது மாட்டிவிட வேண்டுமென்பதில் இவர்களும் குறியாக இருந்தார்கள்.

இந்நிலையில் சதா அமெரிக்கா செல்லவேண்டிய ஒரு தருணம் வந்தது. ஆனால் சதா அமெரிக்கா வந்தால் அவர் கைது செய்யப்படுவார் எனவே அவரை அமெரிக்காவிற்கு வரவேண்டாம என சொல்லும் படி அமெரிக்க நண்பர் ஒருவர் உலகத்தமிழர் ஊழியர் அருமைக்கு தெரிவித்திருந்தார். இத் தகவலை அருமை கமல் ஊடாக உ.த. பொறுப்பாளர் தமிழுக்கு சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த மூவரும் இத் தகவலை சதாவிற்கு சொல்லாமல் விட்டதோடு மட்டுமன்றி சதா அமெரிக்காவிற்கு விடுதலைப்புலிகளின் ஆயுத முகவராக வருகிறார் என சொல்ல வேண்டியவர்ளுக்குச் சொல்லிப் போட்டுக் கொடுத்தார்கள். அதன் பயன் என்ன? திருமண வயதில் உள்ள இரண்டு தங்கைகள், உடல்நிலை முடியாத தந்தை,தாய் ஆகியோரைப் பார்க்க வேண்டிய இந்த இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

இத்தோடு முடிந்ததா இவர்களின் காட்டிக் கொடுப்புக்கள்? தற்போது அரவிந்தன் என்கிற இன்னொரு இளைஞன்!

pic327.jpg

இந்த இளைஞன் செய்த தவறு என்ன? உலகத்தமிழர் ஊழியர் கமலிடம் கேள்வி கேட்டது.

இவரை காவல்துறையிடம் மாட்டிவிடுவதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்ன?

நாடுகடந்த அரசு என்றும் மக்களவை தேர்தல் என்றும் நடாத்தி பல லட்சக்கணக்காண மக்களின் பணத்தை விரயப்படுத்துகிறீர்களே, அதை விடுத்து எம் இன விடுதலைக்காக பல ஆண்டுகள் களமாடி இன்று சிறிலங்கா அரசின் பிடியில் இருக்கும் எமது பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், திறந்த வெளிச் சிறையிலே அடைபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விடுவிப்பதற்கு ஏதாவது செய்யாமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்பது தான் இவர் கேட்ட கேள்வி. இது தேசவிரோதமா?

தங்கள் இருப்புகளை தக்கவைப்பதையே குறியாகக் கொண்ட உலகத்தமிழர் ஊழியர் தமிழ், கமல், அருமை ஆகியோர் ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாக எந்த அமைப்புக்கு தாம் சேவை செய்து வந்தோமோ, எந்த அமைப்பினால் சுகபோக வாழ்வை அனுபவித்தோமோ என்பதை மறந்து, அதற்கு பதிலாக அந்த இளைஞன் தம்மை தாக்க வந்ததாகவும், ஈழ தமிழர்களின் கனவாகிய தமிழ்ஈழ தேசத்தை கட்டியெழுப்ப போராடிய அமைப்பின் போராட்டங்களில் பங்கேற்றுக்கொண்டார் என்றும் கூறி அரவிந்தனை கைது செய்யபட வைத்துள்ளார் உலகத்தமிழர் ஊழியர் கமல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடைபெற்ற பல ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில, “உலகமே எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்;” என பதறியடித்த பல்லாயிரக்கணக்காண உறவுகளில் இந்த அரவிந்தனும் ஒருவன். எம்மால் காப்பாற்ற முடிந்ததா? அந்த வேதனையும் சோகமும் என்றுமே ஒரு உண்மையான தமிழனின் நினைவை விட்டு அகலாது. நாங்கள் தான் அமைப்பு என்று கூறிக்கொண்டு, இலங்கை அரசுக்கு எதிரான எந்தவொரு கவனயீப்புப் போராட்டங்களையும் நடத்தாது, உணர்வுள்ள தமிழ் சமூகத்தையும் நடத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தால் யார் தான் கேள்வி கேட்க மாட்டார்கள்?

உறவுகளே ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகத் தமிழர் இயக்கம் என்பது ஒரு மக்கள் இயக்கம். எங்கள் தேசியத் தலைவரினால் சிறுகச் சிறுக செதுக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை பாவித்து தம்மை வளர்த்துக் கொள்ளும் தமிழ், கமல், அருமை போன்றவர்களை மக்கள் இனங்காணவேண்டும். இப்படியான சந்தர்ப்பவாதிகளை மக்களாகிய நீங்கள் தான் தட்டிக் கேட்க வேண்டும். அந்த உரிமை தமிழனாகிய ஒவ்வொருவனுக்கும் உண்டு.

பி.கு: அவர்களை நீங்கள் தட்டிக் கேட்க முற்பட்டால் நீங்களும் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் அல்லது கே.பியின் ஆட்கள், மகிந்தவின் ஆட்கள், விலைபோய்விட்டார்கள் என்றெல்லாம் கூறி நீங்கள் துரோகியாக்கப்படலாம். இதையெல்லாம் பொருட்படுத்தாது எங்கள் தலைவர், தமிழினத்திற்கு காலம் அந்த அற்புதத் தலைவனின் சிந்தனைக்கு செயல்வடிவோம் கொடுக்க முன்வருவீர்களேயானால் தட்டிக்கேட்பது உங்கள் கடமை.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

சங்கதிக்காக அற்புதன்

எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

-தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள்-

சங்கதி

சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவர் சொன்னது .... "எமக்கு தனிநாடு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்!!!!! ஏனெனில் அப்போதான் இந்த புலத்து பூசாரிகளை எல்லாம் நிரைக்கு விட்டு சுட்டு கொல்லலாம்" .......

இந்த இயக்கத்தைத் தவிர வேறு யாரும் கனடிய மக்களை வழி நடாத்துவதற்கு தகுதியானர்வர்கள் அல்ல. அதற்கு நாம் அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதில் எமக்குள் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

:D :D :D :D.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். கமலும், அமலும் சொல்லிக்கொடுக்கும்வரை கனடா காவல்துறை என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டு உள்ளது? மேற்கண்ட கட்டுரையை எழுதிய அற்புதன் அவர்கள் "தட்டிக்கேட்பது" எனும் பதம் மூலம் மற்றவர்களை எவ்வாறான செயலினை செய்யுமாறு தூண்டுகின்றார்?

உள்ளுக்கை இருந்துகொண்டு போட்டுக் குடுக்கியினமாம் என்று ஆய்வாளார் சொல்லுறார்.

சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவர் சொன்னது .... "எமக்கு தனிநாடு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்!!!!! ஏனெனில் அப்போதான் இந்த புலத்து பூசாரிகளை எல்லாம் நிரைக்கு விட்டு சுட்டு கொல்லலாம்" .......

உங்கடை புடுங்குப்பாடுகளுக்கை "பூசாரி" என்கின்ற பதத்தை ஏன் இழுக்கிறீங்கள்? ஏற்கனவே துரோகிகள், விரோதிகள் என்று நல்ல சொற்றொடர்கள் வச்சு இருக்கிறீங்கள் தானே, அவை போதாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு என்றும் மக்களவை தேர்தல் என்றும் நடாத்தி பல லட்சக்கணக்காண மக்களின் பணத்தை விரயப்படுத்துகிறீர்களே, அதை விடுத்து எம் இன விடுதலைக்காக பல ஆண்டுகள் களமாடி இன்று சிறிலங்கா அரசின் பிடியில் இருக்கும் எமது பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், திறந்த வெளிச் சிறையிலே அடைபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விடுவிப்பதற்கு ஏதாவது செய்யாமல் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்பது தான் இவர் கேட்ட கேள்வி. இது தேசவிரோதமா?

இந்தக் கேள்வி எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை. அரவிந்தனுக்கும், அவர்களுக்கும் நடந்த உரையாடல் எப்படி வெளியில் ஆய்வாளர் கேட்டுப் போடுகின்றார் எனத் தெரியிவ்லை. ஆனால் இந்தத் தேர்தல்களில் அரவிந்தனும் போட்டியிட்டிருந்தார்.

:rolleyes::unsure::wub::D.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். கமலும், அமலும் சொல்லிக்கொடுக்கும்வரை கனடா காவல்துறை என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டு உள்ளது? மேற்கண்ட கட்டுரையை எழுதிய அற்புதன் அவர்கள் "தட்டிக்கேட்பது" எனும் பதம் மூலம் மற்றவர்களை எவ்வாறான செயலினை செய்யுமாறு தூண்டுகின்றார்?

இதில் உண்மைகள் தாரளமாக உண்டு.ஆனால் இன்று வெளியிட்ட நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது? காரணம் இன்று டொரன்டோவில் நடக்கவிருந்த கவனயீர்பு கேள்விகுறியுடன் நிற்கிறது/இதேபோல வாஸிங்டனில் நடக்க விருக்கும் கவனயீர்புகூட?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.