Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது என்ன?

[ தினக்குரல் ] - [ Sep 16, 2010 04:00 GMT ]

அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்த சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளையும் விடக் கூடுதலான அளவுக்குப் பலம் பொருந்திய ஆட்சியாளராக மாறியிருக்கிறார். முன்னைய எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைத்திராத மூன்றாவது பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட வேண்டியிருந்த அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக புதிய திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படவிருக்கும் பாராளுமன்றப் பேரவை அவரது விருப்பத்தின்படி "சுயாதீன%27 ஆணைக்குழுக்களையும் உயர்பதவி நியமனங்களையும் செய்வதற்கு அவருக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது.

இதுகாலவரை முதலாவது பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தியான நிலையில் ஜனாதிபதி இரண்டாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவருக்கு அதிகாரமளிக்கும் ஏற்பாடே அரசியலமைப்பில் இருந்து வந்தது. புதிய திருத்தத்தின் பிரகாரம் நடைமுறையில் இருக்கும் ஒருபதவிக்காலம் தொடங்கியதில் இருந்து நான்கு வருடங்கள் பூர்த்தியான நிலையில் எந்த நேரத்திலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது பதவிக் காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்பதற்குத் தீர்மானித்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை எதிரணி நிறுத்தும்வரை ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடப் போவதாகக் கடந்த வாரம் கூறியிருந்தார். எத்தனை பதவிக் காலங்களுக்கு அதிகாரத்தில் இருக்க அவர் ஆசைப்படுகிறார் என்பதை யாரும் அறியார். ஆனால், அவர் பதவியில் இருக்கக்கூடிய எந்தவொரு பதவிக் காலத்தையுமே முழுமையாக 6 வருடங்கள் நீடிக்கவிடும் உத்தேசம் அவருக்கு இல்லையென்றே கருதவேண்டியிருக்கிறது. உண்மையில் முன்னைய ஜனாதிபதிகள் குறிப்பாக, காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவும் திருமதி குமாரதுங்கவும் உண்பதற்கு அங்கலாய்த்த பழம் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை முதலில் நழுவிப் பாலில் விழுந்து பின்னர் நழுவி வாயில் விழுந்திருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு இத்தகையதொரு "வரப்பிரசாதம்%27 கிடைத்ததற்குக் காரணம் ஜெயவர்தனவுக்குப் பிறகு எந்தவொரு ஜனாதிபதிக்குமே கிடைத்திராத பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அவரால் பெறக்கூடியதாக இருந்தமையேயாகும் என்பதில் சந்தேகமில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்தில் எந்தவொரு அணியுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதென்பது சாத்தியமாயிருக்கவில்லை. ஆனால், கடந்த ஏப்ரில் பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான ஆசனங்கள் (144) கிடைத்திருந்தன. கட்சித்தாவல் நாடகங்களை மிகவும் சுலபமான முறையில் அரங்கேற்றுவதில் கைதேர்ந்தவர்களான ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் தங்களுக்குத் தேவையான நேரத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறக் கூடியதாக இருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. அரசாங்கம் எதிர்பார்த்ததைப் போன்றே அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்துக்கு சபையில் 160 க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. ஜெயவர்தன தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்ததைப் போன்று எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ராஜபக்ஷவும் தனது அரசியல் திட்டங்களுக்கு வசதியான விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு எந்தத் தடையுமேயில்லை.

ஜனாதிபதி ஜெயவர்தன தனது அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மைப்பலம் மாத்திரமல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மை கூட மீண்டும் ஒரு பொதுத் தேர்தலில் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்ததனாலேயே 1982 அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு டிசம்பரில் அந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கு மக்களிடம் ஆணையைப் பெறுவதாகக் கூறிக்கொண்டு அதற்கு முன்னர் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதுமே இடம்பெறாதவகையிலான அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகள் நிறைந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாட்டை ஜெயவர்தன தனது அரசியலமைப்பில் புகுத்திய தருணத்திலேயே அதில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த அந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரையிலும் கூட, மீண்டுமொரு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது கொண்டிருக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற முடியாத சூழ்நிலை தோன்றுகின்ற பட்சத்தில் ஒரு கட்டத்தில் இந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 வருடங்கள் நீடிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு தயங்கமாட்டார் என்பதிலும் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுய நிர்ண்ய அங்கிகாரத்தினை ஒத்து இலங்கை அரசியல் சட்ட திருத்ததினை மேற்கொள்ளும் அளவுக்கு ஈழ தோழர்கள் பலம் பெறவேண்டும் ஜட்டி முதல் குட்டி வரை சலுகைகள் அனைத்தினையும் நிறுத்தவேண்டும்... அல்லது தமிழீழ தனி நாட்டை பெற அறிவியல் ஆராய்ச்சிகளில் இறங்க வேணும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.