Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கான்கிரீட் வீடு கட்டினா சாமி குத்தம்

Featured Replies

கான்கிரீட் வீடு கட்டினா சாமி குத்தம்

சேலம் மாவட்டம் மல்லியகரையில் இருந்து ராசிபுரம் செல்லும் மெயின்ரோடு. சன்னாசி வரதன் மலையடிவாரத்தில் பாக்கு மரங்கள், தென்னந்தோப்பு, வாழை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒன்றரை கி.மீ. தூரம் சென்றதும் இடது புறம் திரும்புகிறது சாலை. கருத்தராஜாபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழி. நுழைந்ததுமே பிரமாண்ட விழுதுகளுடன் வரவேற்கிறது சாலையோர உச்சிலிமரம். மரத்தடியில் காளியம்மன் கோயில்.

போயர் காலனி, புதுக்காலனியை கடந்தால் க.ரா.பாளையம். மொத்தம் 400 வீடுகள். ஒரு ஊர் என்றால் குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, பண்ணை வீடு, பங்களா என்று கலவையாக இருக்கும். இங்கு வித்தியாசம். ஆஸ்பெட்டாஸ், ஓடு, கூரை வீடுகள் மட்டுமே உள்ளன. கான்கிரீட் வீடு ஒன்றுகூட இல்லை. இதற்கு கிராமத்தினர் சொல்லும் காரணமும் உதாரணம் காட்டும் சம்பவங்களும் அதிரவைக்கின்றன.

‘‘எங்க ஊர்ல கான்கிரீட் வீடே கிடையாதுங்க. யாரும் கட்டுறதில்ல. மீறி கட்டினா.. சாமி சும்மா விடாது. அசம்பாவிதம் ஏற்பட்டுடும். அந்த குடும்பத்துல ஆண் வாரிசே இல்லாம போய்டும். காலம்காலமாக இந்த நடைமுறை இருக்கு. இதை மீறி கான்கிரீட் வீடு கட்டுன வீட்டுல ஆண் வாரிசுகள் இறந்துட்டாங்க” என்று கிலி தகவலுடன் ஆரம்பித்தார் ஒரு பெரியவர். “ஆடிட்டர், டாக்டர், இன்ஜினியர், வக்கீல்னு வசதியான பலர் இந்த ஊர்ல இருக்காங்க. அவங்ககூட சாமி குத்தத்துக்கு பயந்து ஓட்டு வீட்டுலதான் இருக்காங்க” என்று தகவல் சொன்னார் இன்னொருவர்.

க.ரா.பாளையம் புதுக்காலனியில் 2001&ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 34 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. அத்தனையும் கான்கிரீட் வீடுகள். கான்கிரீட் மேல் தளத்தை இடித்துவிட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாக மாற்றிவிட்டனர் மக்கள்.

“மொதல்ல கான்கிரீட் தளத்தை யாரும் இடிக்கல. இங்கு முதலில் தங்கவேல் குடும்பம்தான் குடி வந்தது. அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள். அதில் ஒன்று இறந்துவிட்டது. இன்னொரு குழந்தை ஊனமாகிவிட்டது. சாமி குத்தம்னு தெரிஞ்சுக்கிட்டோம். எல்லாரும் கான்கிரீட் தளத்தை இடிச்சிட்டு ஆஸ்பெஸ்டால் போட்டோம்” என்கின்றனர். தங்கவேலும் சம்பவத்தை நினைவுகூர்ந்து கண் கலங்கினார்.

சாமி குத்தமாகிடும் என்று இவர்கள் சொல்கிற பெரியசாமியின் கோயில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் பிரமாண்ட ஆலமரத்தடியில் இருக்கிறது. இந்த சாமி பெயரைச் சொன்னாலே பக்தியைவிட பயம்தான் அதிகம் ஏற்படுகிறது இப்பகுதியினரிடம். வழக்கமாக, கோயில் வாசலில்தான் செருப்பை கழற்றிப் போடுவார்கள். இங்கோ, கோயிலுக்கு வெகுதொலைவில் வரும்போதே செருப்பை கழற்றிவிடுகின்றனர். மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள். கிறீச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

மூலஸ்தானத்துக்கு எதிரே பிரமாண்டமாக மூன்று குதிரை சிலைகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. மூலஸ்தானத்தில் கிழக்கு முகம் நோக்கி கருப்பையா சாமி. தெற்கு முகம் நோக்கி முறுக்கு மீசையுடன் கையில் அரிவாளுடன் அமர்ந்திருக்கிறார் பெரியசாமி. இந்த சாமிகள் உள்ள இடத்தில் ஆலம் விழுதுகள் பின்னி பிணைந்துள்ளன. இதற்கு அடிமரம் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. சாமி சிலை அருகே உள்ள ஆலம் விழுதின் கிழக்கு புறம் நின்று குறி கேட்கும் போது கவுளி (பல்லி) சத்தமிட்டால் நினைத்த காரியம் வெற்றியாகும் என்கின்றனர் பக்தர்கள்.

கான்கிரீட் வீடு ரகசியம் பற்றி ஊர் தர்மகர்த்தா செல்வம் சொல்கிறார்.. “மனசார வேண்டிக்கிட்டு என்ன பிரார்த்தனை பண்ணினாலும் நிறைவேத்திடுவாறு பெரியசாமி. அவ்வளவு சக்தி. ஆனா, சாமிக்கு பிடிக்காத ஒரே விசயம் மாடி வீடு கட்டுறது. அதே மாதிரி, ஒரே வீட்டுல நிறைய வாசல்படி வைக்கிறதும் அவருக்கு பிடிக்காது. வீட்டுக்கு ஒரே ஒரு வாசல்படிதான் இருக்கணும். சாமி இங்கிருந்து நடுராத்திரி புறப்பட்டு கொல்லிமலை, பச்சமலைக்கு வேட்டைக்கு போறதாக ஐதீகம். குதிரையில ஏறி வானத்துல பறந்து போவார். வவ்வால்கள்தான் அவருக்கு வழிகாட்டிட்டுப் போகும். அந்த காட்சியை நேரடியா பாத்தவங்களும் இருக்காங்க. வானத்துல பறக்கும்போது சாமிக்கு தடங்கல் இருக்கக் கூடாது. அதுக்காகத்தான் யாரும் மாடி வீடு கட்டுறதில்ல.

வேட்டைக்கு புறப்படுறதுக்கு முன்னாடி சாமி ஊஞ்சல் ஆடுவார். அதனால் ராத்திரியில இந்த ஊர்ல யாரும் தூளியில குழந்தையை போடமாட்டாங்க. அப்புறம், சாமிக்கிட்ட மட்டும்தான் குதிரை இருக்கணும். வேறு யாரும் வளர்க்கக் கூடாது. மீறி சிலர் வளர்த்தாங்க. அதெல்லாம் செத்துப் போய்டிச்சு. அவங்க குடும்பமும் விளங்காம போய்டிச்சு” என்று சொல்லி முடித்தார்.

‘‘இங்கு வவ்வால் சக்தி படைச்சது. இந்த உண்மை தெரியாம ஒருத்தர் வவ்வாலை சுட்டார். துப்பாக்கி எதிர்த்து அடிச்சதுல அவர் இறந்துவிட்டார். சாமி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிரானைட் குவாரி அமைக்க பலர் வந்தாங்க. எல்லாருக்கும் நஷ்டம். டெண்டரை கேன்சல் பண்ணிட்டு போய்ட்டாங்க. சாமிக்கு பிடிக்காத எதையும் இங்கு பண்ணக்கூடாது” என்றார் ஒன்றிய கவுன்சிலர் வரதராஜன்

மாதவன் என்பவர் கூறுகையில், “என் நண்பர் செந்தில்குமார் நாத்திகவாதி. இதெல்லாம் நம்பமாட்டேன்னு சொல்லி கான்கிரீட் வீடு கட்ட ஆரம்பிச்சார். கம்பிக்கு ஆர்டர் கொடுத்தார். 2 மாசம் முன்னாடி ஆட்டோவுல கம்பி ஏத்திட்டு வந்து வீட்டு வாசல்ல இறக்கினாங்க. அவரது அண்ணன் இறந்துட்டதா போன் வந்திச்சு. கம்பியை திருப்பி அனுப்பிட்டான். ஆஸ்பெஸ்டாஸ் போட்டு வீடு கட்டிட்டு இருக்கான்” என்றார்.

கான்கிரீட் பேச்சை எடுத்தாலே ஆளுக்கொரு அனுபவக் கதையை சொல்லி கிலி கிளப்புகின்றனர் கருத்தராஜாபாளைய மக்கள்.

http://www.dinakaran.com/specialdetail.aspx?id=16087&id1=22

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.