Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

தளபதி ராம் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரமிக்க, உணர்வு மிக்க தளபதிகளுள் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. கிழக்கில் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை அடுத்து மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மட்டக்களப்பிலிருந்து கணிசமான அளவு போராளிகளும், தளபதிகளும் வன்னிக்கு நகர்ந்தார்கள். ஆனால், தளபதி ராம் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு சென்று பணி செய்ய தேசியத்தலைவரிடம் அனுமதி பெற்று பணியாற்றியவர். அதுபோல் தளபதி நகுலன் அவர்களும் திறமை மிக்க ஒரு தளபதி. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாக ஒரு காலகட்டத்தில் பணியாற்றியவர்.

தமிழீழ விடுதலைப்போர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றுவதென்பது மற்றை மாவட்டங்களிலும் பார்க்க மிகவும் கடினமானது. அங்கு அடர்ந்த காடுகள் காணப்பட்டாலும் கூட உணவுப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் பல நெருக்கடிகள் என்றுமே அங்கு இருந்ததுண்டு. அந்த மாவட்டத்தில் பணியாற்றிய போராளிகள் மூன்று வேளை உணவு உண்பது மிகவும் கடினமானது. ஒருவேளை அல்லது இரண்டுவேளைகள் மாத்திரமே உணவு உண்பார்கள். படையினரின் சுற்றிவளைப்புக்கள் அதிகம். படையினருக்கு எதிரான மோதல்களில் உயிரிழப்புக்களை விட உணவு பெறும்முயற்சியின்போது நடைபெறும் மோதல்களில் அதிகம் உயிரிழப்புகள் என்ற நிலையே அங்கு இருந்தது.

அவ்வாறான ஒரு பகுதியில் தான் விரும்பி பணியாற்ற அனுமதி பெற்றுவந்தது மட்டுமல்லாது, தெற்கே அம்பாந்தோட்டை வரை சென்று பல தாக்குதல்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்தவர் இந்த ராம். அதுபோல், கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டு பல உயிரிழப்புக்களை கொடுத்தவர் நகுலன்.

ராம் அவர்கள் கிழக்கில் கருணாவினால் புலிகள் அமைப்பிற்கு நெருக்கடிகள் வந்தபோது தேசியத்தலைவரின் நம்பிக்கை பாத்திரமாக செயற்பட்டவர். வன்னியில் இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் வன்னிக்கு வெளியே நின்ற ஒரே ஒரு மூத்ததளபதி ராம் அவர்கள் மட்டுமே.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தளபதி ராம் அவர்களைக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வன்னிக்கு வெளியே இருந்த சில முக்கிய போராளிகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளின் முக்கியஸ்த்தர்களும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்கள். இருந்தபோதும், முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின்னர் சாதாரண போராளிகள் மட்டில் நம்பிக்கையீனங்கள் தோன்றவே அவர்கள் விரும்பத்தகாத சில செயற்பாடுகளில் இறங்கியவேளையில் தளபதி ராம் அவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்பட்டதுடன், அடுத்தகட்டம் என்ன என்று சிந்திப்பதற்கும் அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் சில காலம் அமைதி காக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மூவர் தாங்கள் தப்பிப்பதற்க்காக தேசத்துரோகி கருணா மற்றும் தயா மாஸ்ரர் ஆகியோருடன் கூட்டுச்சேர்ந்து சூழ்ச்சி செய்து தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறீலங்கா இராணுவத்தினரிடம் சிக்கவைத்தனர். அந்த மூவரே தற்போது ஊடகங்களில் பல குழப்பங்களை விளைவித்துவருகின்றனர்.

தேசத்துரோகிகளின் சூழ்ச்சியினாலேயே இவர்கள் இருவரும் எதிர்பாராத வகையில் படையினரிடம் சிக்கிகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் விரும்பி படையினரிடம் சரணடையவில்லை. சூழ்ச்சிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்கள் இருவரையும் இவ்வாறான ஒரு சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளவைத்தது.

இவர்களை வைத்துக்கொண்டு படையினர் தமிழ்த்தேசியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் என்ன, எவ்வாறான நகர்வுகள் எல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன என அறிந்துகொள்ள முற்பட்டுள்ளனர்.

ஆனால், அவரின் ஆதரவாளர்கள் பலர் இன்றும் தளபதி ராம் அவர்கள் காட்டிற்குள் மறைந்துகொண்டுள்ளதாக நம்பிக்கொண்டு படையினரின் அழுத்தம் காரணமாக அவர்கள் விடும் அறிக்கைகளையும், செவ்விகளையும் நம்பிக்கொண்டுள்ளார்கள்.

சிறிலங்கா படையினர் மிகவும் திட்டமிட்ட வகையில் கடந்த காலங்களில் பல நகர்வுகளை செய்து அவர்களின் திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டுள்ளார்கள்.

உண்மையிலேயே தளபதி ராம் அவர்கள் காட்டிற்குள் தப்பி இருக்கும் நிலையிருந்தால் அவரைத்தேடி பல இராணுவ நடவடிக்கைளை படையினர் மேற்கொண்டிருப்பார்கள் என்பதனை நாம் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முள்ளிவாய்க்காலில் யுத்தில் வெற்றிபெற்ற சிறிலங்கா படையினரால் தளபதி ராம் அவர்கை தேடிக்கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருந்திருக்காது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தளபதி ராம் அவர்கள் நிலை எப்படி உள்ளது என்பதனை யதார்த்தபூர்வமாக சிந்திப்பதற்கு அவரின் பேட்டியும் அதுபோல் கடந்த மாவீரர் நாளின்போது அவரின் உரையும் அவர் எப்படியான ஒரு சூழலில் இருக்கின்றார் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனலாம்.

தளபதி ராம் அவர்கள் மீது சிலருக்கு இருக்கக்கூடிய பாசம் அவருடைய திறமை என்பன அவரை நேசிக்கும் தமிழ்தேசியத்தின் மீது பற்றுள்ளவர்களுக்கு நம்ப முடியாதுள்ளது. நாம் யாதார்த்தை உணரவேண்டும். சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். உண்மையை உள்ளபடி சிந்தித்தே ஆகவேண்டும்.

— தாயகத்திலிருந்து ஒரு போராளியின் மடல்

http://meenakam.com/2010/09/26/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ராமும்,நகுலனும் ஆமியின்ட கையில் என்கிறீர்கள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.