Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை!

Featured Replies

4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை!

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 12:40[iST]

சென்னை: திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.

சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் திரண்டு வந்து இரவு முழுக்க விழித்திருந்து காலை ஒன்பது மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் டிக்கெட் வாங்கிச் சென்ற காட்சியை பல தியேட்டர்களில் காண முடிந்தது.

"நிறைய தியேட்டர்களில் திரையிடுவதால் ரசிகர்கள் நெருக்கடி இருக்காது என்று நினைத்தோம். மாறாக அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுவிட்டது. கேட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக போலீசார் கூறியதும், கதவை திறந்து வளாகத்தின் உள்ளே அனுமதித்தோம். கவுன்டர்கள் திறக்கும்வரை ரசிகர்கள் அமைதியாக காத்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது" என ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் நிர்வாகி குறிப்பிட்டார்.

சத்யம் காம்ப்ளக்சில் மாணவ மாணவிகள், ஐ.டி துறை இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அருகில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள எஸ்கேப் சினிமாவின் அனைத்து கவுண்டர்களிலும் எந்திரன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் வெறும் 10 நிமிடத்தில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதயம், காசி தியேட்டரில் இளம் ரசிகர்கள் கும்பல் கும்பலாக நின்று கோஷமிட்டபடி காத்திருந்தனர். இங்கு அதிகாலை 3 மணியிலிருந்தே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் ரசிகர் மன்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

40 வருடங்களில் காணாத சாதனை!

கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் கூறுகையில், 'முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால், சர்வர் ஹேங்காகி விட்டது. 40 வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்த படத்துக்கும் பார்த்ததில்லை' என்றார்.

கமலா மட்டுமல்ல, அபிராமி உள்ளிட்ட பல திரையரங்குகளின் இணையதளங்கள் நேற்று முழுக்க முடங்கிப்போயின.

சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் முனி கண்ணையா, 'சென்னை மற்றும் புறநகர்களில் 70க்கு மேற்பட்ட தியேட்டர்களில் 'எந்திரன்' திரையிடப்படும் நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

கோவை கங்கா, யமுனா தியேட்டர்களில் காலை 6.30க்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், 8 மணிக்கே வினியோகம் துவங்கியது. ஒரு மணி நேரத்தில் 1 வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

வேலூர், திருப்பத்தூரில் புதிய சாதனை:

வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் பொதுவாக எந்தப் படத்துக்கும் முன்பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கான டிக்கெட்டுகள் அடுத்த 8 நாட்களுக்கு ரிசர்வ் செய்தயப்பட்டுள்ளது புதிய வரலாறு என்கிறார்கள். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி, டிக்கெட்டுக்குக் காத்திருந்தனர்

நன்றி

தற்ஸ் தமிழ்

  • 2 weeks later...

'நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாதென்பதற்காக' தன் ரசிகர்களை தன் மகள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கரிசனத்துடன் அறிக்கை கொடுத்த ரஜினி, இப்படி முதல் காட்சிக்காக பெருங்கூட்டத்தில் சிக்கி அவதிப்படும் ரசிகர்களுக்காக "ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள். எப்படியும் ஒருவாரத்தில் இதன் கள்ள குறுந்தகடு வெளிவரப்போகிறது. அதை வாங்கி வீட்டிலேயே செளகரியமாக அமர்ந்து பாருங்கள்" என்று ஏன் அறிக்கை விடவில்லை இவர்களில் யாராவது யோசிப்பார்களா?

தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு 'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி தெளிவாகத்தான் உள்ளார். தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளையும் பிரித்துப் பார்க்கிறார். ஆனால் அவரது ரசிகர்களுக்குத்தான் சினிமாவையும், ரஜினி என்கிற தனிமனிதனையும் பிரித்துப்பார்க்கத் தெரியவில்லை. :lol:

இப்படியான ரசிகர்கள் இருக்கும்வரை ரஜினி காட்டில் மழைதான். :lol:

விரும்பியோ, அல்லது விரும்பாமலோ சில அன்பு அழைப்புகளுக்கு கட்டுப்பட்டு தனது பொன்னான நேரத்தை ஒதுக்குவார் முதல்வர் கலைஞர். அப்படி அழைப்பவர்களின் படங்களை பார்த்துவிட்டு இயல்பாக சில வார்த்தைகளையும் கூறுவார்.

ஆனால் எந்திரன் படத்தை பார்க்க எத்தனை மணிக்கு வந்தார் என்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம், அவரது அக்கறையையும் அன்பையும்!

இன்று அதிகாலை ஐந்து மணிக்கு முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்திரன் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்யம் திரையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த காட்சிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தார் முதல்வர்.

அவருடன் தமிழக அமைச்சர்களும், தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தார்கள். மிக சாதாரணமான படங்களையே பாராட்டி பேசும் முதல்வர் இந்த படத்தை எப்படி பாராட்டியிருப்பார் என்பதை நாம் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்..? முன்னதாக அவரை, ரஜினி உள்ளிட்ட எந்திரன் குழுவினர் வரவேற்றார்கள்.

http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=3133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.