Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம்

Featured Replies

கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுக்குப் முன்னாள் பொறுப்பாளராக இருந்து பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து போராட்டத்தினை அழிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகளுக்கு பக்கபலமாக செயற்பட்ட கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது வெளிப்படையாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார்.

அவரைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடித்து அதன் மூலம் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கு அல்லது இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைகளுக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துவதனை தடுப்பதற்கும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முடக்குவதற்கும் இலங்கை அரசு முயன்று வருகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றும் கேபியின் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் அவரது வேலைத்திட்டங்களுக்காக 100 ஏக்கர் நிலப்பரப்பினை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அறிவியல்நகரில் வழங்குமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு உத்தரவிடப்பட்டு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளில் கிளி ரச அதிபர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து போராட்டத்தை காட்டிக் கொடுத்ததன் மூலம் அமைச்சுப்பதவியை பெற்றுக் கொண்டுள்ள கருணாவும் தனது பங்கிற்கு வட்டக்கச்சியில் அமைந்திருந்த தமிழீழ வர்த்தக வாணிப துறைக்குச் சொந்தமாக இருந்த சேரன் வாணிப அரைக்கும் ஆலையை கையகப்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அந்த அரைக்கும் ஆலையில் பலகோடி பெறுமதியான இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவற்றில் சில பொது மக்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக கொண்டுவந்து ஒப்படைக்கும்படி கருணா தனது அடியாட்கள் மூலம் பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது

http://www.pathivu.com/news/13395/57/100/d,article_full.aspx

நன்றி

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் இதிலையும் வடக்கு, கிழக்கு என்று பாகுபாடு காட்டக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம்

ubgroup.jpg

"புட்டியோடு" சிங்களத்து "குட்டி" ஏதும் வாழ்நாள் முழுக்க குஜாலாக இருக்கஅரசாங்கம் செட் செய்து தரலியா?

:):unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
:)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

ubgroup.jpg

"புட்டியோடு" சிங்களத்து "குட்டி" ஏதும் வாழ்நாள் முழுக்க குஜாலாக இருக்கஅரசாங்கம் செட் செய்து தரலியா?

:):unsure: :unsure:

அதெல்லாம் ஏற்கனவே கொடுத்தாச்சு :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.