Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏமாறாதே ஏமாறாதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே!

Featured Replies

ஏமாறாதே ஏமாறாதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே!

“மானிட வாழ்வென வாழ்வென நொந்து...” இந்தப் பாடல் வரிகள் பட்டினத்தடிகளுக்கு உரித்தானவை.மானிட வாழ்வில் இறுதிக்கால சோகத்தை அனுபவ வாயிலாக உணர்ந்து பாடப்பெற்ற இந்த வரிகளை ஈழத் தமிழ் மக்கள் பல வரு டங்களாக அனுபவித்து கண்ணீர் விடுகின்றனர்.

இடப் பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரி ழப்புக்கள், காணாமல் போனவர்களின் சோகங்கள், ஊனங்கள், முட்கம்பி முகாம்கள், குடிசை வாழ்வு இப்படி எத்தனையே சோகங்கள் எங்கள் வாழ்வை நாசம் செய்துவிட்டன.

முற்றுப் பெறாத தொடர் சோகமாக இருக்கும் இத் துன்பியலில் இருந்து விடுபடுவ தற்கான வழியை இறைவனே வகுத்தருள வேண்டும். அந்த நம்பிக்கையைத் தவிர தமிழ் மக்களிடம் வேறு எதுவும் இல்லை. முப்பது ஆண்டுகால யுத்தமும் இனப் பிரச்சினையும் மட்டுமே எங்கள் வாழ்வை நிர் மூலமாக்கின எனின் அது மகாதவறு. யுத்த கால சூழலை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட அரசியல்வாதிகள், குறிப்பிட்ட வர்த் தகர்கள் மற்றும் சுத்துமாத்தையே சுயதொழிலாகக் கொண்டவர்கள் எனப் பலரும் பொய் வாக்குறுதி அளித்து எங்களை ஏமாற்றி சுயலாபம் அடைந்தனர்.

இப்போது கூட தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வெறுமையானவையாக அரசியலின் வியூகம் அமைக்காமல் வெற்று வார்த்தைகளை உச்சாடனம் செய்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்களிடம் தமிழ் மக்கள் மீது பற்றில்லை; இரக்கமில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா! என நடிகர் கவுண்டமணி சொல்வது போல இவர்களின் மனநிலை உள்ளது.

இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்தை எதிர்காலத்தில் தலையயடுக்க விடா மல் தடுப்பதற்காக முன்னெடுக்கும் திட்டங்கள் முழுமையாக அரங்கேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இதற்கு மேலாக இப்போது சுத்துமாத்துப் பேர் வழிகளும் எங்களை ஏமாற்ற புறப்பட்டு விட்டனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உள்நா டில் தொழில் வசதி, கல்விச் சான்றிதழ்கள் என்ற போலி விளம்பரங்களோடு இவர்கள் படையயடுத்திருப்பதை அப்பாவித்தனமாக அறியாதிருப்பின் அதனால் உள்ளதையும் இழக்கும் பரிதாபம் ஏற்படும்.

ஆகவே எதிலும் விழிப்பு வேண்டும். வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்யும் பொருட்களின் தரம், தன்மை, காலாவதியாகும் திகதி, விலை என்பன முதல், போலி வாக்குறுதிகள் வரை எதிலும் நாம் விழிப்பாக இருப்பதே துன்பக் கடலில் நாம் வீழ்வதைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.

[ வலம்புரி ] - [ Oct 07, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய சொல்லும் தலைவரின் காமெடி ஈழம வரை பரவியிருப்பது மிக்க மகிழ்ச்சி...:wub:

பல ஈழத்தோழர்களுக்கு தலைவர் கவுண்டமணி தெரியாது என நினைக்கிறேன் :blink:

  • தொடங்கியவர்

குடும்பத்துடன் தவித்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு செய்திக்குறிப்பு:கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின்போது, வவுனியா பகுதியில் வாழ்ந்த தவமணிதேவி என்பவரின் மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனா ஆகியோர், பலத்த காயமடைந்து, அதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டனர்.தவமணிதேவி தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்து, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முகாமில், தனது 90 வயது தந்தை, மகன் பிரகாஷ், மகள் சந்திரவதனாவுடன் உள்ளார்.இது தொடர்பாக தமது கவனத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, தவமணிதேவி தனது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து சிறப்பு நேர்வாக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=101514

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.