Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தளபதி பிரபாவின் துணைவியார் உட்பட 19 பேரே சாட்சியம் அளித்தனர். 1500 பேர் காத்திருந்து திரும்பினர்

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 1500 க்கும் அதிகமானோர் குழுமியிருந்த போதும் 19 பேரே சாட்சியமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு சாட்சியங்களை நேற்றுப் பதிவு செய்தது. கணவன்மார், மகன்மார், உறவினர்களை இழந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கியவாறு மகஜர்களுடனும் புகைப்படங்களுடனும் வருகை தந்திருந்தனர். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச ஆசன இருக்கைகள் போதாத நிலையில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் இவர்கள் நின்றிருந்தனர்.

அனைவரதும் சாட்சியங்களை ஆணைக் குழுவினால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களின் கடத்தப்பட்ட, காணாமல் போனவர்களது தகவல் தெரித்தவர்கள் மகஜரையும் அதனுடன் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு செல்லுமாறும் தாங்கள் விசாரித்து நல்ல பதிலைத் தருவோம் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது. இதனால் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகஜர்களை வழங்கிவிட்ட தங்களின் கவலைகளை நேரடியாக தெரிவிக்க முடியாமல் அவர்கள் சென்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் க.குருநாதன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய சபை உறுப்பினர் அ.செல்வேந்திரன், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதி கேதீஸ்வரி யோகதாஸ், விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத்தரப்புப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா, விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் புலனாய்வுத் தளபதி பிரபாவின் மனைவி பிரபாகரன் றொபிற்றா உட்பட 19 பேரே சாட்சியம் அளித்தனர். இதேவேளை, அருட்தந்தை மில்லர் அறிக்கை சமர்ப்பித்தார்.

ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர். டி.சில்வா மற்றும் உறுப்பினர் எம்.ரீ.எம்.வாவிக் சமுகமளிக்காத நிலையில் நேற்றைய விசாரணையில் ஏ.றொஹான் பெரேரா, மனோகரி இராமநாதன், எஸ்.எம்.ஜீ.எஸ்.பளிக்கக்கார, கரு ஹங்கவத்த, எம்.பீ.பரணகம, சி.சண்முகம் ஆகியோர் பிரசன்னமாகி சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-1500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0

Edited by உமை

சிங்கள அரச பயங்கரவாதிகளால் சிங்கள இனவாதி சி. ஆர். டி. சில்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்துடைப்பு ஆணைக்குழுவும், கண்துடைப்பு விசாரணையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவமுதன்,

இந்த ஆணிக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே போர்க்குற்றங்களோ, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களோ நடைபெறவில்லை என்று உலகத்திற்குக் காட்டி வெளியுலக அழுத்தத்தைக் குறைப்பதுதான். ஆனால் சில வேளைகளில் அவர்களின் நோக்கத்தையும் மீறி, அவ்வப்போது உண்மையாக நடந்தவற்றை சாட்சியங்கள் தமது உயிரையும் துச்சமென மத்தித்து எடுத்துரைக்கும்போது சிங்களவர்கள் வெளிப்படையாகவே சங்கடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

1. கடந்த மாதம் இந்த ஆணைக்குழு வன்னியில் அமர்வு மேற்கொண்ட போது, ஆணைக்குழுவின் முன் வந்து சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

2. போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

3. ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சியமளிக்க சமூகமளித்திருந்த பொது மக்களில் அநேகமானோர் காணாமல் போன தமது கணவர் அல்லது பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்று தருவது தொடர்பாகவே வாய் மூலமும் எழுத்து மூலமும் தமது சாட்சியங்களை ஆணைக்குழு முன் வைத்தனர்.

4. இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101009_commis.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.