Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இந்திய வம்சாவளி என்ற மக்கள் வகுப்பும் இன்றைய நிலையும்

Featured Replies

திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம்

Theeyilai%20thoodda%20thamilar.jpg

சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமாக உலகில் திகழ்ந்த பிரித்தானிய முடியாட்சிக்குள் 1815ம் ஆண்டு இலங்கை முழுமையாக உள்வாங்கப்பட்டு பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெறவும், முடிவுப்பொருட்களுக்கான சந்தையை அமைத்துக் கொள்வதற்கான போட்டியில் பிரான்ஸ், போர்த்துக்கள், ஒல்லாந்து என பல நாடுகள் போட்டியில் குடியேற்ற நாடுகளை பிடித்துக்கொண்டாலும் ஆசியாவில் அதிலும் தெற்காசியாவின் கூடிய பிரதேசங்களை தனது குடியேற்ற பிரதேசங்களாக பிரித்தானிய முடியே கொண்டிருந்தது.

பிரித்தானியாவிற்கு கோப்பியை ஏற்றுமதி செய்த மேற்கிந்திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டதால் அங்கே மலிவான தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் குறைந்ததுடன், பிரித்தானியாவிற்கு இறக்குமதியான மேற்கிந்திய உற்பத்திகளுக்கான வரி சலுகைகளும் இரத்துசெய்யப்பட்டது. அதே நேரம் பிரித்தானியாவில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தது. மேற்கிந்திய தீவுகளின் கோப்பி செய்கை வீழ்ச்சியடைந்தமையினால் பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு தமது தொழிழை வளர்க்க மாற்று நிலம் காணப்பட்டது. இந்நிலையில் நிர்வாக ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட்டதும் சுவாத்திய ரீதியாக பொருத்தமானதுமான இராஜகாரிய முறையின் கீழ் இலவசமாக உழைப்பினை வழங்கியவர்கள், விடுதலை பெற்றமையினால் அவர்களின் ஊழியத்தை பெற வாய்ப்பு கிடைத்தமை, முதலீட்டாளர்களுக்கு இலங்கை வாய்ப்பான இடமாக தோன்றியது.

எனவே, 1835ம் ஆண்டு தொடக்கம் 1880 வரை இலங்கையின் கோப்பிச்செய்கை சிறப்புற்று விளங்க காரணமாகியது. ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கண்டி பகுதியில் குடியானவர்களின் கிராமங்களுக்கு அண்மையில் உள்ள சேனை நிலங்களிலும், பயிற்செய்கை நடைபெறாத நிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.

பெருமளவு கோப்பி தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது தொழிலாளர்களும் பெருமளவில் தேவைபட்டனர். இதனை பூர்த்தி செய்யவே ஆரம்ப காலத்தில் கண்டிப்பகுதியில் குடியானவர்களை இராஜகாரிய சேவையில் இருந்து கோல்புறுக் ஆணைக்குழு விடுவித்ததாகவும் கூறப்பட்டது. எனினும், தோட்டங்களில் தங்கியிருந்து முழு நேரம் தொழில்புரிய குடியானவர்கள் விரும்பவில்லை. நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நிரந்தரமாக தொழில் புரிபவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை தமது கிராமங்களில் வாழ்வதனையே குடியானவர்கள் விரும்பினர். தமது கிராமங்களுக்கு அண்டைய நிலங்கள் பிரித்தானியாவினால் சுவீகரிக்கப்பட்டும், நில உரிமை ஒப்பந்த மூலமாக ஒரு ஏக்கர் 5 சிலின் காசுக்கு வாங்கியதை விரும்பவில்லை.

பிரித்தானிய ஆட்சியின் மேல் கொண்ட அதிருப்தியின் காரணமாக நாட்டில் பிரித்தானியாவின் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக பெருந்தோட்டங்களில் வேலை செய்த சிங்கள மக்களை பிரித்தானிய அதிகாரிகள் கடுமையாக நடத்தினர் என கூறப்படுகின்றது. இது போன்ற காரணங்களினால் பிரித்தானியர் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை கொண்டுவர நேர்ந்தது. இதற்கு வாய்ப்பாக தென்னிந்திய மாநிலங்களில் காணப்பட்ட பயிர்செய்கைக்கு காலநிலை சார்பற்ற மாவட்டங்களில் இருந்தும் வேண்டுமென்றே பஞ்சம் ஒன்றை உருவாக்கி இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மக்கள் இங்கு தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் கோப்பி தோட்டங்களில் பருவகால தொழிலாளர்களே முக்கியமாக இருந்ததாகவும், தேயிலை தொழில் போன்று வருடம் முழுவதும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாததாலும், காலத்திற்கு காலம் அவர்கள் இந்தியாவில் உள்ள தமது கிராமங்களுக்கு சென்று வந்தனர்.

1830ம் ஆண்டு முதல் 1923 வரை இந்தியாவில் இருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். எனினும், 1922ம் ஆண்டு இந்தியா அரசாங்கத்தின் 4ம் இலக்க குடியகல்வு சட்டம் முக்கியமானது, இதற்கமைய இலங்கையில் உருவான 1923 ம் ஆண்டு 1ம் இலக்க தொழிலாளர் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி இலங்கையில் ஒரு இந்திய ஏஜென்ட் நியமிக்கப்படுவார். அவரின்ன் மேற்பார்வையின் கீழ் ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு இலவசமாக தொழிலாளர்களை கொண்டு வரவும் திருப்பியனுப்பவும் ஏற்பாடுமேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இலங்கைக்கு வரும் இந்திய தொழிலாளர்களை திரட்ட, அவர்களை அழைத்துவர மற்றும் தொழிலாளர் உறவு தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் “கங்கானி” என்பவரே கோப்பி தோட்டக் காலம் தொடக்கம் முக்கியம் வகித்து வந்தனர். தோட்ட வேலைகளையும், சமயங்களில் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், நிர்வாகம் தொழிலாளர் இடையிலான உறவுகளையும் அவரே மேற்பார்வை செய்து வந்தார்.

இதனால், தோட்ட நிர்வாகம் முற்றாக கங்கானி மீதே தங்கியிருந்த நிலை காணப்பட்டது. நிர்வாகத்தை பொறுத்தமட்டில் தொழிலாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ளுதல், கடன்களை வசூலித்தல் போன்ற பொறுப்புக்களை ஒப்படைத்தல் வசதியாக இருந்திருக்கின்றது. ஏனெனில் இதற்கு தேவையான மொழி அறிவு, சமூக பழக்க வழக்கங்கள் பற்றிய போதுமான அறிவு ஆங்கிலேயரிடம் போதியளவு இருக்க்வில்லை.

அதே போல் கங்கானி திரட்டி வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முற்பண தொகை ஒன்றை பெற்றதோடு, தொழில் செய்யும் ஒவ்வொறு நாளுக்காகவும் கமிஷனாக 2 சதம் வாங்கப்பட்டது. இது பென்ஸ் எனப்பட்டது. பெரும்பாலும் திரட்டி வந்த தொழிலாளர்கள் இக்கங்கானியாரின் உறவினர்களாகவோ அல்லது ஊரார்களாகவோ இருந்தமையினால் மேற்கிந்திய தீவுகள், பீஜீ போன்ற நாடுகளுக்கு சென்ற தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டது போல் ஒப்பீட்டளவில் இலங்கைக்கு வந்தவர்கள் ஏமாற்றப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இவர்கள் இலங்கைக்கு வரும் பயணம் 1830 ம் ஆண்டுகளில் பாம்பன் தொடக்கம் மன்னார் வரை படகு சேவை மூலமாக வந்தனர். மன்னாரில் இருந்து மாத்தளைக்கு 150 மைல்கள் நடக்க வேண்டி இருந்தது. 1880 களில் மாத்தளை புகையிரத சேவை அமைக்கப்பட்டது. பணம் உள்ளவர்கள் புகையிரதம் மூலம் பயணம் செய்தார்கள். இதனை விட தென்னிந்திய தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வரை நீராவி படகு சேவையும் இருந்தது. இது வாரத்தில் 1 முறை மட்டுமே நடைப்பெற்றது. இதற்கு கட்டணம் 3 ரூபாவாகும். ஆனால், பாம்பன் தொடக்கம் மன்னார் வரையிலான பயணத்திற்கு 25 சதம் ஆகும். இவர்களின் பயணம் மிகவும் கடுமையானது தமது கிராமங்களில் இருந்து பாம்பன் வரையிலும் பின் மன்னாரில் இருந்து மலையக பிரதேசங்களுக்கு அதிகமானோர் கால் நடையாகவுமே (7-9 நாள்) பயணம் செய்தனர். இதன் போது வழியிலேயே காலரா, சின்னம்மை போன்ற நோய்கள் காரணமாகவும் மிருகங்கள் என்பனவற்றால் தொழிலாளர்கள் இறந்தனர். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விரும்பியோ, விரும்பாமலோதொழில் செய்ய இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இம்மக்கள்தான் இன்று இந்நாட்டின் உரிமகள் மறுக்கப்பட்ட பிரஜைகளாக உள்ளனர்.

ஆரம்பத்தில் மொத்த சனத்தொகையில் 12 வீதமாக இருந்த இந்திய வம்சாவளி மக்கள் இன்று 5.5 வீதமாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இலங்கையின் பாரிய பொருளாதார மாற்றத்திற்கும், இன்று ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பகுதியை பெற்றுள்ள பெருந்தோட்ட துறையை உருவாக்கி, இன்றும் அயராது உழகைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை கொண்டுள்ள மக்கள் தாம் வாழும் நாட்டின் பிரஜையாவதற்கும் கடுமையான போராட்டங்களை நடாத்தவேண்டியவர்களாக நிலை ஏற்பட்டுள்ளமை நாடறிந்த உண்மை.

1834 இல் இருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பாடுபட்டு மண்ணோடு மண்டவர் சந்ததியினருக்கு 1988ம் ஆண்டிலேயே இந்நாட்டு பிரஜைகள் என்ற உரிமை கிடைக்கப்பெற்ற போது எத்தனையோ தலைமுறைகள் மாற்றமடைந்த போதும் இன்றும் இந்திய வம்சாவளி மக்கள் என்று ஒரு இலச்சினையுடன் ஒதுக்கி வைத்தே பார்க்கும் ஒரு முறை இன்றும் உள்ளது.

இதில் மிகவும் கவலைக்குறிய விடயமென்னவெனில் இன்றைய தலைமுறை இந்தியாவிற்கு செல்லாத இந்தியாவுடன் எவ்வித உறவும் இல்லாதவர்களாக இருந்தாலும் இலங்கையில் இன்றும் நாம் இந்திய வம்சாவளி என்ற பெயரில் அழைக்கப்படுதல் கவலைக்குரியதே.

இந்தியவம்சாவளியினர் எந்த நோக்கத்திற்காக இங்கு வந்தாலும் வதியுமுரிமை பெற்றாலும் இன்றும் நாடற்றவர்களாகவே நாம் காணப்படுகின்றோம். மேலும், கூலி தொழில் செய்வதற்கு மட்டும் பொருத்தமான ஒரு தீண்டத்தகாத மக்களாகவே இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவரால் பார்க்கப்படுவதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

தொடரும் ....

நன்றி

மலையகத்தில் இருந்து ஈழ நாதத்திற்காக காண்டீபன்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.